என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோடை வெயில் சுட்டெரிப்பதால் வறண்டுபோன திருக்குறுங்குடி நம்பியாறு
Byமாலை மலர்16 May 2018 9:02 AM GMT
மலைப் பகுதியில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வறட்சி நிலவியதால் தலையணை ஆறும் வறண்டுபோகும் நிலையில் உள்ளது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற திருமலைநம்பி கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். மேலும் அங்கு நம்பியாறு ஓடுகிறது. நம்பி கோவில் அருகில் இருந்து மலையடிவாரத்தில் செக் போஸ்ட் வரையுள்ள நம்பியாற்றில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று குளிப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருக்குறுங்குடி மலையில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து நெல்லை உள்ளிட்ட பிற பகுதிகளில் பெய்யும் அளவு கூட திருக்குறுங்குடி மலையில் மழை பெய்யவில்லை. கடும் வெயிலினால் மலையில் வெப்பம் நிலவுகிறது. இதையடுத்து நம்பியாற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
செக் போஸ்ட் அருகில் உள்ள தடுப்பணையை தாண்டி சிறிதளவு தண்ணீரே விழுகிறது. இந்த தண்ணீர் சுற்றுலா பயணிகள் குளிக்க ஏதுவாக இல்லை. தற்போது கோடை விடுமுறை என்பதால் திருக்குறுங்குடி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீர்வரத்து குறைந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதேபோல களக்காடு தலையணையிலும் குறைவாகவே தண்ணீர் குறைந்துவிட்டது. மலைப் பகுதியில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வறட்சி நிலவியதால் தலையணை ஆறும் வறண்டுபோகும் நிலையில் உள்ளது. மலைப்பகுதியில் மழை பெய்தால் மட்டுமே நம்பியாறு, தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற திருமலைநம்பி கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். மேலும் அங்கு நம்பியாறு ஓடுகிறது. நம்பி கோவில் அருகில் இருந்து மலையடிவாரத்தில் செக் போஸ்ட் வரையுள்ள நம்பியாற்றில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று குளிப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருக்குறுங்குடி மலையில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து நெல்லை உள்ளிட்ட பிற பகுதிகளில் பெய்யும் அளவு கூட திருக்குறுங்குடி மலையில் மழை பெய்யவில்லை. கடும் வெயிலினால் மலையில் வெப்பம் நிலவுகிறது. இதையடுத்து நம்பியாற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
செக் போஸ்ட் அருகில் உள்ள தடுப்பணையை தாண்டி சிறிதளவு தண்ணீரே விழுகிறது. இந்த தண்ணீர் சுற்றுலா பயணிகள் குளிக்க ஏதுவாக இல்லை. தற்போது கோடை விடுமுறை என்பதால் திருக்குறுங்குடி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீர்வரத்து குறைந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதேபோல களக்காடு தலையணையிலும் குறைவாகவே தண்ணீர் குறைந்துவிட்டது. மலைப் பகுதியில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வறட்சி நிலவியதால் தலையணை ஆறும் வறண்டுபோகும் நிலையில் உள்ளது. மலைப்பகுதியில் மழை பெய்தால் மட்டுமே நம்பியாறு, தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X