search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "festival"

    • ரூ.86,200 மொய் பணம் வசூல்
    • திருக்கல்யாணத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

    வடவள்ளி,

    கோவை மேற்கு மலை தொடர்ச்சியில் மருதமலை முருகன் கோவில் உள்ளது. இது முருக பக்தர்களால் ஏழாவது படை வீடு என போற்றப்படுகிறது.

    இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரு கின்றனர். மருதமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 14-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

    கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான இன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடை பெற்றது. காலை 8.30.மணி அளவில் யாகசாலை கலசங்களில் உள்ள தீர்த்தங்களை கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    காலை 9 மணிமுதல் 10.30 மணி அளவில் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது வள்ளி மஞ்சள் பட்டு, தெய்வானை சிவப்பு பட்டு அணிந்திருந்தனர். சுப்பிரமணிய சுவாமி வெண்பட்டு உடுத்தி மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    அதன்பிறகு பக்தர்களின் மொய்ப்பணம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு மொய் வைத்தனர். அந்த வகையில் ஒட்டுமொத்தமாக ரூ.86,200 மொய்ப்பணம் வசூலானது.

    தொடர்ந்து பாத காணிக்கை செலுத்துதல் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் தம்பதி சமேதராக பல்லக்கில் வீதி உலா வந்தனர்.

    மருதமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி புதூரில் பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது.
    • திருவிழாவையொட்டி அம்மனுக்கு 3 நாட்களும் சிறுதானிய உணவு வகைகளை சமைத்து படைத்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி புதூரில் பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று இரவு பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இந்த திருவிழாவையொட்டி கூனவேலம்பட்டி புதூர், கூனவேலம்பட்டி, பாலப்பாளையம், ஆனைக்கட்டி பாளையம், குருக்கபுரம், ஆண்டகளூர்கேட், சக்தி நகர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை, நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 3 நாட்களும் அரிசி சோறு சாப்பிடவில்லை. தினை, கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானிய வகைகளைத் தான் சாப்பிட்டு வந்தனர்.

    கோவிலில் பொங்கல் வைத்த பெண்கள் வெள்ளை சேலை அணிந்து வந்து பொங்கல் வைத்தனர். திருவிழாவையொட்டி அம்மனுக்கு 3 நாட்களும் சிறுதானிய உணவு வகைகளை சமைத்து படைத்தனர்.

    பிரசித்தி பெற்ற இக்கோவில் திருவிழாவில் நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

    • விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்
    • 18-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது

    விராலிமலை,

    தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலும் ஒன்றாகும்.இங்கு அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்து அஷ்டமா சித்தி வழங்கி திருப்புகழ் பாடச் செய்த தலமாக விளங்கி வருகிறது. 

    திருவண்ணாமலைக்கு ஈடாக ஏராளமான ஞான சித்தர்கள் தவம் செய்த மலை, திருவாரூர் தட்சிணா மூர்த்தி அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம், ஜெனகர், செனந்தர், செனாதனர், செனக்குமாரர் நால்வருக்கும் தியானம் செய்த போது முருகனே தோன்றி அருள் தந்த திருத்தலம் என்ற பல்வேறு சிறப்புகளை கொண்டது இந்த கோவில்.

    அருணகிரிநாதரை முருகன் விராலிமலைக்கு வரச் சொல்லியதால் இங்கு அருணகிரி நாதர் வந்துள்ளார். வயலூரிலிருந்து கிளம்பிய அருணகிரிநாதர் முருகப்பெருமான் சொன்ன விராலிமலை எங்கிருக்கிறது என்று வழி தெரியாமல் தவிக்கவே வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி அழைத்து வந்தாராம்.

    இங்கு பலகாலம் தங்கியிருந்த அருணகிரி நாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இதன் பெருமைக்கு சான்று. மலைமேல் உள்ள சுப்பிமணியசுவாமி 6 முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்லித கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா, தை திருவிழா, கந்தசஷ்டி திருவிழா, பங்குனி உத்திர திருவிழா உட்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

    இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. முன்னதாக, காலையில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.

    அதனை தொடர்ந்து சுவாமி முன்பு உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியர்கள் ஓம்,வேல், சேவல் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றி வைத்து ரக்ஷாபந்தனம் என்ற காப்பு கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் பெற்று காப்பு கட்டி விரதத்தை தொடர்ந்தனர்.

    அதனை தொடர்ந்து தினமும்  காலையில் கேடயத்திலும் மற்றும் மாலையில் நாகம், பூதம் யானை, சிம்மம்  உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலாநடைபெறும்.

    வருகிற 16-ந் தேதி கஜமுக சூரன், 17-ந்தேதி சிம்மமுக சூரன் முருகனுடன் சூரன் போர் புரியும் நிகழ்வும் நடக்கிறது. தொடர்ந்து விழாவின் முக்திய நிகழ்ச்சியாக 18-ந் தேதி காலை பானுகோபன், மாலை 6 மணிக்கு சூரபத்பநாபன் வேடத்திலும் வந்து முருகனுடன் போர் புரியும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகிறது.

    சூரனை வதம் செய்த பின் முருகன் தங்க கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்திறார். இதையடுத்து 19-ந் தேதி மலையில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுதிறது. தொடர்ந்து 20-ந்தேதி திருக்கல்யாண ஊர்வலமும், 21-ந் தேதி ஏகாந்த சேவையுடன் கந்த சஷ்டி விமா நிறைவடைகிறது விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், சிவாச்சாரியார்கள், மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருதின்றனர்.

    • தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வர வாழ்த்துகிறேன்.
    • ஒளிர்வதுபோல உங்கள் வாழ்வு ஒளிரட்டும், மகிழ்ச்சி தங்கட்டும் என்று கூறி அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையை யொட்டி புதுவை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

    சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தை யும் மகிழ்ச்சியையும் கொண்டு வர வாழ்த்துகிறேன்.

    இந்த தீபாவளி கொண்டாட்டம் பாரத தேசத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதாக இருக்கட்டும். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த தீபாவளி பண்டிகை மதம், புவியியல் எல்லைகளை கடந்து பல்வேறு கலாச்சார, பாரம்பரிய மரபுகளை பின்னணியாக கொடாட மக்களை ஒன்றிணைக்கிறது.

    தேசத்தின் துடிப்பான பண்டிகைகளில் ஒன்றாக திகழும் இந்த தீபாவளி பண்டிகையின்போது உங்கள் அனைவரது இல்லங்களிலும் ஏற்றப்படும் தீபங்கள் ஒளிர்வதுபோல உங்கள் வாழ்வு ஒளிரட்டும், மகிழ்ச்சி தங்கட்டும் என்று கூறி அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இருள்நீக்கி ஒளியை ஏற்றிடும் நாளாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகவும், வேற்றுமை மறந்து ஒற்றுமை, சகோதரத்துவத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம். அனை வருக்கும் நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    தீபாவளி பண்டிகை நாள் மக்களுக்கு எல்லை யில்லாத மகிழ்ச்சியையும், வெற்றியையும், ஆரோக்கி யத்தையும் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டு கிறேன்.

    தீப ஒளி எனும் தீபாவளி திருநாள் அனைவர் வாழ்வும் வளர்ந்து மகிழ்வூட்ட வேண்டும். தீபங்கள் ஒளி வெள்ளத்தில் மூத்தோர்களின் வழியில், நன்மைகள் நிறைந்திட புதிய வழி பிறக்க தாங்கள் எல்லா வளமும் பெற இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    மக்கள் கொண்டாடும் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டா டும் அனைவருக்கும் என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இதுபோல் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வ கணபதி எம்.பி, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்தி சேகர், வையாபுரி மணி கண்டன், அனந்தராமன் பா.ம.க. அமைப்பாளர் கணபதி, அ.ம.மு.க. மாநில செயலாளர் எஸ்.டி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தியின் மனைவி விஜயலட்சுமி ஜெயமூர்த்தி, மக்கள் பாதுகாப்பு பேரி யக்கம் கராத்தே வளவன் ஆகியோரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • கந்தர்வகோட்டையில்விடுபட்ட பயனாளிகளுக்கு உரிமை தொகை வழங்கும் விழா
    • அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டையில் 2ம்- கட்டமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் சண்முகா திரையரங்க வளாகத்தில் மகளிர் உரிமைத் தொ கைக்கு மேல் முறையீடு செய்தவர்க ளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு மேல் முறையீடு செய்த குடும்ப தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கி விழா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை, கோட்டாட்சியர் முருகேசன் ,தாசில்தார் ராமசாமி ,தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், தமிழ் அய்யா, நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்தி ரன், ஒன்றிய குழு உறுப்பி னர் திருப்பதி, வைர க்கண்ணு, ஊராட்சி மன்ற தலை வர்கள் தமிழ்ச்செல்வி, ராணி முருகேசன், சிவரஞ்சனி சசிகுமார் ,இளைஞரணி அமைப்பா ளர் கலையரசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவியற்கள் கலந்துக்கொண்டனர்.
    • 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான புதுமை தொழில்நுட்ப விழா "டெக்னோவேஷன் 2023" என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவியற்கள் கலந்துக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மயிலம் பொறியியல் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் மருத்துவர். நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனர் செந்தில் சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இன் செயல் இயக்குனர் அருண்ராஜ் கலந்துக்கொண்டு இந்திய ஆட்சிப்பணி குறித்தும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்தும் விரிவாக பேசினார்.

    போட்டியில் சிறந்து விளங்கிய முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

    முடிவில் கணினி பொறியியல் துறைத் தலைவரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான பிரியாராதிகாதேவி நன்றி கூறினார்.

    • தமிழகம் முழுவதுமிருந்து 2000 விவசாயிகள் பங்கேற்பு.
    • விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற்றது.

    ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாதவா மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 2000 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். 

    நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் கலந்து கொண்டு காய்கறி சாகுபடி குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சி தொடர்பாக மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் அவர்கள் பேசுகையில் "இயற்கை முறையில் காய்கறிகளை விளைப்பது எப்படி? அதை மதிப்பு கூட்டுவது மற்றும் சந்தைப்படுத்துவது எப்படி" என்பது தொடர்பாக இந்த விழாவில் பேசப்பட்டுள்ளது.

    மேலும், ரசாயன விவசாயத்துக்கு நிகரான மகசூலை இயற்கை முறையில் எடுப்பது எப்படி என்பதை வெற்றி பெற்ற முன்னோடி விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    மேலும், இன்று ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருக்கும் ஏராளமான இளைஞர்கள் இயற்கை விவசாயத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆர்வம் இருக்கும் இளைஞர்கள் இயற்கை விவசாயியாக மாறும் வகையில், மூன்று மாத பயிற்சி ஒன்றை வடிவமைத்துள்ளோம். கோவையில் உள்ள ஈஷா மாதிரி விவசாய பண்ணையில் இந்த மூன்று மாத பயிற்சி நடைபெற இருக்கிறது. இயற்கை விவசாயத்தில் விருப்பம் உள்ள இளைஞர்கள் அங்கேயே தங்கி மூன்று மாதம் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்" என தெரிவித்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி .ராமர் பேசுகையில் "நான் கமுதியில் 30 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். பிரதான பயிராக மிளகாய் வற்றலை பயிரிட்டுள்ளேன். ஆண்டுக்கு 200 டன் மிளகாய் வற்றலை தரமான முறையில் உற்பத்தி செய்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனுக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்கிறேன். என்னை பார்த்து இன்று கிட்டதட்ட 400 விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்" எனக் கூறினார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் அவர்கள் நன்மை தரும் பூச்சிகள் மூலம் காய்கறி சாகுபடியை சிறப்பாக செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். பின்னர், பல்லடம் விவசாயி பொன்முத்து இயற்கை சந்தையை வெற்றிகரமாக உருவாக்கி நடத்துவது எப்படி என்பது குறித்து பேசினார். 

    அத்துடன், இந்த நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள் பலர் இயற்கை முறையில் உற்பத்தி செய்த பொருட்களை மதிப்புக் கூட்டி பொதுமக்களுக்காக விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதற்காக 40 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் போடப்பட்டு அதில் பாரம்பரிய அரிசி, சிறு தானியம், தேன், கை வினை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் நம் மரபு இசையை பேணி காக்க சவுண்ட் மணி அவர்கள் 80க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

    அதனை தொடர்ந்து வந்திருந்த அனைவருக்கும் படையல் சிவா குழுவினருடன் இணைந்து அடுப்பில்லாமல், எண்ணெய் இல்லாமல் ஆரோக்கியமான உணவு தயார் செய்து வழங்கப்பட்டது. இது மட்டுமின்றி பங்கேற்ற அனைவருக்கும் காய்கறி சாகுபடியை இயற்கை முறையில் செய்வது குறித்த கையேடும், பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற்றது.

    • ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம்.
    • கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் மூன்று நாட்கள் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும்.

    ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம்.

    இந்தத் திருநாளில் சுமங்கலி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம்,

    வெற்றிலை பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார்குடி ஸ்ரீராஜ கோபாலசாமி திருக்கோவில் மற்றும்

    திருவண்ணாமலை கோவில்களில் பத்து நாட்களும்,

    கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் மூன்று நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும்.

    ஆடிப்பூரத்தன்று அனைத்து ஆலயங்களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் சிறப்புற நடைபெறும்.

    இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், பிரசாதமாகத் தரப்படும் வளையலை பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால்,

    அங்கு சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகும், குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில்

    குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • ஆடி மாதம் முழுவதும் தினமும் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
    • லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள்.

    ஆடி மாதம் முழுவதும் பெண்கள் தினமும் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

    ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும்.

    பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு.

    எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன.

    திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி,

    மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட

    நல்ல கணவன் அமைவார்கள்.

    மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால்,

    குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

    • நதியைப் பெண்ணாக கருதி வணங்கும் திருநாள் ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுகிறது.
    • நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

    நதியைப் பெண்ணாக கருதி வணங்கும் திருநாள் ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடி மாதம் தொடங்கியதும் மழை பெய்து காவிரி முதலான நதிகளில் வெள்ளம் பெருகியோடும்.

    இதில் ஆடி மாதத்தின், 18-ம் நாள் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது.

    அன்று பெண்கள் தம் குடும்த்தார் மற்றும் உறவினர்களுடன் புத்தாடை அணிந்து,

    சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று,

    நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

    இந்த தினத்தில் பெண்களால் செய்யப்படும் மங்கல காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.

    • இந்த மூன்றும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும்.
    • பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் பெறும். அவை:

    தை மாதம் வரும் தை கிருத்திகை,

    கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை

    மற்றும் ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை

    இந்த மூன்றும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும்.

    ஆடிக்கிருத்திகை தினத்தன்று பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று

    புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள்.

    குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    • பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று தான்.
    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும்.

    பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று தான்.

    இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும்

    பெண்கள் சகல தோஷங்களில் இருந்து விடுபட முடியும்.

    அதோடு அவர்களது மாங்கல்யம் பலம் பெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும்.

    நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள்.

    அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.

    ×