search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து மிரட்டல்
    X

    10-ம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து மிரட்டல்

    • மதுரையில் 10-ம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து மிரட்டினார்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை

    மதுரை கீரைத்துறை இருளப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துராமலிங்கம் (வயது 25), ஆட்டோ டிரைவர். இவர் அனுப்பானடியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார்.

    அவர் மாணவியை கடந்த 6 மாதமாக பின்தொடர்ந்து சென்று அவரிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். அவரது ஒருதலை காதலை மாணவி ஏற்றுக்கொள்ள வில்லை. இருந்தபோதிலும், முத்துராமலிங்கம் மாணவியை பின்தொடர்ந்து வந்தார்.

    இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி யுள்ளார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவரை அவதூறாக பேசி கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி மதுரை அனைத்து மகளிர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் முத்துராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    Next Story
    ×