search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nadigaiyar thilagam"

    பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கைப் படத்தில் ஜெமினிகணசேனை தவறாக சித்தரித்துக் காட்டியிருப்பதாக கமலா செல்வராஜ் கூறியிருந்த நிலையில், படத்தால் இவர்களது குடும்பம் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. #SavithriBiopic
    பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேசுக்கு வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால் ஒன்றாக இருந்த சாவித்திரியின் குடும்பம் படத்தால் பிரிந்துவிட்டது.

    படம் வெளிவந்ததும் சாவித்திரி மகன் சதீஷ், "அம்மாவின் கடைசி நாள்களில் அவங்க தனியா இல்லை. அப்போது எனக்கு 14 வயது என்பதால், நடந்தவை எனக்குத் தெரியும். உண்மையில் என்ன நடந்ததோ, அதை மட்டுமே காட்டியிருந்தார்கள்'' என்று கூறினார். மகள் விஜய சாமுண்டீஸ்வரியும், "எங்கள் அம்மா கடைசிக்காலத்தில் கதியில்லாமல் இறந்த மாதிரிதான் எல்லோரும் நினைச்சுட்டிருந்தாங்க. இந்தப் படம் மூலமா, அப்பா கடைசி வரை அம்மாவைக் கைவிடலை என்கிற உண்மை உலகத்துக்குத் தெரியவந்திருக்கு'' என நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.



    ஆனால் ஜெமினியின் மகள்களில் ஒருவரான கமலா செல்வராஜ், "என் அப்பாதான் சாவித்திரிக்கு மதுப் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்ததாகவும், அப்பா வேலையே இல்லாமல் இருந்ததுபோலவும் படத்தில் வருகிறது. இதைச் சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி அனுமதித்தது தவறு. இந்தப் படத்தால் சகோதரிகளாகிய நாங்கள் பிரிந்ததுதான் நடந்திருக்கிறது.

    என்னையும், என் அப்பாவையும் கூர்க்கா மற்றும் நாயைவிட்டு விரட்டியடித்தவர் சாவித்திரி. அந்த மோசமான காலத்தை இந்தப் படம் நினைவுப்படுத்திவிட்டது. என் அம்மா சொல்லியபடி என் அப்பாவின் பிள்ளைகளை நான்தான் அரவணைத்து வந்தேன். ஆனால், இனிமேல் விஜி என்னுடைய தங்கை இல்லை. அவளை என் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன்'' என்று கோபமாகச் சொன்னார்.


     
    இதுபற்றி விஜய சாமுண்டீஸ்வரியிடம் கேட்டபோது "பிரச்னை அப்படியேதான் இருக்கு. இன்னும் சரியாகலை. கமலா அக்கா இன்னும் என்னைவிட்டு தூரமாகத்தான் இருக்காங்க. எங்களுக்கு நடுவில் பேச்சுவார்த்தை இல்லை. ஆனா அவங்க பிள்ளைகள் என்கிட்டப் பேசிட்டிருக்காங்க. அக்கா கோபம் தணியறதுக்குக் கொஞ்ச காலம் ஆகலாம். நிச்சயம் சரியாகிடும்'' என்றார். #SavithriBiopic

    நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஷிடம், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் நடிப்பாரா என்று கேட்டதற்கு, ஜெயலலிதாவாக நடிக்க தனக்கு தைரியம் இல்லை என்று கூறியுள்ளார். #KeerthySuresh
    கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரி வேடத்தில் நடித்த நடிகையர் திலகம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அவருக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுத்தது. அடுத்து என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றிலும் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார்.

    அவரிடம் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பீர்களா? என்று கீர்த்தி சுரேஷிடம் கேட்டதற்கு “ஜெயலலிதா அவர்களின் வரலாற்றுப் படத்தைத் தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும் சவாலான வி‌ஷயம். எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் இல்லை.

    அதனால் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை” என்று கூறினார். கேரள வெள்ளம் குறித்து ‘கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கின்றன.



    ஆனால், மலைவாழ் மக்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தங்கியுள்ளோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். நானும் எனது நண்பர்களும் தொடர்ந்து உதவி செய்ய அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் கேரளா செல்லவுள்ளோம். இங்கிருந்து நிவாரணப் பொருட்கள், பாத்திரங்களாகக் கூட அனுப்பி வைக்கலாம்” என்றார். #JayalalithaaBiopic #KeerthySuresh

    தமிழில் முன்னணி நடிகைகளாக வரும் திரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் கீர்த்தி சுரேஷை வருத்தமடைய வைத்திருக்கிறார்கள். #KeerthySuresh #Trisha #Nayanthara
    அறிமுகமான சில ஆண்டுகளிலேயே மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகையானவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியானார். யாருமே எதிர்பார்க்காத வாறு சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரியாக நடிக்க ஒப்பந்தமானார்.

    இதை கேள்விப்பட்டவர்கள் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசா என்று கிண்டல் அடித்தார்கள். ஆனால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிக சிறப்பாக நடித்து அசத்தினார். தென் இந்திய சினிமா மட்டும் அல்லாமல் நாடு முழுவதிலும் இருந்து கீர்த்தியின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்து வருகிறது.

    ஆனால் தென் இந்தியாவின் முக்கிய நடிகைகளான நயன்தாராவும் திரிஷாவும் ஒரு வார்த்தை கூட கீர்த்தி நடிப்பு பற்றி பேசவில்லை. பகிரவும் இல்லை. நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தபோது கீர்த்தி மீது நயன்தாரா அதிருப்தியில் இருப்பதாக செய்தி வந்தது.



    அதேபோல் சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால் தான் திரிஷா நடிக்காமல் பின்வாங்கினார் என்றும் செய்திகள் வந்தன. இந்த 2 செய்திகளும் உண்மை என எண்ணும்படி அமைந்துள்ளது திரிஷா, நயன்தாராவின் அலட்சியம்.
    நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி மது குடிக்க, ஜெமினி கணேசன் தான் காரணம் என தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. #NadigaiyarThilagam #KeerthySuresh
    பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்த படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், துல்கரின் கதாபாத்திரங்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளன. 

    இதில் நடிகர் ஜெமினி கணேசனை வில்லனாக சித்தரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சாவித்ரிக்கு ஜெமினி கணேசன் திடீர் தாலி கட்டுவது, சாவித்ரிக்கு அதிக படங்கள் குவிந்ததால் ஜெமினி கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு குடிக்க தொடங்குவது, இதனால் இருவருக்கும் கருத்து வேற்பாடு ஏற்படுவது, ஒரு கட்டத்தில் சாவித்ரியையும் மது குடிக்கும்படி தூண்டி அவரையும் குடிகாரர் ஆக்குவது போன்று காட்சிகளை வைத்துள்ளனர்.

    அதன்பிறகு சாவித்ரி மதுவுக்கு அடிமையாகி பாட்டில் பாட்டிலாக குடிப்பது மாதிரியும், இதனால் சர்க்கரை நோய்க்கு ஆளாகி கோமாவில் சிக்கி இறப்பது போன்றும் காட்சிகள் உள்ளன.



    இந்த படத்தை சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி பார்த்து பாராட்டி இருக்கிறார். ஆனால் ஜெமினி கணேசனின் முதல் மனைவி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெமினி கணேசனை மோசமானவராக சித்தரித்து இருப்பதாக அவர்கள் சாடினர்.

    ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் கூறும்போது, “சாவித்ரிக்கு அப்பாதான் மது குடிக்க கற்றுக்கொடுத்தார் என்று படத்தில் காட்சி வைத்து இருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டேன். அவரால் எந்த பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தன்னை விரும்பிய பெண்களைத்தான் திருமணம் செய்துகொண்டார்” என்று தெரிவித்து உள்ளார்.

    சமூக வலைத்தளங்களில் இது சர்ச்சையாக பரவி வருகிறது. #NadigaiyarThilagam #KeerthySuresh

    இரும்புத்திரை, நடிகையர் திலகம் படங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியில் இருக்கும் சமந்தா, என்னைப் பற்றி வந்த செய்தியில் உண்மை இல்லை என்று கூறியிருக்கிறார். #Samantha
    ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றதில் உற்சாகமாக இருக்கிறார் சமந்தா. அந்த உற்சாகத்தில் அவர் அளித்த பேட்டி...

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறீர்களே?

    இல்லை. யுடர்ன் படத்தை நான் தயாரிப்பதாக வந்த செய்திகள் உண்மை இல்லை. அந்த படத்தை வேறு ஒருவர் தயாரிக்கிறார். அதில் பத்திரிகையாளராக வருகிறேன். வித்தியாசமான கதாபாத்திரம்.

    பெரிய குடும்பத்தில் மருமகளாகி இருக்கிறேன். மிகவும் கவனமாக இருக்கிறேன். மாமனாரை பார்த்து பயந்தேன். ஆனால் அவர் மிகவும் கூலாக இருக்கிறார். ஏதாவது பிரச்சினை என்றால் ‘அட விடும்மா’ என்று உற்சாகப்படுத்துகிறார். சினிமா குடும்பம் என்பதால் என்னை புரிந்துகொள்கிறார்கள்.

    திருமணத்துக்கு பின் அதிகமாக கவர்ச்சி படங்கள் வெளியிடுகிறீர்களே?

    என் சமூக வலைதளங்களில் எந்த படங்களை வெளியிட வேண்டும் என்பது என் உரிமை. அதில் தலையிட, அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. எனக்கு என் எல்லை தெரியும்.

    பிரதிக்‌ஷா அமைப்பு மூலம் இதுவரை 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை நடத்தியுள்ளோம். தெலுங்கானா கைத்தறித்துறை தூதுவராக இருக்கிறேன். நெசவாளர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். தமிழக அரசு கேட்டால் இங்கேயும் தூதுவராக தயார்.



    ரஜினி, கமல் யாருக்கு உங்கள் ஆதரவு?

    அரசியல் பற்றி சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது. சினிமா மட்டும்தான் தெரியும்.

    திருமணத்துக்குப் பிறகு நான் நடிப்பை விட்டு விடுவேன் என்று நாக சைதன்யா கவலைப்பட்டார். தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் திருமணம் ஆன பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற தன்மையை நான் அகற்ற வேண்டும். திருமணத்துக்குப் பிறகு முன்பைவிட பிஸியாக நான் நடிப்பதை இந்த உலகம் காண வேண்டும் என சைதன்யா விரும்பினார். நிச்சயமற்ற தன்மை திரையுலகில் எதிர்காலத்தில்கூட ஏற்படலாம். அவரோடு நிறையச் சண்டை போடுவேன். ஆனால், நாங்க சண்டை போடுறோம் என்பது பக்கத்தில் இருக்கிறவங்களுக்குக்கூடத் தெரியாது. சத்தத்தைக் கூட்டாமல், இருவரும் ஜாலியாகச் சண்டை போட்டுப்போம். பார்ப்பவர்கள் ஏதோ ரகசியம் பேசிட்டு இருக்காங்கன்னு நினைப்பாங்க. குடும்பத்தில் என்னைப் பாதுகாப்பாக உணர வைத்ததுதான் அவர் எனக்குத் தந்திருக்கும் சிறந்த பரிசு’ என்றார்.
    சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு பயந்து தன்னுடைய படத்தை நிறுத்தி இருக்கிறார் பாலகிருஷ்ணா.
    வாழ்க்கை வரலாறு படங்களை எடுப்பதில் தென்னிந்திய இயக்குநர்களுக்கு இன்னும் அனுபவம் வேண்டும் என்று பாலிவுட் இயக்குநர்கள் கேலி பேசியதை உடைத்து சாதனை படைத்திருக்கிறது சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம். விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறும் படமாகிக் கொண்டிருக்கிறது.

    என்.டி.ஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இந்த படத்தை முதலில் இயக்க இருந்த இயக்குநர் விலகிய நிலையில் பாலகிருஷ்ணாவே இயக்கும் முடிவை எடுத்தார். ஆனால் சாவித்திரி படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த பாலகிருஷ்ணா தனது முயற்சியை சிலகாலத்துக்கு நிறுத்தி வைத்துள்ளாராம்.

    எடுத்தால் சாவித்திரி போல எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எடுக்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். பாலகிருஷ்ணா என்.டி.ஆராக நடிப்பதற்கு அவரது குடும்பத்தில் இருந்தே எதிர்ப்புகள் தோன்றின. அவரது அண்ணன் மகனான ஜுனியர் என்.டி.ஆர் கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இனிமேல் இதுபோன்று நடிகைகளின் வாழ்க்கை படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். #KeerthySuresh
    நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்திரி வேடத்தில் நடத்த நடிகையர் திலகம் என்ற படம் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் இந்த படம் மகாநதி என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

    நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தான நிர்வாகிகள் அவருக்கு லட்டு பிரசாதங்கள் வழங்கினர். தரிசனம் முடித்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான ‘நடிகையர் திலகம்’ என்ற தமிழ் படத்திலும், மகாநதி என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்தது அதிர்ஷ்டமாகவும் பெருமையாகவும் உள்ளது.

    இந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் திரைப்படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



    இனி இது போன்ற சுயசரிதை படங்களில் நடிக்க மாட்டேன்’ என்றார். கீர்த்தி சுரேஷை பார்க்க கோவில் அருகே ரசிகர்கள் சூழ்ந்து நின்றனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர்.
    நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த கீர்த்தி சுரேஷை, நடிகர் விஜய் பாராட்டி இருக்கிறார். #NadigaiyarThilagam #Vijay
    கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘நடிகையர் திலகம்’. இப்படம் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கி இருந்தார்.

    இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமில்லாமல், சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கீர்த்தி சுரேஷை அழைத்து பாராட்டினார். தற்போது விஜய்யும் கீர்த்தி சுரேஷை பாராட்டி இருக்கிறார்.

    தற்போது கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் டான்ஸ் ஆடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. 



    இந்நிலையில் ‘நடிகையர் திலகம்’ படத்தை பார்த்த விஜய், கீர்த்தி சுரேஷ் வெகுவாக பாராட்டியுள்ளார். #Vijay #KeerthySuresh
    பிரபல இயக்குனரான சிங்கீதம் சீனிவாச ராவ்விடம் பல பேர் கேட்ட கேள்விக்கு தற்போது பதில் அளித்திருக்கிறார். #NadigaiyarThilagam #SingeethamSrinivasaRao
    நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி இருக்கும் படம் ‘நடிகையர் திலகம்’. இப்படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

    இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமில்லாமல், சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். சாவித்ரியின் திரைப்பயணத்தில் முக்கியமான பலர் பற்றியும் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ்.



    அவர் தனது முகநூல் பக்கத்தில் "பலரும் நீங்கள் சாவித்ரியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறீர்களா, எனக் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் நான் எடுத்ததில்லை. ஆனால், இப்போது எடுத்துவிட்டேன்" என எழுதி, சாவித்ரி வேடத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் சிங்கீதம் சீனிவாச ராவ்.
    கீர்த்தி சுரேஷ் நடிப்பில், நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி இருக்கும் ‘நடிகையர் திலகம்’ படத்தின் விமர்சனம். #NadigaiyarThilagam #KeerthySuresh
    பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் நடிகையர் திலகம். சிறுவயதிலேயே தந்தையை இழந்த சாவித்திரி, தைரியத்துடனும், துடிப்புடனும் வாழ்கிறார். தன்னால் சாதிக்க முடியாது என்று சொல்பவர்களிடம் சாதித்து காட்டுகிறார்.

    ஜெமினி கணேசன் எடுத்த புகைப்படம் ஒன்று நாளிதழில் வர, அதன் மூலம் சாவித்திரிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படி முன்னேறினார்? அதன் பின் அவரது வாழ்க்கை எப்படி மாறியது? என்பதை படமாக இயக்கி இருக்கிறார்கள்.

    இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.



    தந்தையில்லாத சுட்டிப்பெண்ணாக ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து நடிப்பால் நம் அனைவரையும் கட்டிப்போட்டு, பின்னர் பரிதாப நிலைக்கு சென்று உயிரிழந்த சாவித்திரியை அப்படியே நம் கண் முன்னே நிறுத்திக் காட்டியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் நடிப்பு வாழ்க்கையில் இந்த படம் அவருக்கு ஒரு மணிமகுடம். கீர்த்தியுடன் போட்டி போட்டு நடித்துள்ள துல்கர் சல்மான்,  ஜெமினி கணேசனாகவே மாறியிருக்கிறார்.

    சமந்தா, விஜயதேவரகொண்டா, நாகசைதன்யா, மோகன் பாபு என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 1940 முதல் 1980 வரையில் பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை. அந்தந்த காலகட்டங்களுக்கே நம்மை கூட்டி செல்கின்றது டேனியின் கேமராவும் ஷிவம் மற்றும் அவினாஷின் கலை இயக்கமும். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவின் படத்தொகுப்பும் மிக்கி மேயரின் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.



    எல்லோருக்குமே தெரிந்த கதை தான். ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதையாலும் திறமையான இயக்கத்தாலும் நம்மை கட்டிப்போடுகிறார் இயக்குனர் நாக் அஷ்வின். மதன் கார்க்கியின் வசனங்கள் பல இடங்களில் கைதட்டல்களை அள்ளுகின்றன.



    சமந்தா, விஜய தேவரகொண்டா தேடல் மூலம் நமக்கு சாவித்திரியின் வாழ்க்கையை சொல்லத் தொடங்குவது சிறப்பு. சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக இருந்தாலும், சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் காதல் காட்சிகளையும் இணைத்திருப்பது ரசிக்கும்படியாக உள்ளது.

    மொத்தத்தில் ‘நடிகையர் திலகம்’ சிறந்த பொக்கிஷம்.
    போராட்டம் முடிந்து படங்கள் ரிலீசுக்கு படையெடுத்து வரும் நிலையில், இந்த வார ரிலீசில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘இரும்புத்திரை’ உள்ளிட்ட 4 படங்கள் ரிலீசாக இருக்கிறது. #IAK #Irumbuthirai
    திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 50 நாட்கள் புதிய படங்கள் திரைக்கு வரவில்லை. இதனால் ஏராளமான படங்கள் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது முன்பதிவு பதிவு அடிப்படையில் படங்கள் திரைக்கு வருகின்றன. இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் தனி குழு அமைக்கப்பட்டு அவர்களுடைய அங்கீகாரத்துடன் வாரந்தோறும் 3 அல்லது 4 படங்கள் திரைக்கு வருகின்றன. 

    வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ‘மெர்குரி’, ‘முந்தல்’, ‘தியா’, ‘பாடம்’, ‘பக்கா’, ‘அலைபேசி’, ‘காத்திருப்போர் பட்டியல்’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன.

    வருகிற 11-ந்தேதி முக்கிய படங்கள் திரைக்கு வருகின்றன. விஷால்-சமந்தா நடித்துள்ள ‘இரும்புத்திரை’, அரவிந்தசாமி - அமலாபால் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, அருள்நிதி - மகிமா நம்பியார் நடித்திருக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, இவை தவிர கீர்த்தி சுரேஷ், சமந்தா, துல்கர்சல்மான் நடித்துள்ள மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்‘ ஆகிய படங்கள் களம் இறக்கப்படுகின்றன.



    இந்த 4 படங்களும் நடிகர்கள், கதையம்சம் ஆகியவற்றின் அடிப்படையில் முக்கிய படங்களாக கருதப்படுகின்றன. எனவே வருகிற படங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IAK #Irumbuthirai #NadigaiyarThilagam

    தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், படத்தை பார்த்த அட்லி படக்குழுவை பாராட்டியிருக்கிறார். #NadigaiyarThilagam #KeerthySuresh
    மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் இன்று வெளியாகி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தா பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறார். 

    படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் அட்லியும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் போட்டுள்ளார். அதில் அட்லி கூறியிருப்பதாவது,



    உன்னதமான, உற்சாகமூட்டும், உயிர் காவியமான சாவித்ரி அம்மாவின் வாழ்க்கையை மீண்டும் உயிர் பெற வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக மாயாபசார் நடனம் மிகவும் அற்புதம். சமந்தா தம்பி நீ கலக்கிட்ட, படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். மறக்க முடியாத காவியத்தை வழங்கியதற்காக வைஜெயந்தி பிலிம்சுக்கு பாராட்டுக்கள்' 

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

    வைஜெயந்தி மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வருகிற 11-ஆம் தேதி படம் ரிலீசாக இருக்கிறது. NadigaiyarThilagam #Mahanati #KeerthySuresh #Samantha

    ×