search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drought"

    • முதுகுளத்தூர், கடலாடியில் வறட்சி பாதித்த பகுதிகளை வேளாண்மை இயக்குநர் ஆய்வு செய்தனர்.
    • பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை நம்பி மானாவாரியாக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதிகளில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நடப்பாண்டில் இந்த பகுதிகளில் சுமார் 95 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை நம்பி மானாவாரியாக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்ய வேண்டிய மழை போதிய அளவில் பெய்யாததால் வளர்ச்சி நிலை, தூர் பிடிக்கும் பருவம் மற்றும் பூக்கும் பருவம் என பல்வேறு நிலைகளில் பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    கண்மாய்களில் போதிய அளவு நீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டதால் நீர்பாசன வசதியுள்ள பகுதிகளிலும் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதனால் இந்த பகுதிகளில் பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்பட்டது.

    சில பகுதிகளில் பயிர்கள் ஆரம்பகட்ட வளர்ச்சிக்குப்பின் மணி பிடித்த நிலையில் ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக மணிகள் பதராக மாறி மகசூல் முற்றிலுமாக பாதிக்க ப்பட்டது.

    பாதிக்க ப்பட்ட விவசாயி களின் தொடர் கோரி க்கைக்கு பிறகு தற்போது வருவாய் த்துறை மற்றும் வேளா ண்மைத் துறைகளின் மூலம் வறட்சி பாதிப்புகள் குறித்த கண க்கெடுப்பு நடந்து வருகிறது.

    இந்த பணிகளை ஆய்வு செய்ய சென்னை யில் இருந்து வந்த வேளாண்மை இயக்குநர் அண்ணா துரை, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூலுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கடலாடி வட்டாரம் ஏனாதி, முதுகுளத்தூர் வட்டாரம் தேரிருவேலி ஆகிய கிராமங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

    சாகுபடி செய்யப்பட்ட பரப்பு, பாதிக்கப்பட்ட பரப்பு, பயிர் காப்பீடு செய்யப்பட்ட பரப்பு, பாதிப்பு விவரங்களை கணக்கெடுக்கும் பணிகள் குறித்து வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வறட்சி பாதிப்பு கணக்கெடுக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களை சாகு படிக்கு கொண்டு வரும் சிறப்புத் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயன சர்மா உடனிருந்தார். ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சரசுவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, செயற்பொறியாளர் சங்கர் ராஜ், வேளாண்மை உதவி இயக்குநர் (பயிர் காப்பீடு) செல்வம் மற்றும் முதுகுளத்தூர், கடலாடி வட்டார வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • மழை மற்றும் வறட்சியை தாக்கி வளர கூடிய ரகங்கள் பற்றி விளக்கினார்.
    • இயற்கை வழி விவசாயம், எலியை கட்டுப்படுத்தும் முறை.

    நாகப்பட்டினம்:

    ரிலையன்ஸ் அறக்கட்ட ளையின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தல் குறித்து வல்லுனர்கள் மற்றும் விவசாயிகளிடையே கலந்துரையாடல் நிகிழ்ச்சி நாகையில் நடைபெற்றது. ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்ட மேலாளர் மெய்கண்டன் தலைமை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முனைவர் திருமேனி தலைவர் மற்றும் பேராசிரியர் (பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை) பஜன்கோ வேளாண்மை கல்லூரி காரைக்கால் அவர்கள் கலந்துகொண்டு மழை மற்றும் வறச்சியை தாக்கி வளர கூடிய ரகங்கள் பற்றி விளக்கினார்.

    நெற்பயிரில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தல் குறித்து முனைவர் சந்திரசேகர் (தொழில்நுட்ப வல்லுனர் பயிர்பாதுகாப்பு துறை) வேளாண்மை அறிவியல் நிலையம்- சிக்கல், முனைவர் குமார ரெத்தினசபாதி முதல்வர்- ஆதிபாராசக்தி தோட்டக்கலைகல்லூரி வேலூர், முனைவர் காந்திபன் பூச்சியியல் துறை பேராசியியர் மற்றும் தலைவர் பஜன்கோ வேளாண்மை கல்லூரி காரைக்கால் ஆகியோர் விளக்கினார்கள்.

    நெற்பயிரில் உர மேலாண்மை, மண் வளத்தை பெருக்குதல், இயற்கை வழி விவசாயம், எலியை எளிய முறையில் கட்டுப்படுத்தல் குறித்து முனைவர் பாபு இணை பேராசிரியர் அண்ணாம லைப்பல்கலைக்கழகம் சிதம்பரம் அவர்கள் விளக்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அறக்கட்டளையின் அலுவலர் பிரவின்ராஜ் செய்திருந்தார்.

    வடமதுரை அருகே வறட்சியால் பாதித்த தென்னை மரங்களை வேரோடு வெட்டி செங்கல் சூளைக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.

    வடமதுரை, மே. 25-

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடந்து வருகிறது. கடந்த வருடம் கஜா புயலால் இப்பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து பாதிக்கப்பட்டன.

    இப்பகுதியில் அதிகா ரிகள் பார்வையிட்டு சேத மடைந்த தென்னையை ஓரளவுக்கு கணக்கிட்டு சென்றனர். ஆனால் பல விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து எதிர்பார்த்த பருவ மழையும் பெய்யாததால் தென்னை மரங்கள் பட்டுப் போய் கருகத் தொடங்கியது.

    இதனால் காய்ந்த மரங்களை விவசாயிகள் வேரோடு வெட்டி செங்கல் சூளைக்கு அனுப்பி வருகின்றனர். இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. சூளை உரிமையாளர்கள் நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வெட்டி விறகுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    ரூ. 50 முதல் ரூ.100 வரை விலை கொடுத்து இவை வாங்கிச் செல்லப்படுகிறது. நீண்ட நாள் பலன் தரக்கூடியது என்று நம்பி தென்னையை பயிரிட்ட விவசாயிகள் தற்போது கண்ணீர் வடித்து வருகின்றனர்.

    காரிமங்கலம் பாலக்கோடு பகுதியில் பருவமழை குறைவால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாங்காய் மகசூல் குறைவால், விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காரிமங்கலம்:

    பாலக்கோடு, காரிமங்கலம்,  அனுமந்தபுரம், கும்பாரஹள்ளி, மாரண்டஅள்ளி, பெல்ரம் பட்டி, ஜக்கசமுத்திரம், குண்டாங்காடு போன்ற பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்கோவா, பெங்களுரா, செந்துரா, நீலம், பங்கன்பள்ளி, சக்கரைகுட்டி, பீத்தர் என 20-க்கும் மேற்பட்ட ரகங்களில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மாங்காய் உள்ளூர் தேவைபோக வெளிமாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் மாம்பழம் சீசன் தொடங்கிய நிலையில் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மாசெடிகளை காப்பாற்ற ஒரு டிராக்டர் தண்ணீர் 900 ரூபாய் கொடுத்து வாங்கி ஊற்றியும் போதிய மகசூல் கிடைக்கவில்லை. மேலும் ஏக்கர் ஒன்றுக்கு கடந்த ஆண்டு 10 முதல் 15 டன் கிடைத்த மாங்காய் தற்போது 2 டன்னுக்கும் குறைவாகவே கிடைக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே, அரசு மாங்காய் விவசாயிகளுக்கு வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    செம்பரம்பாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு தரிசு நிலமாக காணப்படுகிறது. 15 ஆண்டுக்கு பின்னர் ஏரி மீண்டும் தற்போது வறண்டுள்ளது.
    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், சோழவரம், புழல், பூண்டி ஏரிகள் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது.

    மொத்தம் 6303 ஏக்கர் பரப்பளவில் ஏரி பரந்து விரிந்து காணப்படுகிறது. ஏரியில் 3645 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கலாம். நீர்மட்டம் 24 அடி ஆகும்.

    காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களில் இந்த ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமும் நடந்து வருகிறது.

    கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு வேகமாக குறைந்ததால் அங்கு கடந்த மாதம் 2-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் எடுப்பது நிறுத்தப்பட்டது.

    குளம் போல் ஆங்காங்கே தேங்கி இருந்த சிறிதளவு தண்ணீர் மட்டும் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டுக்கு தினமும் 6 கனஅடி வீதம் அனுப்பப்படுகிறது.

    அதுவும் சில நாட்களில் தண்ணீரில் அதிக அளவு மண் கலந்து வந்ததால் நிறுத்தப்பட்டது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு தரிசு நிலமாக காணப்படுகிறது.

    கடந்த 2004-ம் ஆண்டு இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் வறண்டு இருந்தது. தற்போது 15 ஆண்டுக்கு பின்னர் ஏரி மீண்டும் வறண்டு உள்ளது.

    இதேபோல் ஏற்கனவே சோழவரம் ஏரி வறண்டு விட்டது. அங்கிருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் எடுப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி ஏரியில் 153 மில்லியன் கனஅடியும் (மொத்த கொள்ளளவு 3231) மி.கன அடி) புழல் ஏரியில் 57 மி.கன அடியும் (3,300 மி.கனஅடி) தண்ணீர் இருக்கிறது.

    இந்த 2 ஏரிகளிலும் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டும் இந்த ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடியும் என்று தெரிகிறது.

    ஏற்கனவே சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏரிகள் முழுவதும் வறண்டு வருவதால் தண்ணீர் பிரச்சினை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    குடிநீர் பிரச்சினையை சமாளிக்க விவசாய கிணற்று நீர், கல்குவாரி நீர், கூடுதலாக எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    செம்பரம்பாக்கம் ஏரியை ரூ. 191 கோடிக்கு முழுவதுமாக தூர்வார ஆழப்படுத்த கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டத்தின்படி 6,303 ஏக்கர் பரப்பளவுக்கும், ஒரு மீட்டர் ஆழத்துக்கு தூர்வாரப்படும்.

    6 ஆண்டுகள் இந்த பணியை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் முழு கொள்ளளவிலும் தூர்வார முடியாது என்பதால் பகுதி பகுதியாக பணி செய்யப்படும். தூர்வாரும் பணியில் மொத்தம் ஒரு கோடியே 51 லட்சத்து 80 ஆயிரத்து 423 கன மீட்டர் மண் எடுக்கப்படும்.

    இதன் மூலம் ஏரியின் முழு கொள்ளளவான 3645 மி.கனஅடிக்கு மேல் கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க முடியும். இதன் மூலம் கோடை காலத்தில் கூடுதலாக சில மாதங்களுக்கு தண்ணீர் வழங்க முடியும்.

    தற்போது புழல் ஏரியில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் உடனடியாக பராமரிப்பு பணியை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    போதிய மழை பெய்யாததால், தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. #Chennai #Drought
    சென்னை:

    போதிய மழை பெய்யாததால், தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.

    இது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ காலத்தில் பெய்த மழையளவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில் கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 38 வட்டாரங்கள் பற்றாக்குறை மற்றும் மிக பற்றாக்குறை என்ற அளவில் மழைப்பொழிவை பெற்றுள்ளன.

    அங்கு நிலத்தடி நீர் குறைந்திருப்பதால் கோடை காலத்தில் நீரியல் வறட்சி ஏற்படும். எனவே இந்த வட்டாரங்கள் வறட்சி வட்டாரங்களாக அறிவிக்கப்படுகின்றன.

    அதுபோல மழைப்பொழிவை குறைவாக பெற்றுள்ள சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சீபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சேர்வலாறு அணையில் எஞ்சியிருந்த தண்ணீர் பாபநாசம் கீழ் அணை வழியாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுவதால் சேர்வலாறு அணையில் நீர்மட்டம் குறைந்து சகதி மட்டுமே 19.68 அடிக்கு உள்ளது. #Servalardam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நம்பியாறு அணை பகுதியில் இன்று காலை வரை அதிகபட்சமாக 35 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    திருக்குறுங்குடி நம்பியாறு பகுதியில் நேற்று இரவு சூறைக்காற்றும் வேகமாக வீசியது. அம்பையில் 11.4 மில்லி மீட்டரும், நாங்குநேரியில் 18 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 3 மில்லி மீட்டரும், கருப்பாநதி அணை பகுதியில் 1 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் லேசாக சாரல் மழை பெய்தது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 20.02 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து கால்வாய்களில் வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தென்மேற்கு பருவமழையில் சேர்வலாறு அணை முழு கொள்ளளவும் நிரம்பியது. இந்த நிலையில் சேர்வலாறு அணையில் இருந்து எவ்வளவு தண்ணீர் பாபநாசம் அணைக்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு தண்ணீர் பாபநாசம் அணைக்கு அனுப்பப்பட்டது.

    இதனால் பாபநாசம் அணையில் தற்போது 106.90 அடி நீர்மட்டம் உள்ளது. சேர்வலாறு அணையில் எஞ்சியிருந்த தண்ணீர் பாபநாசம் கீழ் அணை வழியாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் வேகமாக இறங்கி நேற்று முன்தினம் 51 அடியிலும், நேற்று 34.51 அடியாகவும் நீர்மட்டம் குறைந்தது. அது இன்று முற்றிலும் குறைந்து சகதி மட்டுமே 19.68 அடிக்கு உள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் தண்ணீர் எதுவும் இல்லை என்றும் நீர் இருப்பு விபரத்தில் தெரிவித்துள்ளனர். இதனால் சேர்வலாறு அணை இந்த ஆண்டில் 3-வது முறையாக வறண்டுள்ளது. அங்கு பராமரிப்பு பணி நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் அதிகாரப் பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    மணிமுத்தாறு அணையில் இன்று 84.65 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதுபோல மற்ற அணைகளில் நீர்மட்டம் நேற்றைய அளவிலேயே தொடர்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியாறு-35, நாங்குநேரி-18, அம்பை-11.4, சேரன்மகாதேவி-3, சங்கரன் கோவில்-2, மணி முத்தாறு-1.8, பாளை-1.4, கருப்பாநதி-1 #Servalardam

    போச்சம்பள்ளி பகுதியில் போதிய மழை இல்லாததால் வறட்சியின் பிடியில் மா மரங்கள் காய்ந்து கருகும் நிலையில் உள்ளன.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் பல்வேறு வகையான பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக "மா'' சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்ட அளவில் மா விளைச்சளில் போச்சம்பள்ளி தாலுக்கா 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகாவில் மழை பொய்தாலும் கேரளாவில் மழை புரட்டி போட்டது. ஆனால்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  உள்ள போச்சம்பள்ளி, வெப்பாலம்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் மா சாகுபடி செய்துள்ளனர். தற்போது, இந்த பகுதிகளில் மழை இல்லாததால் மா மரங்கள் காய்ந்து கருகும் நிலையில்  உருவாகியுள்ளது. 

    இந்த நிலையில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி மா மரங்களை காப்பாற்றினாலும் சில வாராங்களில் மீண்டும் தண்ணீர் இல்லாமல் மா மரங்கள் காய்ந்து விடுகிறது. மேலும், மற்ற பயிர்களை காப்பாற்ற, பாலேகுளி ஏரியில் இருந்து  கூடுதலாக மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் நிரம்பினால், ஆண்டு முழுவதும் தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும். இதன் மூலம் விவசாயம் செழிக்கும். 

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதற்கு தனி கவனம் செலுத்தி கால்வாய்களை சீரமைத்து போச்சம்பள்ளி பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    2016-2017-ம் ஆண்டில், வறட்சியால் பயிர் பாதிப்பு அடைந்த விவசாயிகளுக்கு இதுவரை ரூ.3,265 கோடியே 39 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பயிர் இழப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் காரீப் 2016 முதல், சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    2016-17-ம் ஆண்டு பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளும் காலத்தே நிறைவேற்ற தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளால் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை விரைந்து கணிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24.4.2017 அன்று தொடங்கி வைத்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    2016-17ம் ஆண்டில் மத்திய அரசால் சம்பா நெற்பயிரை பதிவு செய்வதற்கு நீட்டிக்கப்பட்ட காலத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையையும், காரீப் 2016 மற்றும் ரபி 2016-17-ம் ஆண்டில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையையும் வழங்க காப்பீட்டு நிறுவனங்களை அறிவுறுத்தும்படி பிரதமருக்கு, முதல்-அமைச்சர் கடிதம் எழுதினார்.


    அதைத் தொடர்ந்து இந்திய வேளாண் காப்பீட்டுக்கழகம் நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு ரூ.103.15 கோடி வழங்கியுள்ளது. மேலும், நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கும்படி மத்திய அரசின் அறிவுரைக்கிணங்க மற்ற காப்பீட்டு நிறுவனங்களான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பொது காப்பீட்டுக் கழகம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்டு பொதுக் காப்பீட்டுக் கழகம் ஆகிய நிறுவனங்கள் தற்போது இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

    அதன் அடிப்படையில், 2016-2017-ம் ஆண்டில், வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை ரூ.3,265 கோடியே 39 லட்சம் இழப்பீட்டுத் தொகை பயிர் காப்பீட்டு நிறுவனங்களால் ஒப்பளிக்கப்பட்டு 10 லட்சத்து 62 ஆயிரத்து 495 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    வறட்சியால் பாதிக்கப்பட்ட இதர தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடுதான் மிக அதிகபட்சமான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தந்து இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.

    முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, காப்பீட்டு நிறுவனங்களால் இன்னும் ஒப்புதல் வழங்கப்படவேண்டிய ரூ.453 கோடி இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக ஒப்புதல் வழங்குவதற்கு காப்பீட்டு நிறுவனங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்த நடவடிக்கைகள் அனைத்தும், விவசாயிகளின் அரணாக இந்த அரசு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மலைப் பகுதியில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வறட்சி நிலவியதால் தலையணை ஆறும் வறண்டுபோகும் நிலையில் உள்ளது.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற திருமலைநம்பி கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். மேலும் அங்கு நம்பியாறு ஓடுகிறது. நம்பி கோவில் அருகில் இருந்து மலையடிவாரத்தில் செக் போஸ்ட் வரையுள்ள நம்பியாற்றில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று குளிப்பது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருக்குறுங்குடி மலையில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து நெல்லை உள்ளிட்ட பிற பகுதிகளில் பெய்யும் அளவு கூட திருக்குறுங்குடி மலையில் மழை பெய்யவில்லை. கடும் வெயிலினால் மலையில் வெப்பம் நிலவுகிறது. இதையடுத்து நம்பியாற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    செக் போஸ்ட் அருகில் உள்ள தடுப்பணையை தாண்டி சிறிதளவு தண்ணீரே விழுகிறது. இந்த தண்ணீர் சுற்றுலா பயணிகள் குளிக்க ஏதுவாக இல்லை. தற்போது கோடை விடுமுறை என்பதால் திருக்குறுங்குடி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீர்வரத்து குறைந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதேபோல களக்காடு தலையணையிலும் குறைவாகவே தண்ணீர் குறைந்துவிட்டது. மலைப் பகுதியில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வறட்சி நிலவியதால் தலையணை ஆறும் வறண்டுபோகும் நிலையில் உள்ளது. மலைப்பகுதியில் மழை பெய்தால் மட்டுமே நம்பியாறு, தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×