search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siththar"

    • இந்த தளத்தில் திருமண பரிகார பூஜை செய்து கொண்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
    • இத்தகைய பொருட்கள் மூலம் மிக எளிதாக இந்த பரிகார பூஜையை செய்யலாம்.

    சித்தர்காடு திருமணம் ஊரில் உள்ள தாத்தீரிஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் திருமண பரிகார பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது.

    இந்த தளத்தில் திருமண பரிகார பூஜை செய்து கொண்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இதனால்தான் இந்த தலத்தை மிகச்சிறந்த பரிகார தலமாக நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    இந்த தலத்தில் திருமண பரிகாரம் செய்வதற்கு என்று சில நெறிமுறைகள் இருப்பதாக ஆலயத்தில் பூஜை செய்யும் பிரதான குருக்களில் ஒருவரான குமரன் குருக்கள் தெரிவித்தார்.

    நீண்ட நாட்களாக திருமண தடை இருப்பவர்கள் அல்லது உடனடியாக திருமணம் நடைபெற வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் இந்த தலத்தில் உரிய பரிகார பூஜையை செய்ய வேண்டும்.

    யாருக்கு திருமணம் நடைபெற வேண்டுமோ அவரது ஜென்ம நட்சத்திர தினத்தன்று இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும்.

    போகும்போது வீட்டில் இருந்தே நெல்லிச்சாறு எடுத்துச்செல்ல வேண்டும்.

    நெல்லிக்காய் வாங்கி அதை நன்கு அரைத்து அதில் இருந்து சாறு எடுத்து செல்ல வேண்டும்.

    குறைந்தபட்சம் 2 லிட்டர் நெல்லிச்சாறு எடுத்துக்கொண்டு செல்வது நல்லது.

    2 லிட்டர் நெல்லிச்சாறு இருந்தால்தான் தாத்தீரிஸ்வரருக்கு அபிஷேகம் செய்வதற்கு சரியாக இருக்கும்.

    நெல்லிச்சாறுடன் பால், பன்னீரும் வாங்கிச்செல்ல வேண்டும். இந்த 3 பொருட்களாலும் அபிஷேகங்கள் செய்ய வேண்டும்.

    வசதி வாய்ப்பு இருப்பவர்கள் 11 வகை அல்லது 21 வகை பொருட்கள் வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்யலாம்.

    குறைந்தபட்சம் நல்லெண்ணைய், சீயக்காய், கதம்ப பொடி, மஞ்சள்பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், தேன், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களை பயன்படுத்தி அபிஷேகம் செய்வது நல்லது.

    ஆனால் இத்தனை பொருட்களையும் அபிஷேகத்துக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    நெல்லிச்சாறு, பால், பன்னீர் ஆகிய மூன்றும் இருந்தாலே போதுமானது.

    என்றாலும், மனதிருப்திக்காக அதிக பொருட்களுடன் அபிஷேகங்கள் செய்யலாம்.

    இன்னும் வசதி இருப்பவர்கள் வஸ்திரம் வாங்கி கொடுக்கலாம்.

    அதேபோன்று இந்த தலத்தில் உள்ள பூங்குழலி அம்பாளுக்கும் அபிஷேகங்கள் செய்ய வேண்டும்.

    இதற்கு மஞ்சள்தூள், பால், பன்னீர் கொண்டு செல்ல வேண்டும்.

    அதோடு தாலிச்சரடு, பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் கண்ணாடி வளையல், பிளவுஸ் பிட் கொண்டு செல்ல வேண்டும்.

    வசதி இருப்பவர்கள் அம்பாளுக்கு மஞ்சள், பச்சை, மெரூன் கலரில் புடவை எடுத்து சாத்தலாம்.

    6 கஜம் புடவை வாங்க வேண்டும். அதேபோன்று தாத்தீரிஸ்வரருக்கு 9-5 முழம் வேட்டி வாங்கி கொடுக்க வேண்டும்.

    மேலும் அர்ச்சணை செய்வதற்கு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, ஊதுவர்த்தி ஆகியவையும் கொண்டு செல்ல வேண்டும்.

    2 செட் அர்ச்சணை பொருட்கள் இருக்க வேண்டும்.

    இத்தகைய பொருட்கள் மூலம் மிக எளிதாக இந்த பரிகார பூஜையை செய்யலாம்.

    யாருக்கு திருமணம் நடைபெற வேண்டுமோ அவரது பிறந்த நட்சத்திர தினத்தன்று இந்த அபிஷேக ஆராதனைகள் செய்வதுதான் சிறந்தது. அர்ச்சணை செய்து வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

    ஒவ்வொருவரது ஜென்ம நட்சத்திரம் மாறுபடும் என்பதால் ஆலய குருக்களிடம் முன்கூட்டியே நேரத்தை கேட்டுக்கொண்டு செல்வது நல்லது.

    • எல்லோருக்கும் பொதுவாக பிறப்பின்மையே தலையாய வரமாக இருக்கும்.
    • சிவனைப் பற்றினாலேயன்றி உய்வதற்கு வேறு வழி கிடையாது.

    எல்லோருக்கும் பொதுவாக பிறப்பின்மையே தலையாய வரமாக இருக்கும்.

    ஏனென்றால் பூவுலகத்தில் படும் துன்பங்களைக் கண்டு கடவுளே இனி எனக்கு பிறவியே வேண்டாம் என்று முறையிடுபவர்கள்தான் அதிகம்.

    பிறப்பும், இறப்பும் அற்ற ஒருவனால் மட்டுமே, மற்ற உயிர்களின் பிறப்பறுக்க முடியும்.

    அப்படிப்பட்ட பிறப்பறுக்கக்கூடிய ஒருவனே நம் சிவபெருமான் ஆவான்.

    சிவபெருமானிடம் வேண்டுவது எல்லாம் எப்பிறப்பும் உய்யும் வழியாக, இப்பிறப்பில் அடிமைப்பட்டு அவனுக்கே ஆளாகி, பிறப்பறுக்க வேண்டுவது ஒன்றே ஆகும்.

    நாம் செய்யும் நல்வினை, தீவினை காரணமாக நமக்கு இப்பிறவியில் முத்தி கிட்டலாம்.

    இப்பிறவியில் பிறப்பறுக்க வேண்டுவது அல்லாமல் இனி எப்பிறவி வந்தாலும், அப்பிறவியிலும் பிறப்பறுக்க வேண்டுவது ஒன்றே முத்திக்கு வழியாகும்.

    சிவனைப் பற்றினாலேயன்றி உய்வதற்கு வேறு வழி கிடையாது.

    அவனே அனைத்திற்கும், முதலும் முடிவுமாய், முடிவும் முதலுமாய் விளங்குகின்றான்.

    அடியார்களின் வினைகளை அகற்றுவதற்காக ஆண்டவன் திரிசூலத்தை ஏந்திக்கொண்டு இருக்கிறான்.

    இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகிய முச்சக்திகளும், மூவிலைச் சூலமாகும்.

    முன்பிறவியில் செய்த நன்மைகள் காரணமாக, ஒவ்வொரு பிறப்பிலும் சிறிது சிறிதாக அருள் பெற்று ஞானியர் நிலையினை அடைந்து பக்குவமடைய அவனுக்கு எத்தனையோ பிறவிகள் தேவைப்படலாம்.

    அடியார்களின் வினைகளை அகற்றுவதற்காக ஆண்டவன் திரிசூலத்தை ஏந்திக் கொண்டு இருக்கிறான்.

    இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகிய முச்சக்திகளும், மூவிலைச் சூலமாகும்.

    காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களையும் மூவிலைச் சூலத்தால் நீக்கி அடியார்களை ஆட்கொள்வான்.

    எனவே ஈசனிடம் தஞ்சம் புகுந்து அவன் அருளைப் பெற்று பயன்பெற வேண்டும்.

    சமய குரவர்களும், சைவ சமய அருளாளர்களும், அடியார்களும் ஓதி உணர்ந்து பேரின்பம் அடைந்தது நமசிவாய எனும் ஐந்தெழுத்தாகும்.

    அனைவரும் இந்த ஐந்தெழுத்தாகிய பஞ்சாக்சரத்தையே தெப்பமாகக் கொண்டு பிறவிக் கடலைக் கடந்து பேரின்பத்தில் திளைத்து முத்தி பெற்றிருக்கின்றனர்.

    ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருள் முறைப்படி அமைந்துள்ளது.

    சிவன்-சி, அருள்-வா, ஆவி-ய, திரோம்-ந, மலம்-ம.

    "சிவயநம" என்னும் சொல்லுக்கு முறையாக, உய்த்துணர்தல், சிறப்பு, வனப்பு, யாப்பு, நடப்பு, மறைப்பு என்பதாகும்.

    சி-சிறப்பு, வ-வனப்பு, ய-யாப்பு, ந-நடப்பு, ம-மறைப்பு.

    ஐந்தெழுத்தை ஆர்வமுடனும், அன்புடனும் ஓதி உய்வீர் என்று முன்னோர்கள் உலக மக்களுக்கு உணர்த்திச் சென்றுள்ளனர்.

    'சிவசிவ என்கிலர் தீவினை யாளர்

    சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

    சிவசிவ என்றிடத் தேவரு மாவர்

    சிவசிவ என்னச் சிவகதி தானே' என்கிறார் திருமூலர்.

    இது உலகில் உள்ள ஏனைய மந்திரத்திற்கெல்லாம் தாயாக உள்ளது.

    பிறப்பும்-இறப்பும், வாழ்வும்-தாழ்வும், இன்பமும்-துன்பமும் யாவும் மாயமே.

    அவை நிலையற்றவை என்ற நல்லுணர்வுடையவர்களே.

    'பிறவியின் நோக்கம் சிவனடி சேரலே' என்று குறிக்கொண்டு அதற்கான நற்செயல்களை மேற்கொண்டு கடவுள் நெறியில் செயல்படுவார்கள்.

    • சித்தர்காடு சிவாலயத்தில் வீரபத்திரருக்கு அரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
    • அதன்படி பாண்டிய மன்னன் விரதம் இருந்து கோவில் கட்டும் பணியை மேற்கொண்டார்.

    சித்தர்காடு சிவாலயத்தில் வீரபத்திரருக்கு அரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

    பொதுவாக சிவாலயங்களில் வீரபத்திரரை காண முடியாது.

    ஆனால் தமிழகத்தில் எந்த தலத்திலும் இல்லாத வகையில் இங்கு மட்டும் வீரபத்திரருக்கு முதன்மை இடம் கொடுத்துள்ளனர்.

    இந்த ஆலயத்தை பாண்டிய மன்னான ஜடாவர்ம சுந்தரபாண்டியன் கட்டத் தொடங்கிய போது ஏராளமான இடையூறுகள் ஏற்பட்டன.

    ஆனால் கட்ட முடியவில்லை. அப்போது வீரபத்திரருக்கு விரதம் இருந்து பூஜை செய்தால்தான் கோவில் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தனர்.

    அதன்படி பாண்டிய மன்னன் விரதம் இருந்து கோவில் கட்டும் பணியை மேற்கொண்டார்.

    அதனால்தான் வீரபத்திரருக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

    • தாத்ரீஸ்வரர் ஆலயத்திலும் கொடி மரம் உள்ளது.
    • ஆதிகாலத்தில் இந்த தலத்தில் மிக பிரமாண்டமாக பிரமோற்சவம் நடந்துள்ளது.

    ஒரு ஆலயத்தில் கொடி மரம் இருந்தால் அந்த ஆலயம் அனைத்து வகை ஆகம பூஜைகளையும் செய்யும் சிறப்புடையது என்று அர்த்தமாகும்.

    தாத்ரீஸ்வரர் ஆலயத்திலும் கொடி மரம் உள்ளது.

    ஆனால் பிரமோற்சவம் மட்டும் ஏனோ நடைபெறாமல் உள்ளது.

    ஆதிகாலத்தில் இந்த தலத்தில் மிக பிரமாண்டமாக பிரமோற்சவம் நடந்துள்ளது.

    இடைப்பட்ட காலத்தில் அதற்கு தடை ஏற்பட்டுள்ளது.

    இன்று வரை அந்த தடை நீடித்தபடி உள்ளது.

    மீண்டும் பிரமோற்சவம் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என்பது ஏராளமான பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

    • காவடியின் இரு பக்கமும் வெள்ளி சொம்புகள் கட்டி தொங்க விடப்பட்டு இருக்கும்.
    • அன்று காலை 10 மணிக்கு முருகருக்கு பாலாபிஷேகம் செய்யப்படும்.

    சித்தர்காடு தலத்தில் தாத்ரீஸ்வரருக்கு குமரன் குருக்களும், விஸ்வநாதன் சிவாச்சாரியரும் 26வது தலைமுறையாக பூஜைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    அதற்கேற்ப தாத்ரீஸ்வரர் அந்த பரம்பரைக்கு ஆண் வாரிசு வழங்கி உள்ளார்.

    ஒருதடவை ஆண் குழந்தை பிறக்காத நிலை இருந்தது.

    இதையடுத்து குருக்களின் முன்னோர்கள் தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் பால் காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்வதாக வேண்டிக் கொண்டனர்.

    இதன் மூலம் குருக்கள் குடும்பத்துக்கு ஆண் வாரிசு கிடைத்தது.

    இதையடுத்து தாத்ரீஸ்வரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தை மாதம் பூசம் நட்சத்திரத் தினத்தன்று பிரமாண்டமான காவடி செய்து வேண்டுதலை நிறை வேற்றினார்கள்.

    அன்று முதல் இன்று வரை தை பூசம் காவடி நடந்து வருகிறது.

    அன்றைய தினம் காலை 7 மணிக்கு குருக்கள் காவடியுடன் மாட வீதி சுற்றி வருவார்.

    காவடியின் இரு பக்கமும் வெள்ளி சொம்புகள் கட்டி தொங்க விடப்பட்டு இருக்கும். மத்தியில் வெள்ளி வேல் இருக்கும்.

    குழந்தை இல்லாத தம்பதியர் அந்த இரு சொம்புகளிலும் பால் விட்டு மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் போதும் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    அன்று காலை 10 மணிக்கு முருகருக்கு பாலாபிஷேகம் செய்யப்படும்.

    • சுவாதி நட்சத்திரத்தன்று முழு நெல்லிக்கனி சாற்றினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பானது.
    • இத்தலத்தில் குடும்ப ஒற்றுமைக்கு வேண்டி, அங்கபிரதட்சிணம் செய்வது சிறப்பாகும்.

    தமிழ்நாட்டில் அமைந்துள்ள 27 நட்சத்திரங்களுக்கான விசேஷ திருக்கோவில்களில் தாத்திரீஸ்வரர் ஆலயம், சுவாதி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.

    சுவாதி நட்சத்திர நாளில் பூவுலகில் யோக சக்திகள் மிகுந்திருக்கும்.

    சிரசாசனம், குக்குடாசனம், புஜங்காசனம் போன்ற யோக நிலைகளுக்கு சுவாதி நட்சத்திர தினம் மிகவும் ஏற்றதாகும்.

    சுவாதி நட்சத்திரத்தன்று முழு நெல்லிக்கனி சாற்றினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பானது.

    அதேபோல் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து கண்ணாடி வளையல் சாற்றி, வளையல்களை கல்யாணமான சுமங்கலி மற்றும் கன்னிப்பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், சிறிய காணிக்கை சேர்த்து தருவதன் மூலம், திருமணம் ஆக காலதாமதமாகும் ஆண், பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

    இத்தலத்தில் குடும்ப ஒற்றுமைக்கு வேண்டி, அங்கபிரதட்சிணம் செய்வது சிறப்பாகும்.

    பெரியோர்களின் விருப்ப மின்றி திருமணம் செய்தவர்கள் அவர்களின் ஆசி பெறும் பொருட்டு இத்தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர்.

    மேலும் சுவாதி நட்சத்திரத்தன்று ஏற்றப்படும் ஒரு சிறிய அகல் விளக்கு தீபமும் பிரபஞ்ச அளவில் அபூர்வ ஜோதி சக்திகளை அளிக்க வல்லதாகும்.

    எனவே சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தோர் அடிக்கடி சென்று வழிபடவேண்டிய தலம் இந்த திருமணம் திருத்தலம்!

    இத்தலத்து இறைவனையும் இறைவியையும் குபேரன் வலதுகால் கட்டை விரலில் மட்டும் நின்று பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்து நாகலிங்க மலர்களால் பூஜித்து, நெல்லிச் சாற்றினால் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார்.

    பித்ருக்கள், தம் சந்ததியினர் உதவவேண்டியவர்களுக்கு உதவி செய்யாமல் விடுவதால் அதனால் ஏற்படக்கூடிய தோஷத்தை அடைகின்றனர்.

    அதனால் பித்ருக்களும் சுவாதி நட்சத்திர நாளில் ஸ்தூல, சூட்சும வடிவங்களில் இந்த சித்துக்காடு தலத்தில் தீப வழிபாடு செய்து பிராயசித்தம் அடைவதாக ஆலய வரலாறு தெரிவிக்கிறது.

    நமசிவாய மந்திரத்தில் வகாரத்தில் சுவாதி என்ற புனித சொல் அடங்கியிருக்கிறது.

    சுந்தரராஜர், வாசுதேவர், திரிவிக்ரமன் மூன்று பேரிடம் இருக்கும் பீஜாட்சர சக்திகள் சுவாதி என்னும் சொல்லில் நிறைந்திருக்கிறது.

    அதனால் தான் சுவாதி நட்சத்திரக்காரர்கள் சிவன், விஷ்ணு இணைந்து அருள்பாலிக்கும் இத்தலத்துக்கு வந்து வழிபடுவது சிறப்பு என்கிறார்கள்.

    • குழந்தை பாக்கியம் தருவதில் முதன்மை கடவுளாக, உரிய கடவுளாக முருகப்பெருமான் கருதப்படுகிறார்.
    • முருகப்பெருமானுடன் மனது ஒன்ற வேண்டும் அதுதான் முக்கியம்.

    குழந்தை பாக்கியம் வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.

    போகாத ஆஸ்பத்திரி இல்லை, போகாத கோவில் இல்லை என்று அவர்கள் மத்தியில் மிகுந்த சலிப்பு இருக்கும்.

    ஆனால் ஆலய வழிபாடு செய்தாலும் முறைப்படி செய்தோமா? என்று யோசிக்க வேண்டும்.

    குழந்தை பாக்கியம் தருவதில் முதன்மை கடவுளாக, உரிய கடவுளாக முருகப்பெருமான் கருதப்படுகிறார்.

    ஜாதக ரீதியில் குழந்தை பாக்கியம் தருபவர் முருகன்தான்.

    சித்தர்காடு தலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் குழந்தை பாக்கியத்திற்காக முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

    இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தம்பதிகளாக வரவேண்டும்.

    பசும்பால், பன்னீர், செவ்வரளி பூக்கள் கொண்டு வரவேண்டும்.

    பால் அரை லிட்டர், பன்னீர் தேவையான அளவு, நிறைய செவ்வரளி பூக்கள் எடுத்து வரலாம்.

    வசதி வாய்ப்பு இருப்பவர்கள் 2 லிட்டர் பால் வாங்கி கொடுக்கலாம்.

    இன்னும் வசதி இருப்பவர்கள் சர்க்கரை பொங்கல் அல்லது கேசரி நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

    விருப்பம் இருப்பவர்கள் வஸ்திரம் எடுத்தும் முருகப்பெருமானுக்கு அணிவித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

    முருகப்பெருமானுடன் மனது ஒன்ற வேண்டும் அதுதான் முக்கியம்.

    செவ்வரளி பூ வாங்கும்போது ரத்த சிவப்பில் உள்ள பூக்களை வாங்க வேண்டும்.

    சுமார் ஒருமணி நேரம் இந்த பரிகார பூஜை நடத்தப்படும். மறக்காமல் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம் போன்றவையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

    • பாண்டிய மன்னர்கள் காலத் தில் ஹரிசரணாலய நல்லூர் என்ற பெயரால் வழங்கப்பட்டது.
    • இம்மன்னன் “கோவில் பொன் வேய்ந்த பெருமான்” எனும் சிறப்பு விருதினை பெற்றவன்.

    பழைய காலத்தில் சித்தர் பெருமக்களால் சிறிய அளவில் இந்த ஆலயம் கட்டப்பட்டது என்ற செவிவழிச் செய்தி உள்ளது.

    இந்த ஆலயம் பல்லவர்கள் காலத்தில் 34 கோட்டங்காளாக பிரிக்கப்பட்ட தொண்டை நாட்டில் புலியூர் கோட்டத்தை சேர்ந்த பிரதேசமாக இருந்தது.

    பாண்டிய மன்னர்கள் காலத் தில் ஹரிசரணாலய நல்லூர் என்ற பெயரால் வழங்கப்பட்டது.

    இத்திருத்தலம் பின்னாளில் திருமணம் என்று அழைக்கப்பட்ட பின்னரே சித்துக்காடு, சித்தர்காடு என்று அழைக்கப்பட்டது.

    தற்போது திருமணம் கிராமம் என்றே அழைக்கப்பட்டு வருகின்றது.

    சித்தர்களால் ஆதி காலத்தில் எழுப்பப்பெற்ற இந்த ஆலயம் பாண்டிய மன்னனான முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியனால் கற்றளியால் கட்டப்பட்டது.

    கி.பி. 1251 முதல் கி.பி. 1271ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவன்.

    என்றும் கி.பி. 1271ம் ஆண்டு இவன் இறைவன் திருவடியை சேர்ந்தான்.

    இந்த பாண்டிய மன்னன் எம் மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர் என சிறப்பிக்கப்பெற்றவன்.

    இம்மன்னன் சேர வேந்தர்களையும் சோழ வேந்தர்களையும் போசள மன்னர்களையும் போரில் புறமுதுகிட்டு ஓட செய்தவன்.

    மேலும் வாணர்களது நாட்டையும், கொங்கு நாட்டையும் கைக் கொண்டவன்.

    போரில் பல வெற்றிகளைக் கொண்ட சடையவர்மன் சுந்தர பாண்டியன் அநேக திருக்கோவில்களுக்கு இறையிலியாக நிலங்களையும், கோவில் பூஜைகள் எவ்வித தடங்கலும் இன்றி நடைபெறுவதற்கான வழிவகைகளையும் செய்தவன்.

    இம்மன்னன் ஸ்ரீரங்கத்துக்கு சென்று திருமாலை வணங்கி கோவிலையும் பொன் வேய்ந்து முடிசூடிக் கொண்டதோடு பல துலாபர தானங்களும் செய்தான்.

    ஸ்ரீரங்கத்துக்கு இம்மன்னன் செய்த திருப் பணிகளும், விட்ட நிவந்தங்களும், அளித்த அணிகலன்களும் பலவாகும்.

    எனவே இம்மன்னன் "கோவில் பொன் வேய்ந்த பெருமான்" எனும் சிறப்பு விருதினை பெற்றவன்.

    இதேபோன்று திருவானைக்கால் திருக்கோவிலுக்கும் இவன் சேர மன்னனை வென்று வாகை சூடியவன்.

    இந்த ஆலய இறைவனை வணங்கி "சேரனை வென்றான் திருநாள்" ஈன்ற விழாவையும் நடத்தி உள்ளான்.

    இந்த சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள திருபுட்குழி திருமால் கோவிலில் திருப்பணிகள் செய்ததை கண்ட புலவர் ஒருவர் இவன்மீது ஒரு புகழ் பாடல் ஒன்றை புனைந்து பாடினார்.

    இவ்வேந்தன் சமயம் பாராட்டாது சிவனார் ஆலயங்களையும், திருமால் ஆலயங்களையும் புதிதாக எழுப்பிய சிறப்பு கொண்டவன்.

    இந்த சித்தர் காடு எனும் ஊரில் உள்ள சுந்தர ராஜ பெருமாள் கோவிலும், தாத்ரீஸ்வரர் கோவிலும் கட்டப்பட்டது.

    இதனை இங்குள்ள பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டுக்களால் அறியலாம்.

    • திருவாதிரையன்று, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
    • இந்த அன்னைக்கு குங்குமம், மஞ்சள், வளையல் அணிவித்துவழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும்.

    ஆடல் வல்லானை நமசிவாய என்னும் ஐந்தெழுத்தால் வணங்க எல்லா வல்லமைகளும், யோக சித்திகளும் கைவரப் பெறும்.

    இந்த அருட்சக்தி 'சர்வாதம் யோகப் பிரதாயினி' என்று ரிஷிகளால் கூறப்படுகிறது.

    இத்தகைய சிறப்புடைய நடராஜருக்கு சென்னைக்கு மேற்கே 30 கி.மீ. தூரத்தில் இருக்கும் 'சித்துக்காடு' என்ற சிவத்தலத்தில் ஆருத்ரா அன்று திருமண வைபவம் நடப்பது, வேறு எந்த ஆலயத்திலும் காணப்படாத சிறப்பு.

    பொதுவாக சிவாலயங்களில் நடராஜர், உற்சவராக இருப்பதையும் அவருக்கு ஆருத்ரா தரிசனம் நடப்பதையும்தான் எல்லோரும் அறிவார்கள்.

    மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர ஆருத்ரா விழாவின் முதல் இரவில் நடராஜர், சிவகாமி அம்மையார் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோருக்கு இரவு 10 மணியில் இருந்து அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

    இதன் பின்னர் மறுநாள் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளாக நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் திருமண வைபவம் மாணிக்கவாசகர் முன்னிலையில் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றது.

    இதன்பின் இம்மூவரும் வீதிஉலா வருவார்கள்.

    பிறகு காலை 10 மணியளவில் ராஜகோபுரம் முன்பாக திருவெம்பாவைப் பாடல்கள் பாடப் பெற்று, மூன்று முறை பார்வேட்டை நடைபெறும்.

    இவ்விழாவினைக் காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    இத்தகைய திருமணமும் விழாவும் வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு ஆகும்.

    இங்குள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் முகப்பு மண்டபத்தூணில் புடைப்புச் சிற்பமாக 'கருடக் கொடி சித்தர்' எழுந்தருளியுள்ளார்!

    இவர் கண் கோளாறுகளை நீக்க வல்லவர் என்பது ஐதீகம்! எனவே இவரை வழிபட எண்ணற்ற பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இத்தலத்தில் இருக்கும் அம்பாளுக்குப் பூங்குழலி அம்மன் என்று பெயர்.

    இந்த அன்னைக்கு குங்குமம், மஞ்சள், வளையல் அணிவித்துவழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும்.

    சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி ஆருத்ரா, ஆவணி, புரட்டாசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி என ஆண் டுக்கு ஆறுமுறை நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகம் இத்தலத்தில் நடை பெறுகின்றது.

    மார்கழியில் நடராஜருக்கு 10 நாள் விழா நடக்கும்.

    திருவாதிரையன்று, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    இந்த திருமணத்தைக் கண்டவர் களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும் என்பதும், தம்பதியர் கருத்தொற்றுமையுடன் வாழ்வர் என்பதும் நம்பிக்கை.

    • தாண்டவ மூர்த்தி என்றே இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு. இவரது தாண்டவங்கள் பல.
    • அதாவது சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுகிரகம் என்பன பஞ்ச கிருத்தியங்கள் ஆகும்.

    அண்ட சராசரங்களின் இயக்கங்கள் யாவும் ஆடல்வல்லான் என்றழைக்கப்படும் நடராஜப் பெருமானின் திரு நடனமே.

    தாண்டவ மூர்த்தி என்றே இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு. இவரது தாண்டவங்கள் பல.

    தாண்டவ மூர்த்தியான நடராஜப் பெருமானின் திருவடிவம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

    விரிந்து படர்ந்த திருச்சடை, நான்கு திருக் கரங்கள், வலது மேற் கையில் டமருகம் எனப்படும் உடுக்கை, இடது மேற்கையில் எரியும் நெருப்பு, வலது கீழ்க் கை அபய முத்திரை, இடது கீழ்க்கை தூக்கிய திருவடியை காட்டியவாறு உருவகிக்கப்பட்டுள்ளது.

    இடது காலைத் தூக்கி, வலது காலை ஊன்றி, அதன் கீழ் முயலகன் என்னும் அசுரனை மிதித்தபடி காணப்படுகிறார்.

    இப்பெருமானுக்கு கால்கள் இரண்டு என்றாலும் எண்ணற்ற கைகள் உடையவராக ஆகமங்களில் கூறப்பட்டுள்ளார்.

    51 அட்சரங்களே திருவாசியாகவும், திருவைந் தெழுந்தான பஞ்சாட்சரமே திருவுருவாகவும், பராசக்தியே திருச்சிற்றம்பலமாகவும் விளங்குகின்றன.

    உடுக்கை சிருஷ்டி என்ற படைத்தலையும் எரிகின்ற நெருப்பு சம்ஹாரம் என்ற அழித்தலையும், அபயகரம் அருளுதலையும், ஊன்றிய திருவடி மறைத் தலையம், குஞ்சித பாதம் என்ற தூக்கிய திருவடி காத்தலையும் தத்துவார்த்தமாகக் குறிக்கின்றன.

    இவரே ஐந்தொழில்களையும் செய்யும் தாண்டவ பெருமானாக விளங்குகிறார்.

    இந்த ஐந்தொழில்களையே 'பஞ்ச கிருத்தியங்கள்' என்றழைப்பர்.

    அதாவது சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுகிரகம் என்பன பஞ்ச கிருத்தியங்கள் ஆகும்.

    இந்தப் பஞ்சக் கிருத்தியங்களையும், நமசிவாய என்னும் ஐந்து எழுத்துக்களையும் ரூபமாகக் கொண்டு இவ்வுலக உயிர்களுக்கு அருள்கின்றார்.

    நமசிவாய என்பதில் இறைவனின் திருவடி நகார அட்சரமாகவும், வயிறு மகா அட்சரமாகவும், தோல் சிகார அட்சரமாகவம், திருமுகம் வகார அட்சரமாகவும், திருவடி யகார அட்சரமாகவும் சேர்ந்து 'நமசிவாய' என்னும் ரூபாமாய்த் திகழ்கிறது.

    • எப்போதும் இவர் சுலோகங்களை சொல்லிக் கொண்டே இருப்பார் என்று குறிப்புகள் உள்ளன.
    • கருட கொடி சித்தருக்கு சந்தன அபிஷேகமும் செய்யப்படுவது உண்டு.

    இவர் கருட கொடியை உடல் முழுக்க சுற்றி உள்ளார்.

    எப்போதும் இவர் சுலோகங்களை சொல்லிக் கொண்டே இருப்பார் என்று குறிப்புகள் உள்ளன.

    ராமாயண காலத்திலேயே இவர் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. ராமர் எங்கெல்லாம் சென்றரோ அங்கெல்லாம் உடன் சென்றாக கூறப்படுகிறது.

    ராமரை பாதுகாக்கும் வகையில் இவர் மூலிகை பந்தல் அமைப்பதுண்டு என குறிப்புகள் உள்ளன.

    கருட கொடி என்பது கருடனுடன் தொடர்புடையது.

    திருஷ்டியை நீக்குவதில் கருட கொடிக்கு அதிக ஆற்றல் உண்டு என்பார்கள்.

    மேலும் கருட கொடிக்கு மந்திர சக்திகளை கிரகிக்கும் ஆற்றலும் உண்டு.

    கருட கொடியை பயன்படுத்தி பல்வேறு நோய்களை தீர்த்துக் கொள்ளலாம்.

    இத்தகைய சிறப்புடைய கருட கொடியை இந்த சித்தர் மிக அதிகளவில் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

    வேறு எந்த சித்தரும் இவர் அளவுக்கு கருட கொடியை பயன்படுத்தியது இல்லை.

    கருட கொடி சித்தரை வழிபட்டால் எத்தகைய பெரிய கண் நோயை குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஆண்டாள் சன்னதியில் உள்ள கருட கொடி சித்தரின் சிலை மீது ரோஸ் தண்ணீரை அபிஷேகம் செய்து அதை கண்களில் ஒற்றி கொண்டால் பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

    கருட கொடி சித்தருக்கு சந்தன அபிஷேகமும் செய்யப்படுவது உண்டு.

    அந்த சந்தனத்தை கண்களை மூடி புருவத்தின் மீது வைத்துக் கொண்டாலும் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

    • சித்தர்காடு சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் பிரகாரத்தில் தனியாக ஆண்டாள் சன்னதி உள்ளது.
    • கருடனை நீண்ட நாட்களாக வழிபட்டு பலன் பெற்றார்.

    சித்தர்காடு சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் பிரகாரத்தில் தனியாக ஆண்டாள் சன்னதி உள்ளது.

    அந்த ஆண்டாள் சன்னதியில் இருக்கும் முன்பக்க மண்டபத்தின் ஒரு தூண்ணில் கருடகொடி சித்தரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் கருடகொடி சித்தரின் அருள் அலைகள் இருப்பதாக நம்புகிறார்கள்.

    கருடகொடி சித்தர் பல்வேறு ஆற்றல்களை பெற்றவர்.

    மூலிகை மருத்துவத்தில் மிகுந்த திறமை பெற்றிருந்தார்.

    கருடனை நீண்ட நாட்களாக வழிபட்டு பலன் பெற்றார்.

    இதனால்தான் அவருக்கு கருடகொடி சித்தர் பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

    இந்தத் தலத்தில்தான் கருடக்கொடி சித்தர் பல காலம் வசித்து, இங்குள்ள திருக்குளத்திலேயே ஜீவசமாதி அடைந்தார் என்பர்.

    இவர் பலருக்குக் கண் நோய் போக்கியவர்.

    பார்வையற்றவர்களுக்குப் பார்வை அளித்த மகான்.

    இவர் இந்த ஆலயத்தின் ஆண்டாள் சந்நிதி எதிரேயுள்ள தூணில் சாந்நித்யத்துடன் எழுந்தருளியுள்ளார்.

    இங்கு நெய்தீபம் ஏற்றி வலம் வந்து வழிபட, கண்நோய் குணமாகும்.

    முன்மண்டபத் தூண்களில் நரசிம்மரின் உருவங்கள்.

    யோக நரசிம்மராக, உக்கிர நரசிம்மராக, ஸ்ரீலட்சுமி நரசிம்மராக கலையழகு மிகக் காட்சி தரும்.

    ஆண்டாள் சன்னதியில் அவரது சிற்பம் இருப்பதால் அந்த பகுதியில் அவர் ஜீவசமாதி அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

    அந்த தூணில் உள்ள சிற்பத்தில் கருடகொடி சித்தர் ஒருகையில் கமண்டலமும், மற்றொரு கையில் கருட கொடியையும் வைத்தபடி காட்சி தருகிறார்.

    ×