search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை டிராக்டர் டிரைவர் போக்சோவில் கைது
    X

    3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை டிராக்டர் டிரைவர் போக்சோவில் கைது

    • 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிராக்டர் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • டிராக்டர் டிரைவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வெள்ளப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது 3 வயது பேத்தியை அழைத்துக் கொண்டு வானமாதேவி கரும்பு தோட்டத்தில் கூலிக்கு கரும்பு வெட்டுவதற்கு சென்றனர்.

    கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர் அருகில் பேத்தியை விட்டு சென்று விட்டு கரும்பு வெட்டி முடித்த பிறகு வந்து பார்த்த போது தனது பேத்தியை டிராக்டர் டிரைவர் மதி பாலியல் தொந்தரவு செய்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் மதியை கைது செய்தார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×