search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்பதகராறு"

    • குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 11-ந்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் என்கிற உமர் முகமது(43). வக்கீல். இவரது மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் உமர் முகமது மற்றும் அவரது மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 11ந்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த ர் உமர் முகமது தனது மனைவியை சரிமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் ஹாஜா ஜெய்னுல் அரபா மயங்கினார். இதைத் தொடர்ந்து உமர் முகமது தலைமறைவாகி விட்டார்.

    மறுநாள் ஹாஜா ஜெய்னுல் அரபாவிடமிருந்து போன் ஏதும் வராததை கண்ட அவரது பெற்றோர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டிற்குள் படுகாயத்து டன் ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.

    இதனையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் உமர் முகமது மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஹாஜா ஜெய்னுல் அரபா மற்றும் அவரது இரு குழந்தைகள் மற்றும் அவரது உறவினர்கள் நேற்றிரவு முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு அமர்ந்து உமர் முகமதுவை கைது செய்யகோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏறபட்டது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் இரவுக்குள் கைது செய்கிறோம் என வாக்குறுதியளித்தார்.

    இதனையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    பின்னர் போலீசார் நேற்றிரவு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் சப் இன்ஸ்பெ க்டர்கள் பாலசுப்பிரமணியம் முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய போலீசார் மன்னார்குடியில் தலைமறைவாக இருந்த உமர் முகமதுவை கைது செய்து அழைத்து வந்து திருத்துறைப்பூண்டி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவன், மனைவி இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்
    • இதனால் மனமுடைந்த தாட்சாயினி தற்கொலை செய்து கொண்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கூறைநாடு வடக்கு சாலியத்தெருவை சேர்ந்தவர் குமரன் மனைவி தாட்சாயினி (வயது 43). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    குமரனுக்கும், தாட்சாயணிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன், மனைவி இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாட்சாயினி புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட அவரது கணவர் குமரன், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாட்சாயினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக தாட்சாயினியின் சகோதரி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த யோகாம்பாள் (41) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×