search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை தற்கொலை"

    • தாரமங்கலம் அருகே உள்ள தொளசம்பட்டி பிரிவு ரோடு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் செல்வபெருமாள் (47).
    • மகனை விட்டுவிட்டு தீபாவளி கொண்டாட முடியாத மனவேதனையில் இருந்த செல்வபெருமாள் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தொளசம்பட்டி பிரிவு ரோடு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் செல்வபெருமாள் (47).

    தாயுடன் சண்டை

    கூலி தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மூர்த்தி (25) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது தாய் கோவிந்தம்மாளிடம் சண்டை போட்டுக்கொண்டு தாரமங்கலத்தில் உள்ள ஒரு பூக்கடையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

    கடந்த 3 மாதமாக மூர்த்தி வீட்டிற்கு வராததால் தந்தை செல்வபெருமாள் தீபாவளியன்று வீட்டில் கறி குழம்பு சமைத்து வைத்துவிட்டு மகனை சாப்பிடுவதற்காக அழைக்க சென்றுள்ளார்.

    அப்போது பூக்கடையில் இருந்த மூர்த்தி தனது தந்தையிடம் கோபமாக பேசி வீட்டிற்கு வர முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

    தற்கொலை

    இதனால் மகனை விட்டுவிட்டு தீபாவளி கொண்டாட முடியாத மனவேதனையில் இருந்த செல்வபெருமாள் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த செல்வபெருமாள் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

    இது பற்றி செல்வபெருமானின் மனைவி கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனை விட்டுவிட்டு பண்டிகை கொண்டாட முடியாமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தாரமங்கலம் அருகே உள்ள தொளசம்பட்டி பிரிவு ரோடு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் செல்வபெருமாள் (47).

    • 3 மகள்களின் கழுத்தை அறுத்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ஜோமோனின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 40). இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஜோமோன், தனது மகள்கள் அனன்யா (13), அனாமிகா (10), அமேயா (7) ஆகிய 3 பேரையும் பராமரித்து வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவு ஜோமோன் தனது 3 மகள்களின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயன்றுள்ளார். பின்பு அவர், வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தையால் கழுத்து அறுக்கப்பட்ட சிறுமிகள் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.

    இதனை அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இன்று காலை பார்த்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளையும் மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    ஜோமோனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர், எதற்காக 3 குழந்தைகளையும் கழுத்து அறுத்து கொல்ல முயன்று தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அது தொடர்பாக ஜோமோனின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் 3 பேரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். 3 மகள்களின் கழுத்தை அறுத்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோட்டயத்தை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகர் அருகே மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
    • நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கட்டய தேவன் பட்டியை சேர்ந்தவர் பாண்டி என்ற பெரியபாண்டி. இவரது கடைசி மகன் கடந்த மாதத்தில் திடீரென இறந்து விட்டார். இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால் வெளியே செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரிய பாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சையில் இருந்த ராகுல்ராஜ் மற்றும் நம்பெருமாள் ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
    • ஆனந்தகுமார் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அணைக்கரைக்கப்பட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் நம்பெருமாள் ராஜ் (வயது 49). இவரது மனைவி நிர்மலா தேவி (45). இவர்களது மகன் ராகுல்ராஜ் (15). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இவரை தாய் நிர்மலா தேவி கவனித்து வந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்து விட்டார்.

    அப்போது முதல் நம்பெருமாள் ராஜ் தனது மகனை கவனித்து வந்துள்ளார். மேலும் மனைவி இறந்ததால் மகனை சரிவர கவனிக்க முடியாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் தனது மகனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என நினைத்து அவருக்கு விஷம் கொடுத்து தானும் அதே விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சையில் இருந்த ராகுல்ராஜ் மற்றும் நம்பெருமாள் ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    இது குறித்து அவரது உறவினர் ஆனந்தகுமார் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதல்கட்ட விசாரணையில் நாகராஜன் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்வது வழக்கம் என்றும் நேற்று குடிபோதையில் அவர் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது.
    • மனைவி வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் குழந்தைகள் மீது தீ வைத்து விட்டு நாகராஜனும் தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான் கடை பரசேரி ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45), எலக்ட்ரீசியன்.

    இவரது மனைவி அனிதா (35). இவர்களுக்கு சுஷ்மிகா (12), தன்ஷிகா (10) என்ற மகள்கள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கடையில் அனிதா வேலை பார்த்து வருகிறார். அவரது மகள்கள் 2 பேரும் பரசேரி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    நேற்று மதியம் அனிதா வழக்கம்போல் வேலைக்கு சென்றார். வீட்டில் சுஷ்மிகாவும், தன்ஷிகாவும் இருந்தனர். கடையில் கூடுதலாக வேலை இருந்ததால் அனிதா இரவு வீட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. நாகராஜனும் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

    இதையடுத்து குழந்தைகள் சாப்பிட்டு விட்டு தூங்கினார்கள். அப்போது நாகராஜன் வீட்டிற்கு வந்தார். குழந்தைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்த அவர், மனைவி வீட்டில் இல்லாததால் ஆத்திரம் அடைந்தார்.

    அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் நிதானம் இழந்து காணப்பட்டார். மனைவி மீதான நாகராஜனின் கோபம், குழந்தைகள் மீது திரும்பியது. தான் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் குடிபோதையில் வீட்டின் பீரோவில் இருந்த துணிகளை எடுத்து குழந்தைகள் மீது வீசி உள்ளார்.

    பின்னர் சமையல் அறையில் இருந்த மண்எண்ணையை எடுத்து வந்து தனது உடலில் ஊற்றிக் கொண்டார். தொடர்ந்து குழந்தைகள் மீது வீசிய துணிகள் மீதும் மண்எண்ணையை தெளித்து தீயை வைத்தார். துணிகளின் மீது பரவிய தீ குழந்தைகள் மீதும் பிடித்தது. மேலும் நாகராஜனும் தீயில் சிக்கினார்.

    இதற்கிடையில் தீயின் வெப்பம் தாங்காமல் குழந்தைகள் சுஷ்மிகா, தன்ஷிகா இருவரும் கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். ஆனால் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு வீட்டின் அறையில் தீ எரிவதையும் நாகராஜன் கருகிய நிலையில் பிணமாக கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குழந்தைகள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து, அவர்களை மீட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைகளை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளுக்கு தீ வைத்து விட்டு நாகராஜன் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    முதல்கட்ட விசாரணையில் நாகராஜன் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்வது வழக்கம் என்றும் நேற்று குடிபோதையில் அவர் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது. அப்போது மனைவி வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் குழந்தைகள் மீது தீ வைத்து விட்டு அவரும் தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

    இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 குழந்தைகளுக்கு தீ வைத்துவிட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நரசிம்ம ரெட்டிக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதால் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டு அறைகளில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஒய்.எஸ்.ஆர் மாவட்டம் புரட்டுத்துரு மண்டலம், நக்கலடின்னா பகுதியை சேர்ந்தவர் நரசிம்ம ரெட்டி (வயது 47). இவரது மனைவி துளசியம்மா.

    தம்பதிக்கு அபிதேஜா ரெட்டி (15) என்ற மகனும், பவானி (14) என்ற மகளும் உள்ளனர். அங்குள்ள பள்ளியில் அபி தேஜா 10-ம் வகுப்பும், பவானி 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    நரசிம்ம ரெட்டிக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதால் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டு அறைகளில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அதிகாலை அபி தேஜா பவானி தூங்கிக் கொண்டிருந்த அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.

    அவர்களின் அலறல் சத்தம் கேட்ட தாய் துளசியம்மா அறை கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மகனும் மகளும் கோடாரியால் தலையில் வெட்டப்பட்டு படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்களது அருகில் நரசிம்ம ரெட்டி மயங்கிய நிலையில் கிடந்தார்.

    3 பேரையும் மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நரசிம்ம ரெட்டியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பவானி கடப்பா ரிம்ஸ் ஆஸ்பத்திரிக்கும், அபி தேஜா ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மனநலம் பாதிக்கப்பட்டதால் நரசிம்மா ரெட்டி, பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக கதவை தாழிட்டு கொண்டு கோடாரியில் தலையில் தாக்கி விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

    • 8 மாத குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லாததால் தூக்கு போட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
    • தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 26) இவருக்கும் சுபஸ்ரீ என்பவருக்கும் கடந்த 1 1/2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 8 மாதம் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில தினங்களாக குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதன் காரணமாக விஜய் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த விஜய் சம்பவத்தன்று வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கம்பத்தில் மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் குரங்குமாயன்தெருவை சேர்ந்த ரவி (வயது 52). இவர் ஆட்டோ ஓட்டிவந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி இறந்து விட்டார். அதன் பின்னர் மகன் விக்னேசுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 1/2 மாதத்திற்கு முன்பு விக்னேஷ் உடல்நலக்குறை வால் உயிரிழந்தார். அன்று முதல் மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார். இதனால் அதிகமாக மதுகுடித்துள்ளார்.

    சம்பவத்தன்று கம்பம்-கே.கே.பட்டி சாலையில் உள்ள மரத்தில் தூக்கு ப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கம்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகனின் நிலைமையை கண்டு தந்தை சிவக்குமாரவேலு மனவேதனையடைந்த நிலையில் இருந்து வந்தார்.
    • இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த சிவக்குமாரவேலு சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகரை சேர்ந்தவர் சிவக்குமாரவேலு (60). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு கணேசன், கிஷோர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் முதல் மகனுக்கு திருமணமாகிவிட்டது. 2-வது மகன் கிஷோர் திருமணம் செய்யாமல் இருந்து வந்ததோடு சமீபகாலமாக குடிபோதைக்கும் அடிமையாகிவிட்டார்.

    மகனின் நிலைமையை கண்டு தந்தை சிவக்குமாரவேலு மனவேதனையடைந்த நிலையில் இருந்து வந்தார். நேற்று கிஷோர் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தந்தை சிவக்குமாரவேலு பல்வேறு இடங்களில் மகனை தேடியும் எந்த விபரமும் தெரியவில்லை.

    இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த சிவக்குமாரவேலு சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தந்தை அப்புசாமி சஞ்சய் மீண்டும் படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் எனக்கூறி தனியார் டுட்டோரியல் கல்லூரியில் சேர்த்தார்.
    • சஞ்சய் வகுப்புக்கு செல்ல மறுத்ததால் அப்புசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கல்பாவி தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் அப்புசாமி (45). இவரது மனைவி சுமதி. அப்புசாமி சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார். சுமதி பவானி அருகே உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சய் (15), சந்துரு (13) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் சஞ்சய் மயிலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். கடந்த மாதம் வந்த தேர்வு முடிவில் 3 பாடத்தில் சஞ்சய் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவரது தந்தை அப்புசாமி சஞ்சயை மீண்டும் படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் எனக்கூறி தனியார் டுட்டோரியல் கல்லூரியில் சேர்த்தார்.

    ஆனால் சஞ்சய் வகுப்புக்கு செல்ல மறுத்ததால் அப்புசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து அப்புசாமி குடித்து விட்டார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி அடைந்ததால் தந்தை விஷம் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மனைவி மேரி மற்றும் மகன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் சந்திரமோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மடத்துக்குளம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள பெரிய வட்டாரம் கோவில்கோவில் வீதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 46 ). பிரிட்ஜ் மற்றும் ஏ.சி. பழுது நீக்கும்தொழில் செய்து வந்தார்.

    கடந்த 20ந்தேதி பத்தாம் வகுப்பு தேர்வு வெளியான நிலையில் அவரது மூத்த மகன் பெயில் ஆனதால் சந்திரமோகன் கவலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மனைவி மேரி மற்றும் மகன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் பேன் மாட்டும் கொக்கியில் சந்திரமோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மடத்துக்குளம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×