search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "festival"

    • பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று தான்.
    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும்.

    பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று தான்.

    இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும்

    பெண்கள் சகல தோஷங்களில் இருந்து விடுபட முடியும்.

    அதோடு அவர்களது மாங்கல்யம் பலம் பெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும்.

    நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள்.

    அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.

    • நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா.
    • அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா.

    "அரியும் அரனும் ஒன்றே" என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமதியம்மன்,

    அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் தவமிருந்தாள்.

    அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

    இந்த வைபவமே ஆடித்தபசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    திருமணம், மகப்பேறு வேண்டும் பெண்கள், ஆடித்தபசு திருநாளுக்கு முதல்நாள் நீராடி,

    ஈரப் புடவையுடன் கோவில் பிரகாரத்தில் படுத்து விடுவார்கள்.

    இரவு கனவில் அம்மன் அருள் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.

    • ஆடி, செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும்.
    • ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் ஒளவையார் விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும்.

    அதேபோன்று ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.

    கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும்,

    கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும், இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.

    வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து

    அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள்.

    ஆடி - செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

    • அறந்தாங்கி அருகே ரூ.45 லட்சத்தில் நலத்திட்ட பணிகள் தொடக்க விழா
    • அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

    அறந்தாங்கி,  

    தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு நலத் திட்டப் பணிகள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடை பெற்றது.

    விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் சரிதாமேகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா தொடங்கியது.
    • வருகிற 21 முதல் 24-ந்தேதி வரை மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்குபெறுவார்கள்.

    சிவகங்கை

    சிவகங்கையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா தொடங்கியது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 5500 பேர் பங்கு பெறுகின்றனர். நவம்பர் 3-ந் தேதி வரை மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுகின்றன. வட்டார அளவில் நடந்த கலைப் போட்டிகளில் 12 ஒன்றியங்களைச் சேர்ந்த 54,000 அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் ஒன்றிய அளவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைத்திறன் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மொத்தம் 188 போட்டிகள் நடைபெற உள்ளன. 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9-10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், பிளஸ்-1- பிளஸ் டூ மாணவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி, புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி, மன்னர் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மருது பாண்டியர் நகர் ரோஸ்லின் கல்லூரி ஆகிய 7 இடங்களில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நாலுகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பாக கிராமிய நடனமாடி பாராட்டு பெற்றனர்.

    போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் வரும் 21 முதல் 24-ந்தேதி வரை மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்குபெறுவார்கள்.

    • பத்ரகாளியம்மன் பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
    • மாணிக்கவேல் ராஜன் நன்றி கூறினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் மேல்நிலைப் பள்ளியின் 35-வது ஆண்டு விளையாட்டு விழா, டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி மாளிகை முன்பு நடந்தது. உறவின்முறை சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.

    மேல்நிலைப்பள்ளி செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர் சிவாஜி, சங்க பிரதிநிதி வைரமணி, பள்ளி முதல்வர் ரதி பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைவர் கரிகாலன் வரவேற்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன், மாவட்ட சிலம்ப கழக செயலாளர் மணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.

    தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டன. மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் மெட்ரிக் பள்ளி உறுப்பினர் மாணிக்கவேல் ராஜன் நன்றி கூறினார்.

    • கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும், கொடிக்கு பூஜைகள் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுனில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பா் உடனுறை காந்திமதி அம்பாள் கோவில் பழைமை வாய்ந்தது.

    சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதத்திலும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

    அதன் ஒரு நிகழ்வாக காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.

    இதனை முன்னிட்டு தங்க சப்பரத்தில் காந்திமதி அம்பாள் கொடிமரம் அருகில் எழுந்தருளினாா். கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும், கொடிக்கு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள கொடி மரத்தில் காலை 7.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    அதன் பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்னா் கொடிமரம் அலங்காிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 15 நாட்கள் நடை பெறும். திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு வேளைகளில் காந்திமதி அம்பாள் டவுனில் உள்ள 4 ரதவீதிகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றது.


    வருகிற 8-ந்தேதி அதாவது 11-ம் திருநாள் அன்று மதியம் 12 மணிக்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், அன்னை காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.

    அதன்பின் மறுநாள் 9-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடை பெறுகின்றது. அதனை தொடா்ந்து பகலில் பட்டின பிரவேசமும், பின்னா் 3 நாட்கள் மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெறுகிறது.

    முடிவாக வருகிற 12-ந்தேதியன்று சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினபிரவேச வீதிஉலா நடைபெறுகின்றது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் நிர்வாகத்தினா், உபய தாரா்கள் செய்து வருகின்றனா். 

    • அம்மனுக்கு நெற்கதிர்களை படைத்து சிறப்பு பூஜைகள்
    • ஆயிரக்கணக்கான பக்தா்கள் வேட்டைக்கொரு மகனை வழிபட்டனா்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் புத்தூா்வயல் பகுதியை சேர்ந்த பழங்குடி விவசாயிகள் ஐப்பசி மாதத்தில் விரதம் இருந்து புதிதாக விளைந்த நெற்கதிா்களை அறுவடை செய்து நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோவிலுக்கு எடுத்து வந்து சுவாமிக்கு படையலிட்டு, பின்னர் அங்கு உள்ள பக்தா்களுக்கு நெற்கதிரை பிரசாதமாக வழங்குவது வழக்கம். அவற்றை வீட்டின் பூஜைஅறையில் வைத்து பாதுகாத்தால் பஞ்சம் வராது, விளைச்சல் பெருகும் என்று ஐதீகம்.

    கூடலூர் நம்பாலக் கோட்டை வேட்டைக்கொரு மகன் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான புத்தரி திருவிழா தொடங்கியது. அப்போது விவசாயிகள் கடும் விரதமிருந்து வயற்காட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் அங்கு விளைந்து இருந்த முதல் நெற்பயிரை அறுவடை செய்தனர். தொடர்ந்து பாரம்பரிய இசையுடன் புனித நெற்கட்டு குவியல்கள், ஒற்றப்பாறை பகவதி அம்மன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு அம்மனுக்கு நெற்கதிர்களை படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பழங்குடி பெண்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து விவசாயிகள் நெற்கதிர் கட்டுகளை நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டுவந்தனர். அங்கு சுவாமிக்கு படையலிட்டு அறுவடை திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினா்.

    கூடலூர் பழங்குடி விவசாயிகளின் புத்தரி திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கா்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்தது வேட்டைக்கொரு மகனை வழிபட்டு சென்றனா்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அடுத்த மாதம் 2 திருவிழாக்கள் தொங்குகிறது.
    • ஒரே நாளில் 2 திருவிழாக்களின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெரு மானின் அறுபடை வீடு களில் முதல் படை வீடு என பெருமை பெற்றது. இங்கு கந்த சஷ்டி விழாவும், கார்த்திகை தீபத் திருவிழா வும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு 2 திருவிழாக்களும் அடுத்த மாதத்தில் வருகின்றன.

    கந்தசஷ்டி விழா வருகிற 13-ந் தேதி காப்புகட்டு தலுடன் தொடங்குகிறது. விழாவினை முன்னிட்டு மதுரை, மதுரையை சுற்றியுள்ள பகுதிகள், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்க ளைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக் கணக்கானோர் திருப்ப ரங்குன்றம் கோவிலில் தங்கி இருந்து கந்த சஷ்டி விரதம் அனுசரிப்பார்கள்.

    விழா நாளன்று சண்முகர் சன்னதியில் சண்முகர்-வள்ளி தெய்வானைக்கு காலை யிலும், மாலையிலும் சண்முக அர்ச்சனை நடைபெறும். தொடர்ந்து சண்முகர் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 17-ந் தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 18-ந் தேதி திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்கார லீலை நடைபெறும். 19-ந் தேதி காலையில் கந்த சஷ்டி தேரோட்டம் நடைபெறும். மாலையில் பாவாடை தரிசனம் நடைபெறும்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்கச் சப்ரத்திலும், மாலையில் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 25-ந் தேதி பட்டாபிஷேகம் நடை பெறும். இதில் சுப்ரமணிய சுவாமிக்கு கிரீடம் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி சிறப்பு பூஜை நடைபெறும். தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக 26-ந் தேதி காலையில் கார்த்திகை தேரோட்டம் நடைபெறும்.

    இதில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் வலம் வந்து சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மாலை 6 மணி அளவில் திருப்பரங்குன்றம் மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 27-ந் தேதி தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலை மையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா 13-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் 18-ந் தேதி கந்தசஷ்டி விழாவின் சூரசம்காரம் லீலை நடைபெறுகிறது. அன்றைய தினம் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது. ஒரே நாளில் 2 திருவிழாக்களின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருப்பரங்குன்றம் கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடைதிறப்பு நேரம் மாற்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று மாலை 7 மணிக்கு நடை சாத்தப்படு கிறது.

    இதுகுறித்து திருப்பரங் குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கம். இன்றைய தினம் நள்ளிரவு 1.05 முதல் 2.23 வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பரங்குன்றம் கோவில் நடையானது இரவு 7 மணிக்கே சாத்தப்படுகிறது. மீண்டும் வழக்கம்போல் நாளை காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான கலை திருவிழா
    • சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில், பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலை திருவிழாவினை சட்டத்து றை அமைச்சர் ரகுபதி மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது , தமிழ்நா டு முதல்-அமைச்சர் மா ணவ, மாணவிகள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கல்விக்கு முக்கி யத்துவம் கொடுப்பது மட்டுமல்லாமல் கலை திருவிழா விளையாட்டுகள் உள்ளிட்டவைகளிலும் மாணவ, மாணவிகள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற வகையில் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி களில் 6 முதல் 12 -ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. இவ்வாண்டும் 6 முதல் 12 -ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத் திருவி ழா நடத்தப்படுகிறது. கலைத் திருவிழா 2022-2023 -ம் கல்வியாண்டில் மாநில அளவிலான கலைத்தி ருவிழா போட்டிகளில் 61 மாணவ,மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தை பிடித்தனர். ஒரு கலையரசி பட்டத்தை விராலிமலை செரளப்பட்டி பள்ளி மாணவி ராஜஹரிணி பெற்றார். மேலும் நிகழாண்டில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வட்டார அளவில் 26,767 மாணவர்கள் பங்குபெற்று மாவட்ட அளவில் 6,721 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் கல்வியுடன் சேர்ந்து கலைகளிலும் தங்களது திறமைகளை காண்பித்து மாநில அளவி லான கலைத்திரு விழாவில் வெற்றி பெற்று புதுக்கோட்டை மா வட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    பின்னர் அமைச்சர் ரகுபதி கலைத் திருவிழாவிற்காக கற்பக விநாயகா அறக்கட்டளை சார்பில் ரூ .1 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யாவிடம் வழங்கினார். முன்னதாக இராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அழகாபுரி மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை எம். எல்.ஏ. சின்னத்துரை, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி, தமிழ்செல்வன், புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணை தலைவர் லியாகத் அலி,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) சிவகுமார், நகர்மன்ற உறுப்பினர் லதா கருணாநிதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (இடைநிலை), ராஜேஸ்வரி (அறந்தாங்கி), தாசில்தார் கவியரசன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    நவராத்திரி கொலு விழா

    கரூர்,  

    கருர் ஸ்ரீ சாராதா நிகேதன் மகளிர் கல்லூரி யில் கொலு விழா நடைபெற்றது.

    ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு புராண இதிகாச கருத்தை விளக்கும் வகையில் கொலு பொம்மைகள் வைக்கப்படும் அதே போல் இந்த வருடம் மகாபாரதத்தை உட்கருவாக கொண்டு அமைக்கப்பட்டது. கொலுவில் மஹாபாரதம் நிகழ்வுகள், மஹாபாரத்தில் உள்ள அறிவியல், போர் வியூகம், போரில் பயன்படுத்தப்பட்ட அக்ரோணிகளின் எண்ணிக்கை மேலும் பகவத்கீதையின் கருத்து க்கள் போன்றவை கொலு வில் இடம் பெற்றன.

    சைவ, வைணவ, தெய்வீ கக் கதைகளை மையமாக கொண்ட கொலு பொம்மை கள் ஒன்பது படிகளில் வைக்கப்பட்டது.

    வியாசர் சொல்ல விநாயகர் உருவம் மகாபாரதத்தை எழுதுவ தைப் போல ரங்கோலியில் வரையப்பட்டது.

    மேலும் 17 சக்தி பூஜை நடந்தது. அதில் சிறப்பு அழைப்பாளராக மதுரை விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிர மணியம் இப்பூஜையில் கலந்து கொண்டு மஹா பாரத்தில் திரௌபதியின் தைரியத்தையும் எடுத்து கூறினார்.

    கரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

    • கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில்ஊஞ்சல் உற்சவ விழா
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜகர்கள் செய்திருந்தனர்.

    பொன்னமராவதி, 

    கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் 51-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்றது. முதல் நாள் அம்மன் இராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 2ம் நாள் மீனாட்சி அலங்காரத்திலும், 3ம் நாள் சிவலிங்க பூஜை அலங்காரத்திலும் என அம்மனுக்கு தினம்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    விழாவையொட்டி நாள்தோறும் பக்தி இன்னிசை கச்சேரி நடை பெற்றது. விஜயதசமி நாளை யொட்டி அம்பு போடுதல் நிகழ்வு நடை பெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று புதன்கிழமை ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அபிஷேக, அலங்காரத்திற்குப்பின் அம்மன் மலர்களா லும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளி காட்சியளித்தார். விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா வையொட்டி நாதஸ்வர கச்சேரி நடை பெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜகர்கள் செய்திருந்தனர்.

    ×