search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "escaped"

    திருவண்ணாமலை அருகே ஓடும் பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கவனிக்கப்பட்டதால் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    வேட்டவலம்:

    திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு இன்று காலை 7.30 மணியளவில் அரசு விரைவு பஸ் ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

    திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் கடை வீதியில் சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் டீசல் டேங்க்கில் இருந்து கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது.

    புகை அதிகளவு வந்ததை உடனடியாக கவனித்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். அடுத்த நொடி பஸ் நிறுத்தப்பட்டது. பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.

    ஏதே விபரீதம் ஏற்படும் என அச்சமடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சை விட்டு சற்று தூரம் தள்ளி ஓடி நின்று பீதியில் நின்றனர்.

    தகவலறிந்ததும், வேட்டவலம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பஸ் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பா விதம் தவிர்க்கப்பட்டது.

    30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மாற்று பஸ்சில் பயணிகள் தங்களது பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    சாத்தான்குளத்தில் முன்விரோத தகராறில் அ.ம.மு.க. நிர்வாகி மீது தாக்குதலில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சாத்தான்குளம்:

    சாத்ததான்குளம் பண்டாரபுரத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி(வயது 69). அ.ம.மு.க. நிர்வாகியாக இருந்து வருகிறார். ராஜபாண்டிக்கும் அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவரான தங்கவேலு என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் அந்த நிலத்தை அளப்பதற்காக ராஜபாண்டி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ராமர் எப்படி நிலத்தை அளக்கலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராமர், ராஜபாண்டியை அடித்து உதைத்துள்ளார்.

    இதில் காயமடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் வழக்குப்பதிவு செய்து கார்டிரைவர் ராமரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பள்ளிப்பாளையம் அருகே ஆம்னிவேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஆயக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45).  இவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஊரில் வசித்து வருகிறார். மேலும் ரவிச்சந்திரன் ஆயக்காட்டூரில் விசைத்தறி கூடம் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சங்ககிரியில் உள்ள சொந்தக்காரர் ஒருவரது வீட்டிற்கு இன்று செல்ல முடிவு செய்திருந்தார். அதன்படி இன்று காலையில் ரவிச்சந்திரன் தனக்கு சொந்தமான ஆம்னிவேனில் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சங்ககிரிக்கு  புறப்பட்டார். காரில் மொத்தம் 4 பேர் இருந்தனர்.

    ஆம்னிவேனை ரவிச்சந்திரன் ஓட்டினார். காலை 7.30 மணி அளவில் வெப்படை என்ற இடத்தில் ஆம்னிவேன் சென்றபோது, என்ஜீன் பகுதியில் இருந்து திடீரென புகை குபு குபுவென கிளம்பி வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் உடனடியாக ஆம்னி வேனை நிறுத்தினார். இதையடுத்து அனைவரும் காரிலிருந்து படபடவென கீழே  இறங்கி சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்று கொண்டனர். 

    கொஞ்சம் நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வருவதற்குள் ஆம்னிவேன் முற்றிலும் எரிந்து எலும்புக் கூடாக மாறியது. ரோட்டில் ஓடியபோது ஆம்னிவேன் வெடித்து சிதறி இருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக ரவிச்சந்திரன் சுதாரித்துக் கொண்டு ஆம்னி வேனை நிறுத்தியதால் அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. ரோட்டில் ஓடிய ஆம்னிவேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
    புழல் ஜெயில் வாசலில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்.
    செங்குன்றம்:

    சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27), கூலி வேலை செய்து வருகிறார்.

    ஆதம்பாக்கம் பகுதியில் நடந்த அடிதடி தகராறு தொடர்பாக கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை புழல் ஜெயிலில் அடைக்க அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் ஏட்டுகள் 2 பேர் கார்த்திக்கை ஆட்டோவில் ஏற்றி புழல் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். இரவு 8.30 மணி அளவில் ஆட்டோ புழல் ஜெயில் வாசலை சென்றடைந்தது.

    அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கிய கார்த்திக் போலீஸ் ஏட்டுகள் இருவரையும் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்.

    கைதி தப்பியோடிய சம்பவம் முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையை அடுத்த பேட்டை கிராமத்தில் சுக்ரீவன் வழிபட்டு வணங்கிய பழமையான சிவன்கோயில் உள்ளது. வடிவழகி என்ற சவுந்தரநாயகி அம்மன் உடனமர் சவுந்தரேஸ்வரசுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கும் இக்கோயிலில் திருப்பணிகள் நீண்ட நாட்களாக பக்தர்கள் உதவியுடன் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் கடந்த 18-ந்தேதி காலை வழக்கம்போல் பணியாளர்கள் கோவிலை திறந்து அன்றாட பூஜைக்கு தயாராகினர். அப்போது குருக்கள் பாலாஜி வந்திருந்த பக்தர்களுக்கு அர்ச்சனை செய்து வந்தார். அப்போது 30வயது மதிக்கக்கூடிய வாலிபர் ஒருவர் அர்ச்சனை செய்துவிட்டு சன்னதியை சுற்றிவந்தார். இந்த வேளையில் குருக்கள் பாலாஜி பிரசாத தயாரிப்பில் ஈடுபட்டார். இதனை நோட்டமிட்ட வாலிபர் திடீரென்று கருவறைக்குள் புகுந்து தான் கொண்டுவந்த கட்டிங் பிளேடால் வடிவழகி அம்மன் கழுத்தில் இருந்த தங்க செயினை துண்டித்து எடுத்து கொண்டு அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறி விட்டார்.

    இதனை பார்த்த குருக்கள் சந்தேகம் அடைந்து சாமியை பார்த்தபோது கழுத்தில் இருந்த தங்க செயின் திருட்டு போனது தெரியவந்தது. குருக்கள் சத்தமிட்டு மக்களை கூப்பிட்டதும் மர்மநபர் தப்பி சென்று விட்டார்.

    இதனையடுத்து கோவில் செயல் அலுவலர் ஜவகர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்ததில் அறந்தாங்கியை சேர்ந்த மனோகரன் என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இந்நிலையில் கடந்த 29-ந்தேதி காலை அறந்தாங்கியில் வைத்து மனோகரன் கைது செய்யப்பட்டார். அவரை நேற்று திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக முத்துப்பேட்டை காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் ரவிச்சந்திரன், ஆயுதப்படை காவலர் பாலமுத்து ஆகியோர் அழைத்துச் சென்றனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததைப் பயன்படுத்தி கைதி மனோகரன் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் பல்வேறு குழுவாக பிரிந்து சென்று தேடி வருகின்றனர்.

    கைதி தப்பியோடிய சம்பவம் முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிராவில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் போலீஸ் ஸ்டேசனில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #AccusedEscaped #PoliceCustody
    கோலாப்பூர்:

    மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் ஷாஹூவாடி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த கொள்ளை மற்றும் வீட்டை உடைத்து திருடியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். 

    கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை மே 20-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, 4 பேரையும் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்நிலையில், இன்று அதிகாலையில் போலீசார் சற்று கண் அயர்ந்த வேளையில், காவல் நிலைய லாக்கப்பில் இருந்து 4 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். லாக்கப் கதவின் கிரில் கம்பிகளை வளைத்து அதன் வழியாக வெளியேறி உள்ளனர். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மாவட்ட எல்லைகள் உடனடியாக மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகிறது.  #AccusedEscaped #PoliceCustody
    வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய கைதியை இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் தேடி வருகிறார்கள்
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு பகுதியில் தனியார் செங்கல்சூளை உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தணிக்கலாம் பட்டு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் தனியாக இருந்த 7 வயது சிறுமிக்கு தொழிலாளி சந்துரு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுபற்றி சிறுமியின் பெற்றோர் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்து அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி சந்துரு சென்றார். சிறிது நேரத்தில் அவர் போலீஸ் நிலைய காம்பவுண்டு சுவரை ஏறிக் குதித்து தப்பி ஓடிவிட்டார்.

    இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுபற்றி போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் தப்பி ஓடிய சந்துருவை தேடி வருகிறார்கள்.


    பாகிஸ்தானில் காரால் மோதி ஒரு வாலிபரின் மரணத்துக்கு காரணமான அமெரிக்க தூதரக அதிகாரி விமானம் மூலம் இன்று தாய்நாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்றதை அதிகாரிகள் முறியடித்தனர். #USDiplomat #bidtoflyoutofPakistan
    இஸ்லாமாபாத்:

    பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக கூறி அந்நாட்டுக்கு வழங்க இருந்த நிதியை டிரம்ப் நிறுத்தி வைத்தார். கடந்த சில மாதம் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜோசப் இம்மானுவேல் ஹால் சென்ற கார் மோதியதில் அதீக் பெய்க் என்னும் 22 வயது வாலிபர் பலியானார்.

    ஜோசப் குடித்து விட்டு வாகனம் ஓட்டி, சிகப்பு விளக்கு சிக்னலை கடந்து சென்று இந்த விபத்தை ஏற்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

    இந்நிலையில், ஜோசப் ஹால் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. தூதரக அதிகாரி என்பதால் அவரை கைது செய்ய முடியாது. எனினும், சர்வதேச விதிமுறைகளின் படி அவர் மீதான விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடத்தப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஜோசப் இம்மானுவேல் ஹால் யாருக்கும் தெரியாமல் பாகிஸ்தானில் இருந்து தப்பிச் செல்ல திட்டம் தீட்டியுள்ளார்.

    இதற்காக, ஆப்கானிஸ்தான் நாட்டின் பக்ராம் பகுதியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஒரு விமானம் நேற்று காலை சுமார் 11.15 மணியளவில் இஸ்லாம்பாத் நகரில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.

    சற்று நேரத்துக்குள் ஜோசப் இம்மானுவேல் ஹால் உள்ளிட்ட சுமார் பத்துபேர் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் ஜோசப் இம்மானுவேல் ஹால் வந்திருப்பதை அறிந்த பாகிஸ்தான் உளவுப்படை அதிகாரி அவரை விமானத்தில் ஏற அனுமதிக்காமல் தடுத்தி நிறுத்தினார்.

    இதையடுத்து, அவரது பாஸ்போர்ட்டை அந்த அதிகாரி பறிமுதல் செய்ததுடன் மேலிடத்துக்கும் தகவல் அளித்துள்ளார். அதன் பிறகு தனது திட்டம் நிறைவேறாமல் அவர் ஏமாற்றத்துடன் அமெரிக்க தூதரகத்துக்கு திரும்பினார்.

    மாலைவரை காத்திருந்த அமெரிக்க விமானப்படை விமானம் சுமார் 4 மணியளவில் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்தை சென்றடைந்தது. #USDiplomat #bidtoflyoutofPakistan 
    போளூர் அருகே குழந்தை கடத்துபவர் என கருதி மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 3-வது நாளாக 10 கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குழந்தை கடத்துபவர் எனக் கருதி குல தெய்வ கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த ருக்மணி அம்மாள் மற்றும் குடும்பத்தினரை ஊர் பொதுமக்கள் தாக்கியதில் ருக்மணி அம்மாள் பரிதாபமாக இறந்தார். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



    இந்த சம்பவம் தொடர்பாக போளூர் போலீசார் 23 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரை வீடு, வீடாக சென்று தேடி வருகின்றனர்.

    மேலும் இதுதொடர்பாக தானியார் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை (வயது 45), ஏரிக்கொல்லைமேடு பகுதியை சேர்ந்த பழனி (45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் 42 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட 25 பேரை நேற்று முன்தினம் இரவு போளூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தாமோதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    இதில் 13 வயது சிறுவன் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் மற்றவர்களை வேலூர் ஜெயிலிலும் அடைக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து 24 பேர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து நேற்று முன்தினம் களியம், அத்திமூர், பனப்பாம்பட்டு, தின்டிவனம், கணேசபுரம், தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், தானியார், காமாட்சிபுரம், இந்திராநகர் ஆகிய 10 கிராமங்களில் பலர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி உள்ளனர்.

    இரவோடு இரவாக பலர் தங்களது வீடுகளை காலி செய்துள்ளனர். 3-வது நாளாக இன்று கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு (போளூர்), ராஜகோபால் (கலசபாக்கம்), சுரேஷ்சண்முகம் (கடலாடி) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாளன், சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்களை கொண்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அப்பகுதியில் தினமும் அதிகாலை நேரத்தில் பலர் சைக்கிளில் இளநீர் கொண்டு வந்து போளூரில் விற்பனை செய்வது வழக்கம். நேற்று இளநீர் விற்பவர்கள் யாரும் வரவில்லை.

    ஜவ்வாதுமலையில் உள்ள பட்டரைகாடு, நம்மியம்பட்டு உள்பட 364 குக்கிராமங்களில் அவர்கள் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து அந்த பகுதிகளில் தேடி வருகின்றனர்.  #tamilnews
    போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்டதில் கைது நடவடிக்கைக்கு பயந்து 11 கிராமங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    போளூர்:

    சென்னை பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் ருக்மணி (65), இவரும் வெங்கடேசன் (வயது51). மயிலாப்பூர் கஜேந்திரன் (55) உறவினர் மலேசியாவை சேர்ந்த மோகன்குமார் (34) சந்திரசேகர் ஆகியோரும் காரில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தண்ணீர் குளம் என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    அப்போது தம்புகொட்டான் பாறை கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு ருக்மணி சாக்லெட் கொடுத்தார்.

    அங்கிருந்த பெண்கள், குழந்தையை கடத்த சாக்லெட் கொடுப்பதாக கருதி கூச்சல் போட்டனர். அங்கு திரண்ட கிராம மக்கள் ருக்மணி உள்பட 5 பேரையும் சரமாரி தாக்கினர். இதில் சிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார். மற்ற 4 பேரும் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பொதுமக்கள் செல்போனில் எடுத்த வீடியோ ஆதாரத்தை வைத்து மூதாட்டி மற்றும் மற்றவர்களை தாக்கியவர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

    அதன்படி தம்பு கொட்டான் பாறை, களியம் வேடகொள்ளை மேடு கிராமத்தை சேர்ந்த 25 பேரை கைது செய்தனர்.

    மேலும், சந்தேகிக்கப்படும் 200 பேரை பேலீசார் தேடி வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை பூட்டிக் கொண்டு இரவோடு இரவாக தலைமறைவாகினர். கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது.

    அத்திமூர், கணேசபுரம், தம்புகொட்டான் பாறை, களியம், காமாட்சிபுரம், திண்டிவனம், இந்திராநகர், ஜம் பங்கிபுரம், தாளியார், காந்திநகர், ஏரிக்கொல் லைமேடு ஆகிய 11 கிராமங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அந்த கிராமங்களில் போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    போளூர் பஸ் நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பதுங்கி உள்ளனரா? என்று போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் 4 பேர் அபாய கட்டத்தை கடந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் எதுவும் ஊடுருவவில்லை. பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சைபர் கிரைம் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் ஆய்வு செய்ததில் குழந்தை கடத்தல் கும்பல் மாவட்டத்தில் எங்கும் இல்லை.

    குழந்தை கடத்தல் கும்பல் என்று சமூக வலை தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்களும் குற்றவாளிகளாக கருதி குண்டர் சட்டம் அல்லது அதற்கு நிகரான வழக்கில் கைது செய்யப்படுவார்கள்.

    மேலும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.

    ×