search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகன் மாயமானதால் தந்தை தற்கொலை
    X

    மகன் மாயமானதால் தந்தை தற்கொலை

    • மகனின் நிலைமையை கண்டு தந்தை சிவக்குமாரவேலு மனவேதனையடைந்த நிலையில் இருந்து வந்தார்.
    • இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த சிவக்குமாரவேலு சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகரை சேர்ந்தவர் சிவக்குமாரவேலு (60). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு கணேசன், கிஷோர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் முதல் மகனுக்கு திருமணமாகிவிட்டது. 2-வது மகன் கிஷோர் திருமணம் செய்யாமல் இருந்து வந்ததோடு சமீபகாலமாக குடிபோதைக்கும் அடிமையாகிவிட்டார்.

    மகனின் நிலைமையை கண்டு தந்தை சிவக்குமாரவேலு மனவேதனையடைந்த நிலையில் இருந்து வந்தார். நேற்று கிஷோர் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தந்தை சிவக்குமாரவேலு பல்வேறு இடங்களில் மகனை தேடியும் எந்த விபரமும் தெரியவில்லை.

    இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த சிவக்குமாரவேலு சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×