என் மலர்
நீங்கள் தேடியது "Savithiri"
சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு பயந்து தன்னுடைய படத்தை நிறுத்தி இருக்கிறார் பாலகிருஷ்ணா.
வாழ்க்கை வரலாறு படங்களை எடுப்பதில் தென்னிந்திய இயக்குநர்களுக்கு இன்னும் அனுபவம் வேண்டும் என்று பாலிவுட் இயக்குநர்கள் கேலி பேசியதை உடைத்து சாதனை படைத்திருக்கிறது சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம். விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறும் படமாகிக் கொண்டிருக்கிறது.
என்.டி.ஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இந்த படத்தை முதலில் இயக்க இருந்த இயக்குநர் விலகிய நிலையில் பாலகிருஷ்ணாவே இயக்கும் முடிவை எடுத்தார். ஆனால் சாவித்திரி படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த பாலகிருஷ்ணா தனது முயற்சியை சிலகாலத்துக்கு நிறுத்தி வைத்துள்ளாராம்.
எடுத்தால் சாவித்திரி போல எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எடுக்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். பாலகிருஷ்ணா என்.டி.ஆராக நடிப்பதற்கு அவரது குடும்பத்தில் இருந்தே எதிர்ப்புகள் தோன்றின. அவரது அண்ணன் மகனான ஜுனியர் என்.டி.ஆர் கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இனிமேல் இதுபோன்று நடிகைகளின் வாழ்க்கை படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். #KeerthySuresh
நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்திரி வேடத்தில் நடத்த நடிகையர் திலகம் என்ற படம் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் இந்த படம் மகாநதி என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தான நிர்வாகிகள் அவருக்கு லட்டு பிரசாதங்கள் வழங்கினர். தரிசனம் முடித்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான ‘நடிகையர் திலகம்’ என்ற தமிழ் படத்திலும், மகாநதி என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்தது அதிர்ஷ்டமாகவும் பெருமையாகவும் உள்ளது.
இந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் திரைப்படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி இது போன்ற சுயசரிதை படங்களில் நடிக்க மாட்டேன்’ என்றார். கீர்த்தி சுரேஷை பார்க்க கோவில் அருகே ரசிகர்கள் சூழ்ந்து நின்றனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர்.






