search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாதி"

    • சுவாதி நட்சத்திரத்தன்று முழு நெல்லிக்கனி சாற்றினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பானது.
    • இத்தலத்தில் குடும்ப ஒற்றுமைக்கு வேண்டி, அங்கபிரதட்சிணம் செய்வது சிறப்பாகும்.

    தமிழ்நாட்டில் அமைந்துள்ள 27 நட்சத்திரங்களுக்கான விசேஷ திருக்கோவில்களில் தாத்திரீஸ்வரர் ஆலயம், சுவாதி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.

    சுவாதி நட்சத்திர நாளில் பூவுலகில் யோக சக்திகள் மிகுந்திருக்கும்.

    சிரசாசனம், குக்குடாசனம், புஜங்காசனம் போன்ற யோக நிலைகளுக்கு சுவாதி நட்சத்திர தினம் மிகவும் ஏற்றதாகும்.

    சுவாதி நட்சத்திரத்தன்று முழு நெல்லிக்கனி சாற்றினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பானது.

    அதேபோல் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து கண்ணாடி வளையல் சாற்றி, வளையல்களை கல்யாணமான சுமங்கலி மற்றும் கன்னிப்பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், சிறிய காணிக்கை சேர்த்து தருவதன் மூலம், திருமணம் ஆக காலதாமதமாகும் ஆண், பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

    இத்தலத்தில் குடும்ப ஒற்றுமைக்கு வேண்டி, அங்கபிரதட்சிணம் செய்வது சிறப்பாகும்.

    பெரியோர்களின் விருப்ப மின்றி திருமணம் செய்தவர்கள் அவர்களின் ஆசி பெறும் பொருட்டு இத்தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர்.

    மேலும் சுவாதி நட்சத்திரத்தன்று ஏற்றப்படும் ஒரு சிறிய அகல் விளக்கு தீபமும் பிரபஞ்ச அளவில் அபூர்வ ஜோதி சக்திகளை அளிக்க வல்லதாகும்.

    எனவே சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தோர் அடிக்கடி சென்று வழிபடவேண்டிய தலம் இந்த திருமணம் திருத்தலம்!

    இத்தலத்து இறைவனையும் இறைவியையும் குபேரன் வலதுகால் கட்டை விரலில் மட்டும் நின்று பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்து நாகலிங்க மலர்களால் பூஜித்து, நெல்லிச் சாற்றினால் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார்.

    பித்ருக்கள், தம் சந்ததியினர் உதவவேண்டியவர்களுக்கு உதவி செய்யாமல் விடுவதால் அதனால் ஏற்படக்கூடிய தோஷத்தை அடைகின்றனர்.

    அதனால் பித்ருக்களும் சுவாதி நட்சத்திர நாளில் ஸ்தூல, சூட்சும வடிவங்களில் இந்த சித்துக்காடு தலத்தில் தீப வழிபாடு செய்து பிராயசித்தம் அடைவதாக ஆலய வரலாறு தெரிவிக்கிறது.

    நமசிவாய மந்திரத்தில் வகாரத்தில் சுவாதி என்ற புனித சொல் அடங்கியிருக்கிறது.

    சுந்தரராஜர், வாசுதேவர், திரிவிக்ரமன் மூன்று பேரிடம் இருக்கும் பீஜாட்சர சக்திகள் சுவாதி என்னும் சொல்லில் நிறைந்திருக்கிறது.

    அதனால் தான் சுவாதி நட்சத்திரக்காரர்கள் சிவன், விஷ்ணு இணைந்து அருள்பாலிக்கும் இத்தலத்துக்கு வந்து வழிபடுவது சிறப்பு என்கிறார்கள்.

    • பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று தான்.
    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும்.

    பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று தான்.

    இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும்

    பெண்கள் சகல தோஷங்களில் இருந்து விடுபட முடியும்.

    அதோடு அவர்களது மாங்கல்யம் பலம் பெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும்.

    நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள்.

    அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.

    • ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரர் குருபூஜை விழா நடந்தது.
    • கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று சுந்தரர் குரு பூஜை சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    அதன்படி நேற்று ஆடி சுவாதியை முன்னிட்டு இரவு சுந்தரர் குரு பூஜை விழா நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து சுந்தர சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    பின்னர் கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுந்தரரை வழிப்பட்டனர்.

    • தமிழில் பல படங்களில் நடித்தவர் சுவாதி.
    • இவர் 2018-ல் திருமணம் செய்து கொண்டார்.

    தமிழில் சுப்பிரமணியபுரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் பாடலில் சுவாதியின் நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, எட்சன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.


    இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்தார். 2018-ல் சுவாதிக்கும், கேரளாவை சேர்ந்த விமானி விகாஸ் என்பவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கணவருடன் வாழ்ந்து வந்தார்.


    திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் நடிகை சுவாதி தனது சமூக வலைதளத்தில் இருந்து கணவர் விகாஸுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கினார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை சுவாதி கணவர் விகாஸுடன் இருந்து விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகை சுவாதி கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
    • தவறான சிகிச்சை காரணமாக கன்னட நடிகையின் முகம் பரிதாப நிலையில் உள்ளது.

    பெங்களூர் ஜே.பி.நகரில் வசித்து வருபவர் நடிகை சுவாதி சதீஷ். இவர் கன்னடத்தில் ஒருசில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு பல் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

    அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மருந்துக்கு பதிலாக ஒரு ஊசியை கொடுத்து சுவாதியை அதை செலுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவரின் அறிவுறுத்தலின்படி நடிகை சுவாதி அந்த ஊசியை செலுத்தி உள்ளார். இதன்பின்னர், சுவாதிக்கு தாடை உள்பட முகத்தில் வலி ஏற்பட்டதுடன் முகம் நன்றாக வீங்கி முகத்தின் அமைப்பு மாறி உள்ளது.




    இதையடுத்து அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை தொடர்பு கொண்டு கேட்டபோது முக வீக்கம் விரைவில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது வரை சுவாதிக்கு முகவீக்கம் சரியாகவில்லை. மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டாலும் யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை என்று நடிகை சுவாதி குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அவர் கடந்த 20 நாட்களாக வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×