என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெல்டரை தாக்கிய டிரைவர் கைது
- போலீசார் விசாரணை
- மது வாங்கி தராததால் ஆத்திரம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த புதிய அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன்(வயது 38) சென்னையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் உமாநாத்(32) டிரைவர்.
இந்த நிலையில் உமாநாத் , தயாளனிடம் மது வாங்கி கொடு என கேட்டதாகவும், அதற்கு தயாளன் மறுத்த தாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த உமாநாத் இரும்பு ராடால் தயாளனை தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த தயாளன் ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து தயாளன் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து உமாநாத்தை கைது செய்தனர்.
Next Story






