search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வறண்டது"

    • வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது
    • கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட்டது

    நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும்.

    ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்ய வில்லை. இதனால் அணைகளின் நீர்மட்டம், பாசன குளங்களிலும் தண்ணீர் குறைவாகவே காணப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நாளுக்கு நாள் நீர்மட்டம் சரிந்து வருகிறது. ஏற்கனவே கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட்டது.

    தொடர்ந்து பாசனத்திற்காக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டமும் சரிந்து காணப்படுகிறது. அணை தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையும் கடந்த 2 மாதங்களாக மைனஸ் அடியில் இருந்து வருகிறது. இதனால் அணை குளம் போல் காட்சிய ளிக்கிறது.

    அணைகளின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். குடிநீர் பஞ்சமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தலை விரித்து ஆடுகிறது. குமரி மாவட்டத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை 332 மில்லி மீட்டர் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 103.9 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. வழக்கத்தை விட 69 சதவீதம் மழை குறைவாகவே பெய்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையை தண்ணீரை நம்பி விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் ஈடுபட்டனர்.

    மாவட்டம் முழுவதும் 6000 ஹெக்டேரில் சாகுபடி பணி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.

    பறக்கை, சுசீந்திரம் பகுதிகளில் அறுவடைப் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் கடைமடை பகுதிகளில் இன்னும் நெற்பயிர் கள் தண்ணீர் இன்றிவாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுப் பணித்துறை அதிகாரிகள் கடைமடை கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 21.75 அடியாக உள்ளது. அணைக்கு 236 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 706 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. அணை யில் இருந்து வெளி யேற்றப்படும் தண்ணீர் தோவாளை சானல், அனந்தனார் புத்தனார் சானல் மற்றும் பாசன சானல்களில் ஷிப்டுமுறை யில் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 25.90 அடியாக உள்ளது. அணைக்கு 30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 11.38 அடியாகவும் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 10.70 அடியாகவும், மாம் பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 12.60 அடியாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கடுமையாக சரிந்தது. மாம்பழத்துறையாறு அணை குறைந்த அளவு தண்ணீருடன் வறண்டு காணப்படுகிறது.

    ×