search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ பிடித்து எரிந்த தென்னை மரம்
    X

    தென்னை மரம் தீ பிடித்து எரியும் காட்சி.

    தீ பிடித்து எரிந்த தென்னை மரம்

    • பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயில் அதிகமாக இருந்தது.
    • சுமார் 30 நிமிடம் தொடர்ந்து பெய்த மழையால் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக மாறியது.

    பல்லடம்:

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயில் அதிகமாக இருந்தது. சில நேரங்களில் இது ஆகஸ்ட் மாதமா?, அல்லது ஏப்ரல்,மே மாதமா? என நினைக்கும் வகையில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பல்லடம் பகுதியில் இடி,மின்னலுடன் மழை பெய்தது.இந்த நிலையில் பல்லடம் பெரியார் நகரில் உள்ள சுந்தர்ராஜ் என்பவரது வீட்டில் இருந்த தென்னை மரத்தில் இடி தாக்கியதால் தீப்பிடித்து எரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தென்னை மரத்தில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் தென்னை மரம் தீயினால் முழுவதும் எரியாமல் தப்பியது. சுமார் 30 நிமிடம் தொடர்ந்து பெய்த மழையால் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக மாறியது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×