search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் ஜாமீனில் வெளிவந்த ரவுடியை கத்தியால் குத்திய லாரி டிரைவர் கைது
    X

    பண்ருட்டியில் ஜாமீனில் வெளிவந்த ரவுடியை கத்தியால் குத்திய லாரி டிரைவர் கைது

    • வசந்தகுமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ளார்.
    • கருணா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தை சரமாரியாக குத்தினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கொக்குபாளையத்தை சேர்ந்தவர் வசந்த் என்கிற வசந்தகுமார் (வயது 18). இவர் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ளார். அதே ஊரை சேர்ந்த கருணா (28), வசந்தை மது குடிக்க அழைத்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று மது பாட்டில்கள் வாங்கிக்கொண்டு விழுப்புரம் அருகே உள்ள திருப்பாச்சனூருக்கு சென்று மதுஅருந்தினர். போதையில் லாரி டிரைவரான கருணா அந்த வழியே சென்றவர்களிடம் வம்புச் சண்டையிழுத்தார்.

    இதில் கருணாவை சமாதானப்படுத்த வசந்த் முயற்சித்தார். கருணா சமாதானம் ஆகாததால் அவரை அங்கேயே விட்டுவிட்டு, கருணாவின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வசந்த் வீடு திரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் கருணா வசந்த் வீட்டுக்கு வந்தார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த வசந்த் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்தத புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரிடிரைவர் கருணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×