search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான கலைத்திருவிழா
    X

    கிராமிய நடனமாடி அசத்திய நாலுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள்.

    மாவட்ட அளவிலான கலைத்திருவிழா

    • சிவகங்கையில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா தொடங்கியது.
    • வருகிற 21 முதல் 24-ந்தேதி வரை மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்குபெறுவார்கள்.

    சிவகங்கை

    சிவகங்கையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா தொடங்கியது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 5500 பேர் பங்கு பெறுகின்றனர். நவம்பர் 3-ந் தேதி வரை மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுகின்றன. வட்டார அளவில் நடந்த கலைப் போட்டிகளில் 12 ஒன்றியங்களைச் சேர்ந்த 54,000 அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் ஒன்றிய அளவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைத்திறன் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மொத்தம் 188 போட்டிகள் நடைபெற உள்ளன. 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9-10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், பிளஸ்-1- பிளஸ் டூ மாணவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி, புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி, மன்னர் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மருது பாண்டியர் நகர் ரோஸ்லின் கல்லூரி ஆகிய 7 இடங்களில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நாலுகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பாக கிராமிய நடனமாடி பாராட்டு பெற்றனர்.

    போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் வரும் 21 முதல் 24-ந்தேதி வரை மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்குபெறுவார்கள்.

    Next Story
    ×