search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dulquer Salman"

    • நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
    • இப்படம் ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.


    துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.


    'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.



    • துல்கர் சல்மான் நடித்துள்ள 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.



    துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.



    'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபு ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் சிம்பு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • துல்கர் சல்மான் நடித்துள்ள 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி வெளியாகவுள்ளது.
    • இதனை நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

    துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.



    இந்நிலையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் இதனை வெளியிடவுள்ள பிரபலம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். 

    • நடிகர் துல்கர் சல்மான் தற்போது 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.


    துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.




    • நடிகர் துல்கர் சல்மான் தற்போது நடிக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
    • இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.



    துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார்.
    • தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி'. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    துல்கர் சல்மான்

    துல்கர் சல்மான்

    இப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர்.


    ஜிவி பிரகாஷ் குமார்

    ஜிவி பிரகாஷ் குமார்

    இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இணைந்துள்ளதாக படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அறிவித்துள்ளது. துல்கர் சல்மானுடன் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வாத்தி’.
    • இப்படத்தை இயக்கிய வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.118 கோடிக்கு மேல் வசூல் செய்தது.




    இந்நிலையில் தனுஷின் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணைந்துள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா காலமானார்.
    • இவருடைய மறைவுக்கு துல்கர் சல்மான், செல்வராகவன், தமன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


    மனோபாலா

    மனோபாலா

    இந்நிலையில் மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் துலகர் சல்மான் பதிவிட்டிருப்பது, நீங்கள் எப்பொழுதும் அன்பானவர், பன்பானவர், எங்களை சந்தோஷமாக வைத்து கொள்ளக்கூடியவர். நாம் படத்தில் ஒன்றாக நடித்த பொழுது இனிமையான நினைவுகள் மட்டுமே என்னிடம் உள்ளது.


    இசையமைப்பாளர் தமன், உண்மையிலேயே நல்ல மனிதர். அவருடைய மறைவு செய்தி உலுக்குகிறது.

    இயக்குனர் செல்வராகன், எப்பொழுதும் என்னுடைய இனிய நண்பர்.

    இயக்குனர் பாண்டியராஜ், மிஸ் யூ மனோபாலா சார், என்று இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

    • தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் சமீபத்தில் திரைக்கு வந்த சீதாராமம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • துல்கர் சல்மான் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவருடைய ஆரம்ப கால சினிமா பயணத்தை குறித்து பேசியுள்ளார்.

    மலையாள நடிகர் மம்முட்டி மகனான துல்கர் சல்மான், தமிழில் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்து பிரபலமானார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹெய் சினாமிகா படங்களின் வெற்றி அவருக்கு திருப்பு முனையை கொடுத்தது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் சமீபத்தில் திரைக்கு வந்த சீதாராமம் படம் மூலம் திறமையான நடிகர் என்ற பெயர் பெற்றார். ஆனாலும் துல்கர் சல்மான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த சில மலையாள படங்கள் சரியாக போகாததால் கேலி மற்றும் அவமதிப்புகளை சந்தித்ததாக தெரிவித்து உள்ளார்.

     

    சீதாராமம் 

    சீதாராமம் 

    இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டேன். எனக்கு நடிக்க தெரியவில்லை என்றும், சினிமாவை விட்டு வெளியேறும்படியும் விமர்சித்தனர். எனது தந்தை மம்முட்டியை போன்று என்னால் சினிமாவில் நிலைக்க முடியாது என்றும் பேசினர். அதை பொருட்படுத்தாமல் என்னை நம்பி கடுமையாக உழைத்து, இப்போது இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்" என்றார்.

    நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி மது குடிக்க, ஜெமினி கணேசன் தான் காரணம் என தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. #NadigaiyarThilagam #KeerthySuresh
    பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்த படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், துல்கரின் கதாபாத்திரங்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளன. 

    இதில் நடிகர் ஜெமினி கணேசனை வில்லனாக சித்தரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சாவித்ரிக்கு ஜெமினி கணேசன் திடீர் தாலி கட்டுவது, சாவித்ரிக்கு அதிக படங்கள் குவிந்ததால் ஜெமினி கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு குடிக்க தொடங்குவது, இதனால் இருவருக்கும் கருத்து வேற்பாடு ஏற்படுவது, ஒரு கட்டத்தில் சாவித்ரியையும் மது குடிக்கும்படி தூண்டி அவரையும் குடிகாரர் ஆக்குவது போன்று காட்சிகளை வைத்துள்ளனர்.

    அதன்பிறகு சாவித்ரி மதுவுக்கு அடிமையாகி பாட்டில் பாட்டிலாக குடிப்பது மாதிரியும், இதனால் சர்க்கரை நோய்க்கு ஆளாகி கோமாவில் சிக்கி இறப்பது போன்றும் காட்சிகள் உள்ளன.



    இந்த படத்தை சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி பார்த்து பாராட்டி இருக்கிறார். ஆனால் ஜெமினி கணேசனின் முதல் மனைவி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெமினி கணேசனை மோசமானவராக சித்தரித்து இருப்பதாக அவர்கள் சாடினர்.

    ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் கூறும்போது, “சாவித்ரிக்கு அப்பாதான் மது குடிக்க கற்றுக்கொடுத்தார் என்று படத்தில் காட்சி வைத்து இருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டேன். அவரால் எந்த பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தன்னை விரும்பிய பெண்களைத்தான் திருமணம் செய்துகொண்டார்” என்று தெரிவித்து உள்ளார்.

    சமூக வலைத்தளங்களில் இது சர்ச்சையாக பரவி வருகிறது. #NadigaiyarThilagam #KeerthySuresh

    தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், படத்தை பார்த்த அட்லி படக்குழுவை பாராட்டியிருக்கிறார். #NadigaiyarThilagam #KeerthySuresh
    மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் இன்று வெளியாகி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தா பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறார். 

    படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் அட்லியும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் போட்டுள்ளார். அதில் அட்லி கூறியிருப்பதாவது,



    உன்னதமான, உற்சாகமூட்டும், உயிர் காவியமான சாவித்ரி அம்மாவின் வாழ்க்கையை மீண்டும் உயிர் பெற வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக மாயாபசார் நடனம் மிகவும் அற்புதம். சமந்தா தம்பி நீ கலக்கிட்ட, படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். மறக்க முடியாத காவியத்தை வழங்கியதற்காக வைஜெயந்தி பிலிம்சுக்கு பாராட்டுக்கள்' 

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

    வைஜெயந்தி மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வருகிற 11-ஆம் தேதி படம் ரிலீசாக இருக்கிறது. NadigaiyarThilagam #Mahanati #KeerthySuresh #Samantha

    நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தின் தெலுங்கு பதிப்பை பார்த்த இயக்குநர் ராஜமவுலி, தான் துல்கர் சல்மான் ரசிகனாகி விட்டதாக கூறியிருக்கிறார். #NadigaiyarThilagam #KeerthySuresh
    மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் இன்று வெளியாகி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தா பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறார். 

    இந்த நிலையில், இன்று படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி படக்குழுவை வாழ்த்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், 



    `சாவித்திரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை பார்த்திராத வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் பழம்பெரும் நடிகையை மீண்டும் உயிர்பெற்று வர வைத்துள்ளார். துல்கர் சல்மான் அற்புதமாக நடித்துள்ளார். நான் அவரது ரசிகனாகிவிட்டேன். வாழ்த்துக்கள் நாக் அஸ்வின், ஸ்வப்னா, உங்களது நம்பிக்கை மற்றும் உறுதி தலைசிறந்தது' 

    இவ்வாறு கூறியிருக்கிறார். 

    வைஜெயந்தி மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வருகிற 11-ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. NadigaiyarThilagam #Mahanati #KeerthySuresh

    ×