search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் கைது
    X

    மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் கைது

    • டிரைவர் மாணவியின் வாயில் துணியை வைத்து அழுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
    • கழிவறைக்கு சென்ற தங்களது மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் தனது மகளை தேடி வெளியே சென்றார்.

    கோவை:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் மாணவி வீட்டின் வெளியே உள்ள கழிப்பறைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

    அப்போது அருகே உள்ள வீட்டில் வசித்து வரும் டிரைவரான முபாரக்(வயது27) என்பவர் மாணவியை அவரது வீட்டிற்குள் தூக்கி சென்றார். பின்னர் டிரைவர் மாணவியின் வாயில் துணியை வைத்து அழுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    கழிவறைக்கு சென்ற தங்களது மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் தனது மகளை தேடி வெளியே சென்றார்.

    அப்போது பக்கத்து வீட்டில் இருந்து தனது மகளின் முனகல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் கதவை தள்ளி உள்ளே சென்ற போது வாலிபர், மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை மீட்டனர். மேலும் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவருக்கு தர்மஅடி கொடுத்து ஆனைமலை போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×