search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sitharkadu"

    • மயிலாடுதுறையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது.
    • இதே போன்று ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம் ஒன்று சென்னையிலும் இருக்கிறது.

    சென்னையில் சித்தர்காடு இந்த ஊர் பெயரைக் கேட்டதும் பெரும்பாலானவர்களுக்கு, மயிலாடுதுறை மேற்கே காவிரி தென் கீழ்க்கரையின் ஓரம் அமையப் பெற்றுள்ள சித்தர்காடு எனும் ஊர்தான் நினைவுக்கு வரும்.

    மயிலாடுதுறையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது.

    இந்த ஊரில் சிற்றம்பல நாடிகள் என்பவர் தம் சீடர்களுடன் தங்கி இருந்தார்.

    அவர் சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று தமது 62 சித்தர்களுடன் ஒரே இடத்தில் ஜீவ சமாதி அடைந்தார்.

    அந்த இடத்தில் "ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் கோவில்" கட்டப்பட்டுள்ளது.

    63 சித்தர்களும் ஒரே இடத்தில் ஐக்கியமானதைக் குறிக்கும் வகையில் கருவறை சுற்றுச்சுவரில் 63 லிங்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இதே போன்று ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம் ஒன்று சென்னையிலும் இருக்கிறது.

    இந்த இடத்தையும் சித்தர்காடு என்றே அழைக்கின்றனர்.

    பூந்தமல்லி - பட்டாபிராம் இடையில் பைபாஸ் சாலையையொட்டிய பகுதியில் இந்த புண்ணிய தலம் அமைந்துள்ளது.

    தற்போது இந்த ஊர் சித்துக்காடு என்றும் திருமணம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஊரில் அடங்கியுள்ள சித்தர்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி இருப்பதால் சமீப ஆண்டுகளாக இந்த ஊர், பக்தர்கள் தேடி வரும் தலமாக மாறியுள்ளது.

    ×