search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager was stabbed"

    • சிடிசி டெப்போ பின்புறமுள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்திய டிரைவர் சுந்தரேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சுதா காலனியைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்( வயது 34) திருமணமாகவில்லை.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ஒருவருடன் சிடிசி டெப்போ பின்புறமுள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.

    அப்போ து அவரது அருகே உள்ள மேஜையில் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த டிரைவர் சுந்தரே ஸ்வரன் (42) என்பவர் அவரது நண்பர்களுடன் மது குடி த்துக் கொண்டிருந்தார் .

    அவர் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்.

    இதனை சஞ்சய் குமார் கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .

    பின்னர் சஞ்சய் குமார் த னது மோ ட்டா ர் சைக்கி ளில் இடை யர்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த சுந்தரேஸ்வரன் தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சஞ்சய் குமாரின் கழுத்து, முதுகு ,தொடை ஆகிய பகுதிகளில் குத்தினார்.

    பின்னர் அங்கு இருந்து தப்பி சென்றார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சஞ்சய் குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்திய டிரைவர் சுந்தரேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×