என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.45 லட்சத்தில் நலத்திட்ட பணிகள் தொடக்க விழா
- அறந்தாங்கி அருகே ரூ.45 லட்சத்தில் நலத்திட்ட பணிகள் தொடக்க விழா
- அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
அறந்தாங்கி,
தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு நலத் திட்டப் பணிகள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடை பெற்றது.
விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் சரிதாமேகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






