search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver arrested"

    • வசந்தகுமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ளார்.
    • கருணா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தை சரமாரியாக குத்தினார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கொக்குபாளையத்தை சேர்ந்தவர் வசந்த் என்கிற வசந்தகுமார் (வயது 18). இவர் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ளார். அதே ஊரை சேர்ந்த கருணா (28), வசந்தை மது குடிக்க அழைத்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று மது பாட்டில்கள் வாங்கிக்கொண்டு விழுப்புரம் அருகே உள்ள திருப்பாச்சனூருக்கு சென்று மதுஅருந்தினர். போதையில் லாரி டிரைவரான கருணா அந்த வழியே சென்றவர்களிடம் வம்புச் சண்டையிழுத்தார்.

    இதில் கருணாவை சமாதானப்படுத்த வசந்த் முயற்சித்தார். கருணா சமாதானம் ஆகாததால் அவரை அங்கேயே விட்டுவிட்டு, கருணாவின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வசந்த் வீடு திரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் கருணா வசந்த் வீட்டுக்கு வந்தார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த வசந்த் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்தத புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரிடிரைவர் கருணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது54), ஆட்டோ டிரைவர். இவர் அண்ணா பஸ் நிலையம் அருகில் நின்றபோது சிறுவன் உள்பட 2பேர் அவரிடம் தகராறு செய்தனர். அப்போது ரவிக்குமாரை, 2 பேரும் தாக்கினர்.

    இது குறித்து ரவிக்குமார் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தாக்கிய சக்கிமங்கலம் இளமனூரை சேர்ந்த வினோத்குமார் (32) என்பவரையும், 17 வயது சிறுவனையும் கைது செய்தனர்.

    • டிரைவர் மாணவியின் வாயில் துணியை வைத்து அழுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
    • கழிவறைக்கு சென்ற தங்களது மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் தனது மகளை தேடி வெளியே சென்றார்.

    கோவை:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் மாணவி வீட்டின் வெளியே உள்ள கழிப்பறைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

    அப்போது அருகே உள்ள வீட்டில் வசித்து வரும் டிரைவரான முபாரக்(வயது27) என்பவர் மாணவியை அவரது வீட்டிற்குள் தூக்கி சென்றார். பின்னர் டிரைவர் மாணவியின் வாயில் துணியை வைத்து அழுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    கழிவறைக்கு சென்ற தங்களது மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் தனது மகளை தேடி வெளியே சென்றார்.

    அப்போது பக்கத்து வீட்டில் இருந்து தனது மகளின் முனகல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் கதவை தள்ளி உள்ளே சென்ற போது வாலிபர், மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை மீட்டனர். மேலும் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவருக்கு தர்மஅடி கொடுத்து ஆனைமலை போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பாலமுருகன், மாணவியை வீட்டில் இருந்து கடத்தி சென்று, திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
    • தவளக்குப்பத்தில் வாடகை வீட்டில் பாலமுருகனுடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை தவளக்குப்பம் பகுதியில் பிளஸ்-2 தேர்வு எழுதி விட்டு, வீட்டில் இருந்த 17 வயது மாணவி கடந்த 3-ந்தேதி மாயமானார்.

    அவரது தாய் அளித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மாணவியை காதலித்து வந்த டிரைவரான பூரணாங்குப்பம் காமராஜ் நகரை சேர்ந்த புண்ணியக்கோடி மகன் பாலமுருகன் (21). மாணவியை வீட்டில் இருந்து கடத்தி சென்று, திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    தவளக்குப்பத்தில் வாடகை வீட்டில் பாலமுருகனுடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

    குழந்தைகள் திருமண தடை சட்டம், கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

    • போலீசார் விசாரணை
    • மது வாங்கி தராததால் ஆத்திரம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த புதிய அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன்(வயது 38) சென்னையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் உமாநாத்(32) டிரைவர்.

    இந்த நிலையில் உமாநாத் , தயாளனிடம் மது வாங்கி கொடு என கேட்டதாகவும், அதற்கு தயாளன் மறுத்த தாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த உமாநாத் இரும்பு ராடால் தயாளனை தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த தயாளன் ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து தயாளன் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து உமாநாத்தை கைது செய்தனர்.

    • நல்லதம்பி டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • ரூ.2 லட்சம் நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் திருட்டு போனது.

    ஊட்டி,

    ஊட்டி தலைகுந்தா பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 30). இவர் அங்கு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். தனது பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் நல்லதம்பியின் சகோதரி விபத்தில் சிக்கியதால், அவரை பார்ப்பதற்காக பெற்றோருடன் உடுமலைக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நல்லதம்பி உள்ளே சென்று பார்த்தார். அப்போது ரூ.2 லட்சம் நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் திருட்டு போனது. இதுகுறித்து அவர் புதுமந்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஊட்டி தலைகுந்தாவை சேர்ந்த டிரைவர் சாகுல் ஹமீது என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மாணவியை தந்தை ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா சீக்கரஜ புரம் பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 46). ஆற்காடு மாசா பேட்டை அண்ணா நகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகவேலை செய்து வருகிறார்.

    அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் கணபதி என்பவரது 9 வயது மகள் நகராட்சி பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் அன்று கலர் உடையில் பள்ளிக்கு வந்துள்ளாள்.

    ஆசிரியர் நித்தியானந்தம் ஏன் கலர் உடையில் வந்தாய் என கேட்டுள்ளார். இதை மனதில் வைத்துக்கொண்டு மாணவியின் தந்தை கணபதி நேற்று பள்ளிக்கு வந்த ஆசி ரியர் நித்தியானந்தத்தை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் கையில் வைத்திருந்த பிளேடை காட்டி ஒழித்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த ஆசிரியர் ஆற்காடு அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து ஆசிரியர் நித்தியானந்தம் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக் குப் பதிவு செய்து மாணவியின் தந்தை கணபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிராக்டர் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • டிராக்டர் டிரைவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வெள்ளப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது 3 வயது பேத்தியை அழைத்துக் கொண்டு வானமாதேவி கரும்பு தோட்டத்தில் கூலிக்கு கரும்பு வெட்டுவதற்கு சென்றனர்.

    கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர் அருகில் பேத்தியை விட்டு சென்று விட்டு கரும்பு வெட்டி முடித்த பிறகு வந்து பார்த்த போது தனது பேத்தியை டிராக்டர் டிரைவர் மதி பாலியல் தொந்தரவு செய்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் மதியை கைது செய்தார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • மதுரையில் 10-ம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து மிரட்டினார்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை

    மதுரை கீரைத்துறை இருளப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துராமலிங்கம் (வயது 25), ஆட்டோ டிரைவர். இவர் அனுப்பானடியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார்.

    அவர் மாணவியை கடந்த 6 மாதமாக பின்தொடர்ந்து சென்று அவரிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். அவரது ஒருதலை காதலை மாணவி ஏற்றுக்கொள்ள வில்லை. இருந்தபோதிலும், முத்துராமலிங்கம் மாணவியை பின்தொடர்ந்து வந்தார்.

    இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி யுள்ளார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவரை அவதூறாக பேசி கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி மதுரை அனைத்து மகளிர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் முத்துராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    • சந்தேகம் அடைந்த கோபிநாத் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரிடம் புகார் அளித்தார்.
    • சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க எஸ்.பி.சுதாகர் உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காஞ்சி சாலையில் பிரபல பட்டு உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் கோபி நாத். இவருக்கு ஒருவர் போன் செய்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பேசுவதாக கூறினார்.

    பின்னர் அதே அழைப்பை வாங்கி மற்றொருவர் பேசினார். அவர், தான் மாவட்ட கலெக்டரின் சிறப்பு உதவியாளர் என்றும் அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், வங்கி கணக்கிற்கு ரூ.75 ஆயிரம் பணம் அனுப்புமாறும் கூறி வங்கி கணக்கு எண்ணை அனுப்பினார்.

    இதில் சந்தேகம் அடைந்த கோபிநாத் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரிடம் புகார் அளித்தார். இதனை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க எஸ்.பி.சுதாகர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் சதீஷ், ஆல்பர்ட் ஜான், ஆசைத்தம்பி குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்தானம் என்கிற சந்தான பாரதி ஆள் மாறாட்டம் செய்து தொலைபேசியில் பணம் கேட்டது தெரிய வந்தது. அவர் டிரைவர் ஆவார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் வேறு ஒரு வழக்கில் தஞ்சாவூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருவது தெரியவந்தது. இந்த நிலையில், மீண்டும் அவரை இவ்வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

    சந்தானம் இதே போல் பல்வேறு மாவட்ட கலெக்டர்களின் பெயரை கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

    இவரது 14 வயது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர், பிப்.9-ககள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா நன்னவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). விவசாயி. இவரது 14 வயது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்தார். புகாரின் பேரில் காணமல் போன 9-ம் வகுப்பு மாணவியை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இதில் அதே ஊரில் செங்கல் சூளையில் டிரைவராக பணியாற்றிய நடையன் (21) என்பவர் மாணவியிடம் ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் நடையனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் செங்கல்பட்டு பகுதியில் பணி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவருடன் அந்த மாணவியை தங்க வைத்திருப்பதும் தெரியவந்தது.தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் செங்கல்பட்டு அருகேயிருந்த செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த டிரைவர் நடையனை போக்சோ சட்டடத்தின் கீழ்கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 9-ம் வகுப்பு மாணவியை மீட்டு விழுப்புரம் அரசு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

    • சிடிசி டெப்போ பின்புறமுள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்திய டிரைவர் சுந்தரேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சுதா காலனியைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்( வயது 34) திருமணமாகவில்லை.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ஒருவருடன் சிடிசி டெப்போ பின்புறமுள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.

    அப்போ து அவரது அருகே உள்ள மேஜையில் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த டிரைவர் சுந்தரே ஸ்வரன் (42) என்பவர் அவரது நண்பர்களுடன் மது குடி த்துக் கொண்டிருந்தார் .

    அவர் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்.

    இதனை சஞ்சய் குமார் கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .

    பின்னர் சஞ்சய் குமார் த னது மோ ட்டா ர் சைக்கி ளில் இடை யர்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த சுந்தரேஸ்வரன் தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சஞ்சய் குமாரின் கழுத்து, முதுகு ,தொடை ஆகிய பகுதிகளில் குத்தினார்.

    பின்னர் அங்கு இருந்து தப்பி சென்றார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சஞ்சய் குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்திய டிரைவர் சுந்தரேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×