search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Family Dispute"

    • குழந்தைகள் அழுதுகொண்டே இருந்த நிலையில் கவுரியை காணாததால் அருகில் இருந்தவர்கள் அவரை தேடினர்.
    • இளம்பெண் தற்கொலை குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை கிராமத்திற்கு உட்பட்ட கோமுககவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 25). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கவுரி (22) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

    கவுரிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலையிலும் அதே போல் தனது மனைவியை சத்தம் போட்டு விட்டு சிவக்குமார் வெளியே சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த கவுரி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் அழுதுகொண்டே இருந்த நிலையில் கவுரியை காணாததால் அருகில் இருந்தவர்கள் அவரை தேடினர்.

    அப்போது அவர் கிணற்றில் மிதந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடலை இறந்த நிலையில் மீட்டனர். இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கவுரியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்த உள்ளார். தாய் இறந்த நிலையில் இரட்டைக்குழந்தைகள் பாலுக்காக தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    • தான் இறந்து போனால் குழந்தைகள் அனாதையாகி விடும் என கருதி அவர் குழந்தைகளையும் கொல்ல முடிவு செய்தார்.
    • தங்கமணி தனது இரு குழந்தைகளையும் ஒரு துண்டு மூலமாக இடுப்பில் சுற்றி கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார்.

    மணப்பாறை:

    திருச்சி மணப்பாறை ஆண்டிய கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 30) இவர் சேலத்தில் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தங்கமணி 26 என்ற மனைவியும் சரோனிகா (6), கிருத்திகா (3), லஜீத் ஒன்று ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். தங்கமணி தனது குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் வசித்து வந்தார். வாரம் ஓரிரு முறை சரவணன் ஊருக்கு வந்து மனைவி குழந்தைகளை கவனித்து வந்தார். வழக்கம்போல் சரவணன் சேலத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். மனைவி குழந்தைகள் அவரது பெற்றோர் வீட்டில் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மாமனார் (சரவணனின் தந்தை) மருமகளை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தங்கமணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    தான் இறந்து போனால் குழந்தைகள் அனாதையாகி விடும் என கருதி அவர் குழந்தைகளையும் கொல்ல முடிவு செய்தார். ஆனால் மூத்த மகள் சரோனிகாவுக்கு ஆறு வயதாகி விட்டதால் விவரம் தெரியும் என நினைத்து அவரை விட்டு விட்டார். பின்னர் எதுவும் தெரியாத கிருத்திகா மற்றும் ஒரு வயது குழந்தை லஜீத் ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார். இது பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சேலத்தில் இருக்கும் அவரது கணவருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சரவணன் பதறி அடித்துக் கொண்டு ஊர் திரும்பினார். பின்னர் நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தங்கமணி மற்றும் குழந்தைகளை சல்லடை போட்டு தேடினர். ஆனால் எங்கும் அவரைக் காணக் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் தங்கமணி மற்றும் அவரது குழந்தைகள் கிருத்திகா, லஜீத் ஆகியோர் பிணமாக மிதந்தனர். இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீசார் சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் போராடி தாய் மற்றும் 2 குழந்தைகளையும் பிணமாக மீட்டனர். முன்னதாக தங்கமணி தனது இரு குழந்தைகளையும் ஒரு துண்டு மூலமாக இடுப்பில் சுற்றி கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். இதில் கிருத்திகா இடுப்பில் இருந்து நழுவி கீழே விழுந்துள்ளார். ஒரு வயது குழந்தை இடுப்பில் கட்டியப்படியே பிணமாக கிடந்தது. குடும்பத் தகராறில் இரு குழந்தைகளையும் இடுப்பில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டிற்கு வந்த முரளி கிருஷ்ணா தனது மகள்கள் இருவருக்கும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடிக்க வைத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா, பாப்டிஸ்ட் பாம் பகுதியை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. இவரது மனைவி பவானி. தம்பதியின் 2 மகள்கள் பள்ளியில் படித்து வந்தனர்.

    மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட முரளி கிருஷ்ணா பவானியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து பவானியை வெட்ட முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பவானி வீட்டில் இருந்து தெருவில் ஓடினார். மனைவியை விடாமல் துரத்தி சென்ற முரளி கிருஷ்ணா அவரை சரமாரியாக வெட்டினார்.

    பின்னர் வீட்டிற்கு வந்த முரளி கிருஷ்ணா தனது மகள்கள் இருவருக்கும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடிக்க வைத்தார்.

    இதில் இளைய மகள் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதனைக் கண்ட முரளி கிருஷ்ணா வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் பவானி மற்றும் மூத்த மகளை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு முரளி கிருஷ்ணா மற்றும் அவரது இளைய மகள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்துநகை கடந்த 30-ந்தேதி விடுதியில் சீலிங்பேனில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முத்துநகை (33), இவர் சேலம் வீரபாண்டியார் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வார்டனாக பணியாற்றி வந்தார்.

    இவரும் குறிச்சி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து சேலம் சின்னதிருப்பதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். சந்தோஷமாக மண வாழ்க்கையை தொடங்கிய அவர்கள் வாழ்க்கையில் 2 மாதங்களில் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் முத்து நகையின் பெற்றோர் வேலையை விட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முத்துநகை கடந்த 30-ந்தேதி விடுதியில் சீலிங்பேனில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த விடுதி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    பின்னர் தூக்கில் தொங்கிய அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு முத்து நகை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி பிணவறையில் திரண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.

    முத்துநகையின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. தற்கொலைக்கான காரணம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 11-ந்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் என்கிற உமர் முகமது(43). வக்கீல். இவரது மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் உமர் முகமது மற்றும் அவரது மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 11ந்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த ர் உமர் முகமது தனது மனைவியை சரிமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் ஹாஜா ஜெய்னுல் அரபா மயங்கினார். இதைத் தொடர்ந்து உமர் முகமது தலைமறைவாகி விட்டார்.

    மறுநாள் ஹாஜா ஜெய்னுல் அரபாவிடமிருந்து போன் ஏதும் வராததை கண்ட அவரது பெற்றோர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டிற்குள் படுகாயத்து டன் ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.

    இதனையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் உமர் முகமது மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஹாஜா ஜெய்னுல் அரபா மற்றும் அவரது இரு குழந்தைகள் மற்றும் அவரது உறவினர்கள் நேற்றிரவு முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு அமர்ந்து உமர் முகமதுவை கைது செய்யகோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏறபட்டது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் இரவுக்குள் கைது செய்கிறோம் என வாக்குறுதியளித்தார்.

    இதனையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    பின்னர் போலீசார் நேற்றிரவு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் சப் இன்ஸ்பெ க்டர்கள் பாலசுப்பிரமணியம் முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய போலீசார் மன்னார்குடியில் தலைமறைவாக இருந்த உமர் முகமதுவை கைது செய்து அழைத்து வந்து திருத்துறைப்பூண்டி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தாய் அழுது கொண்டிருப்பதை கண்ட பிரேம்குமாருக்கு தந்தை மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது.
    • மணல்மேல்குடி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணல்மேல் குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்( வயது 46) மீன்பிடி தொழிலாளி.

    இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரேம்குமார் (23) சிவகங்கை மாவட்டத்தில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளான வேல்முருகன் அவ்வப்போது குடிபோதையில் அவரது மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனை அவரது மகன்கள் கண்டித்தனர்.

    இருந்த போதிலும் வேல்முருகன் குடிபோதையில் மனைவியிடம் ரகளை செய்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம் போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த வேல்முருகன் மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் அவரை தாக்கினார். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் கதறி அழுதார். தாய் அழுது கொண்டிருப்பதை கண்ட பிரேம்குமாருக்கு தந்தை மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து தந்தையின் வயிற்றுப் பகுதியில் ஓங்கி குத்தினார். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    பின்னர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு வேல்முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த மணல்மேல்குடி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தாயை தாக்கியதால் தந்தையை மகன் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவன், மனைவி இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்
    • இதனால் மனமுடைந்த தாட்சாயினி தற்கொலை செய்து கொண்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கூறைநாடு வடக்கு சாலியத்தெருவை சேர்ந்தவர் குமரன் மனைவி தாட்சாயினி (வயது 43). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    குமரனுக்கும், தாட்சாயணிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன், மனைவி இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாட்சாயினி புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட அவரது கணவர் குமரன், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாட்சாயினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக தாட்சாயினியின் சகோதரி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த யோகாம்பாள் (41) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 மகள்களின் கழுத்தை அறுத்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ஜோமோனின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 40). இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஜோமோன், தனது மகள்கள் அனன்யா (13), அனாமிகா (10), அமேயா (7) ஆகிய 3 பேரையும் பராமரித்து வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவு ஜோமோன் தனது 3 மகள்களின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயன்றுள்ளார். பின்பு அவர், வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தையால் கழுத்து அறுக்கப்பட்ட சிறுமிகள் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.

    இதனை அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இன்று காலை பார்த்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளையும் மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    ஜோமோனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர், எதற்காக 3 குழந்தைகளையும் கழுத்து அறுத்து கொல்ல முயன்று தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அது தொடர்பாக ஜோமோனின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் 3 பேரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். 3 மகள்களின் கழுத்தை அறுத்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோட்டயத்தை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
    • ஒரே நேரத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் சோகத்துடன் கதறி அழுதது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அப்பிபட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கும் ஐஸ்வர்யா (24) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிரபாகரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினர். இதைப் பார்த்ததும் அவரது 2 குழந்தைகளும் கதறி அழுதனர்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஓடைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஒரே நேரத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் சோகத்துடன் கதறி அழுதது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    • கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் பிணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் அடுத்த தேயநகர் காலனி சேர்ந்தவர் பிரவீன் (வயது 50). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி லாவண்யா (42). டெய்லர் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு கல்யாணி என்ற மகள் உள்ளார். இவர் கரீம் நகரில் உள்ள விடுதியில் தங்கி இருந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    பிரவீன் குடும்பத்தினர் கீழ்த்தளத்திலும், அவரது பெற்றோர் முதல் தளத்திலும் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பிரவீன் வீட்டில் இருந்த கல்லை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் லாவண்யா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வீட்டில் மறைத்து வைத்தார்.

    நேற்று முன்தினம் காலை கரீம் நகர் வந்த பிரவீன் விடுதியில் தங்கி இருந்த மகளை பார்த்துவிட்டு நலம் விசாரித்தார். பின்னர் வீட்டிற்கு வந்த பிரவீன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தற்கொலைக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதினார்.

    அந்த கடிதத்தில் எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களது சடலங்களை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குங்கள். சடங்குகள் எதுவும் செய்ய வேண்டாம். யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது. பிறப்பைப் போலவே இறப்பும் இயற்கையானது என கூறியிருந்தார்.

    இதனையடுத்து பிரவீன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பிரவீனின் நண்பர்கள் பலமுறை போன் செய்தோம் பிரவீன் எடுக்காததால் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது மனைவி ரத்த வெள்ளத்திலும், பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பிரவீனின் நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் பிணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப தகராறு
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    திருச்சி மாவட்டம், டால்மியாபுரத்தை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 53) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக வந்து ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரத்தில் சர்ச் அருகில் உள்ள குடியிருப்பில் தங்கி வசித்து வந்தார்.

    தன்ராஜ் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்தார். நேற்று முன்தினம் தன்ராஜ் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் வீட்டை விட்டு வெளியேறி அக்ராவரம் அருகே மூடப்பட்டிருந்த தொழிற்சாலைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்த அப்பகுதியினர் சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் தன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
    • மனவேதனை அடைந்த திவ்யா விஷம் குடித்து மயங்கினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாட்டாணிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (35).

    கூலித்தொழிலாளி. இவரது மனைவி திவ்யா ( வயது 27).இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது.

    6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த திவ்யா விஷம் குடித்து மயங்கினார்.

    அவரை உறவினர்கள் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி திவ்யா நேற்று உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து திவ்யாவின் தாய் சுமதி, பேராவூரணி போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×