search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Father commits suicide"

    • கம்பத்தில் மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் குரங்குமாயன்தெருவை சேர்ந்த ரவி (வயது 52). இவர் ஆட்டோ ஓட்டிவந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி இறந்து விட்டார். அதன் பின்னர் மகன் விக்னேசுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 1/2 மாதத்திற்கு முன்பு விக்னேஷ் உடல்நலக்குறை வால் உயிரிழந்தார். அன்று முதல் மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார். இதனால் அதிகமாக மதுகுடித்துள்ளார்.

    சம்பவத்தன்று கம்பம்-கே.கே.பட்டி சாலையில் உள்ள மரத்தில் தூக்கு ப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கம்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகனின் நிலைமையை கண்டு தந்தை சிவக்குமாரவேலு மனவேதனையடைந்த நிலையில் இருந்து வந்தார்.
    • இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த சிவக்குமாரவேலு சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகரை சேர்ந்தவர் சிவக்குமாரவேலு (60). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு கணேசன், கிஷோர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் முதல் மகனுக்கு திருமணமாகிவிட்டது. 2-வது மகன் கிஷோர் திருமணம் செய்யாமல் இருந்து வந்ததோடு சமீபகாலமாக குடிபோதைக்கும் அடிமையாகிவிட்டார்.

    மகனின் நிலைமையை கண்டு தந்தை சிவக்குமாரவேலு மனவேதனையடைந்த நிலையில் இருந்து வந்தார். நேற்று கிஷோர் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தந்தை சிவக்குமாரவேலு பல்வேறு இடங்களில் மகனை தேடியும் எந்த விபரமும் தெரியவில்லை.

    இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த சிவக்குமாரவேலு சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×