என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மணப்பாறை அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலை
- தான் இறந்து போனால் குழந்தைகள் அனாதையாகி விடும் என கருதி அவர் குழந்தைகளையும் கொல்ல முடிவு செய்தார்.
- தங்கமணி தனது இரு குழந்தைகளையும் ஒரு துண்டு மூலமாக இடுப்பில் சுற்றி கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார்.
மணப்பாறை:
திருச்சி மணப்பாறை ஆண்டிய கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 30) இவர் சேலத்தில் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தங்கமணி 26 என்ற மனைவியும் சரோனிகா (6), கிருத்திகா (3), லஜீத் ஒன்று ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். தங்கமணி தனது குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் வசித்து வந்தார். வாரம் ஓரிரு முறை சரவணன் ஊருக்கு வந்து மனைவி குழந்தைகளை கவனித்து வந்தார். வழக்கம்போல் சரவணன் சேலத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். மனைவி குழந்தைகள் அவரது பெற்றோர் வீட்டில் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மாமனார் (சரவணனின் தந்தை) மருமகளை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தங்கமணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
தான் இறந்து போனால் குழந்தைகள் அனாதையாகி விடும் என கருதி அவர் குழந்தைகளையும் கொல்ல முடிவு செய்தார். ஆனால் மூத்த மகள் சரோனிகாவுக்கு ஆறு வயதாகி விட்டதால் விவரம் தெரியும் என நினைத்து அவரை விட்டு விட்டார். பின்னர் எதுவும் தெரியாத கிருத்திகா மற்றும் ஒரு வயது குழந்தை லஜீத் ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார். இது பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சேலத்தில் இருக்கும் அவரது கணவருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சரவணன் பதறி அடித்துக் கொண்டு ஊர் திரும்பினார். பின்னர் நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தங்கமணி மற்றும் குழந்தைகளை சல்லடை போட்டு தேடினர். ஆனால் எங்கும் அவரைக் காணக் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் தங்கமணி மற்றும் அவரது குழந்தைகள் கிருத்திகா, லஜீத் ஆகியோர் பிணமாக மிதந்தனர். இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீசார் சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் போராடி தாய் மற்றும் 2 குழந்தைகளையும் பிணமாக மீட்டனர். முன்னதாக தங்கமணி தனது இரு குழந்தைகளையும் ஒரு துண்டு மூலமாக இடுப்பில் சுற்றி கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். இதில் கிருத்திகா இடுப்பில் இருந்து நழுவி கீழே விழுந்துள்ளார். ஒரு வயது குழந்தை இடுப்பில் கட்டியப்படியே பிணமாக கிடந்தது. குடும்பத் தகராறில் இரு குழந்தைகளையும் இடுப்பில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்