search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெற்பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி
    X

    நெற்பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி

    • மழை மற்றும் வறட்சியை தாக்கி வளர கூடிய ரகங்கள் பற்றி விளக்கினார்.
    • இயற்கை வழி விவசாயம், எலியை கட்டுப்படுத்தும் முறை.

    நாகப்பட்டினம்:

    ரிலையன்ஸ் அறக்கட்ட ளையின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தல் குறித்து வல்லுனர்கள் மற்றும் விவசாயிகளிடையே கலந்துரையாடல் நிகிழ்ச்சி நாகையில் நடைபெற்றது. ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்ட மேலாளர் மெய்கண்டன் தலைமை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முனைவர் திருமேனி தலைவர் மற்றும் பேராசிரியர் (பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை) பஜன்கோ வேளாண்மை கல்லூரி காரைக்கால் அவர்கள் கலந்துகொண்டு மழை மற்றும் வறச்சியை தாக்கி வளர கூடிய ரகங்கள் பற்றி விளக்கினார்.

    நெற்பயிரில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தல் குறித்து முனைவர் சந்திரசேகர் (தொழில்நுட்ப வல்லுனர் பயிர்பாதுகாப்பு துறை) வேளாண்மை அறிவியல் நிலையம்- சிக்கல், முனைவர் குமார ரெத்தினசபாதி முதல்வர்- ஆதிபாராசக்தி தோட்டக்கலைகல்லூரி வேலூர், முனைவர் காந்திபன் பூச்சியியல் துறை பேராசியியர் மற்றும் தலைவர் பஜன்கோ வேளாண்மை கல்லூரி காரைக்கால் ஆகியோர் விளக்கினார்கள்.

    நெற்பயிரில் உர மேலாண்மை, மண் வளத்தை பெருக்குதல், இயற்கை வழி விவசாயம், எலியை எளிய முறையில் கட்டுப்படுத்தல் குறித்து முனைவர் பாபு இணை பேராசிரியர் அண்ணாம லைப்பல்கலைக்கழகம் சிதம்பரம் அவர்கள் விளக்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அறக்கட்டளையின் அலுவலர் பிரவின்ராஜ் செய்திருந்தார்.

    Next Story
    ×