search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் இருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அாிசி கடத்திய 2 பெண்கள் கைது
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, கைது செய்யப்பட்ட பெண்கள்

    திருப்பூரில் இருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அாிசி கடத்திய 2 பெண்கள் கைது

    • ரேஷன் அாிசி கடத்தப்படுவது சம்பந்தமாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
    • நடைமேடை எண் 1-ல் மூட்டைகளுடன் 2 பெண்கள் சந்தேகப்படும்படி இருந்தனர்

    திருப்பூர்:

    குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் கோவை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் திருப்பூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாா் மாவட்ட எல்லைக்குட்பட்ட பஸ் மற்றும் ரெயில் நிலைய பகுதிகளில் ரேஷன் அாிசி கடத்தப்படுவது சம்பந்தமாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் திருப்பூர் ரெயில் நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயில் நிலையத்தில் நடைேமடை எண் 1-ல் மூட்டைகளுடன் 2 பெண்கள் சந்தேகப்படும்படி இருந்தனர். அந்த மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் கோவை சித்தாபுதூரைச் சேர்ந்த அமுதா மற்றும் கோவை சிங்கநல்லூரை சேர்ந்த ராபியா என்பது தொியவந்தது.

    இருவரும் திருப்பூர் ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவுக்கு ரெயில் மூலம் கொண்டுசென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×