search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    • கணவன், மனைவி இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்
    • இதனால் மனமுடைந்த தாட்சாயினி தற்கொலை செய்து கொண்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கூறைநாடு வடக்கு சாலியத்தெருவை சேர்ந்தவர் குமரன் மனைவி தாட்சாயினி (வயது 43). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    குமரனுக்கும், தாட்சாயணிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன், மனைவி இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாட்சாயினி புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட அவரது கணவர் குமரன், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாட்சாயினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக தாட்சாயினியின் சகோதரி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த யோகாம்பாள் (41) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×