search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இரட்டைக்குழந்தைகள் பிறந்த 20 நாளில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை
    X

    இரட்டைக்குழந்தைகள் பிறந்த 20 நாளில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை

    • குழந்தைகள் அழுதுகொண்டே இருந்த நிலையில் கவுரியை காணாததால் அருகில் இருந்தவர்கள் அவரை தேடினர்.
    • இளம்பெண் தற்கொலை குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை கிராமத்திற்கு உட்பட்ட கோமுககவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 25). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கவுரி (22) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

    கவுரிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலையிலும் அதே போல் தனது மனைவியை சத்தம் போட்டு விட்டு சிவக்குமார் வெளியே சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த கவுரி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் அழுதுகொண்டே இருந்த நிலையில் கவுரியை காணாததால் அருகில் இருந்தவர்கள் அவரை தேடினர்.

    அப்போது அவர் கிணற்றில் மிதந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடலை இறந்த நிலையில் மீட்டனர். இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கவுரியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்த உள்ளார். தாய் இறந்த நிலையில் இரட்டைக்குழந்தைகள் பாலுக்காக தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×