search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி கற்பழிப்பு"

    • கடந்த ஆகஸ்டு மாதம் மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
    • குழந்தையை மேல் சிகிச்கைக்காக சிக்கப்பல்லாப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பாகேபல்லி தாலுகா கன்னம்பள்ளியை சேர்ந்த 14 வயதுடைய ஒரு மாணவி தும்கூர் மாவட்டம் மதுகிரியில் உள்ள சமூக நலத்துறை விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று விடுதியில் இருந்த மாணவிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து விடுதி காப்பாளர் மாணவியின் தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக மாணவியின் தாய் விடுதிக்கு வந்து பாகேபல்லியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

    அப்போது மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைகேட்டு மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு சுமார் 2.2 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த குழந்தையை மேல் சிகிச்கைக்காக சிக்கப்பல்லாப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாகேப்பல்லி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிக்கும் அவர் படித்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த ஒரு மாணவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மூலம் மாணவி கர்ப்பம் அடைந்ததும் தெரியவந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அந்த நேரத்தில் அவரது கர்ப்பம் தெரியவில்லை. மேலும் மாணவி யாரிடமும் இதைபற்றி சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமாக ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற போதுதான், அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து 10-ம் வகுப்பு மாணவரை தேடிவருகின்றனர். மேலும் இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் காரணமாக விடுதி வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    • அஜித்குமார் தனக்கு மின்சார அடுப்பு வேண்டும் என கல்லூரி மாணவியிடம் கேட்டார்.
    • அதிகாலை நேரத்தில் மாணவிக்கு நினைவு திரும்பியது.

    மும்பை:

    மும்பை செம்பூர் போஸ்டல் காலனி பகுதியில் பாபா அணு ஆராய்ச்சி மைய ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள வீட்டில் பாபா அணு ஆராய்ச்சி மைய ஊழியரின் 19 வயது மகள் தங்கியிருந்து, அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். வேலை காரணமாக கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் வேறு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். கல்லூரி மாணவி தங்கி இருந்த வீட்டின் அருகில் அஜித்குமார் (26) என்ற வாலிபர் வசித்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால் மாணவி, அஜித்குமாருடன் நட்பாக பேசி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு அஜித்குமார் குடும்பத்தினர் வெளியே சென்று இருந்தனர். அஜித்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். எனவே அவர் கோவண்டி பகுதியை சேர்ந்த தனது நண்பர் பிரபாகரை(30) வீட்டுக்கு அழைத்தாா்.

    இந்தநிலையில் அஜித்குமார் தனக்கு மின்சார அடுப்பு வேண்டும் என கல்லூரி மாணவியிடம் கேட்டார். மாணவி அடுப்பை கொடுக்க அஜித்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் அஜித்குமார், அவரது நண்பர் பிரபாகரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் 2 பேரும் மாணவிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்தனர். இதனை அறியாத மாணவி குளிர்பானத்தை குடித்து மயங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வாலிபர்கள் 2 பேரும் சேர்ந்து மாணவியை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அதிகாலை நேரத்தில் மாணவிக்கு நினைவு திரும்பியது. தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்த அவர், உடனடியாக சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர், பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். மேலும் செம்பூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.

    இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பயந்துபோன மாணவி தனக்கு நேர்ந்து வரும் கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்தார்.
    • கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், கசவநல்லாத்தூரை சேர்ந்த 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆரா என்கிற ஆரோக்கியராஜ் (23) என்பவர் பால் பாக்கெட் போட்டு வந்தார். அப்போது மாணவியுடன், ஆரோக்கியராஜ் நெருங்கி பழகினார். மேலும் காதலிப்பதாகவும் ஆசைவார்த்தை கூறினார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவியுடன் ஆரோக்கியராஜ் உல்லாசமாக இருந்தார். தொடர்ந்து அவர் காதல் ஆசை காட்டி மாணவியுடன் நெருக்கமாக இருந்தார்.

    இதற்கிடையே இதுபற்றி அறிந்த அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுவன் மற்றும் சுப்பு என்கிற சுகுவனேஸ்வரன் (22) ஆகிய இருவரும் நெருங்கி பழகினர். அவர்கள் மாணவியின் காதல் விவகாரம் தெரிந்து இதுபற்றி வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் காதல் ஆசைவார்த்தை கூறி மாணவனும், ஆரோக்கியராஜூம் மாணவியை சீரழித்தனர். பயந்துபோன மாணவி தனக்கு நேர்ந்து வரும் கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்தார்.

    இதற்கிடையே கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாணவியின் நிலை குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் விசாரித்தபோதுதான் ஆரோக்கியராஜ், மாணவன் மற்றும் சுகுவனேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து மாணவியை சீரழித்து வந்தது தெரிந்தது.

    இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆராக்கியராஜ், மாணவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுகுவனேஸ்வரனை தேடி வருகின்றனர்.

    விசாரணையில் மாணவியை கடந்த 2 ஆண்டாக அவர்கள் தொடர்ந்து சீரழித்து வந்திருப்பது தெரியவந்தது.

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், கசவநல்லாத்தூரை சேர்ந்த 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆரா என்கிற ஆரோக்கியராஜ் (23) என்பவர் பால் பாக்கெட் போட்டு வந்தார். அப்போது மாணவியுடன், ஆரோக்கியராஜ் நெருங்கி பழகினார். மேலும் காதலிப்பதாகவும் ஆசைவார்த்தை கூறினார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவியுடன் ஆரோக்கியராஜ் உல்லாசமாக இருந்தார். தொடர்ந்து அவர் காதல் ஆசை காட்டி மாணவியுடன் நெருக்கமாக இருந்தார்.

    இதற்கிடையே இதுபற்றி அறிந்த அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுவன் மற்றும் சுப்பு என்கிற சுகுவனேஸ்வரன் (22) ஆகிய இருவரும் நெருங்கி பழகினர். அவர்கள் மாணவியின் காதல் விவகாரம் தெரிந்து இதுபற்றி வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் காதல் ஆசைவார்த்தை கூறி மாணவனும், ஆரோக்கியராஜூம் மாணவியை சீரழித்தனர். பயந்துபோன மாணவி தனக்கு நேர்ந்து வரும் கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்தார்.

    இதற்கிடையே கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாணவியின் நிலை குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் விசாரித்தபோதுதான் ஆரோக்கியராஜ், மாணவன் மற்றும் சுகுவனேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து மாணவியை சீரழித்து வந்தது தெரிந்தது.

    இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆராக்கியராஜ், மாணவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுகுவனேஸ்வரனை தேடி வருகின்றனர்.

    விசாரணையில் மாணவியை கடந்த 2 ஆண்டாக அவர்கள் தொடர்ந்து சீரழித்து வந்திருப்பது தெரியவந்தது.

    • திருமணத்துக்கு மறுத்ததோடு கர்ப்பத்திற்கு நான் காரணம் இல்லை என்று கூறி மிரட்டி வருகிறார்.
    • காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவி புகார் மனு அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தாய் சென்னையில் வேலை செய்து வருகிறார். நான் எனது தந்தையுடன் திருப்பூரில் தங்கி இருந்து படித்து வந்தேன்.

    கல்லூரியில் என்னுடன் படிக்கும் வெற்றிவேல் (வயது 17) என்பவர் என்னுடன் நண்பராக பழகி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது தந்தை வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இதனை அறிந்து கொண்ட வெற்றிவேல் எனது வீட்டிற்கு வந்து நாம் இருவரும் சேர்ந்து படிக்கலாம் என கூறினார்.

    அப்போது வெற்றிவேல் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னுடன் உல்லாசமாக இருந்தார். இதே போல் மீண்டும் ஒருமுறை உல்லாசத்திற்கு அழைத்த போது நான் மறுத்தேன். உடனே அவர், ஏற்கனவே உல்லாசமாக இருந்ததை வெளியே சொல்லி விடுவதாக மிரட்டி பலமுறை என்னுடன் உல்லாசமாக இருந்தார்.

    இதனால் நான் கர்ப்பமானேன். இது குறித்து வெற்றிவேலிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் மறுத்ததோடு இந்த கர்ப்பத்திற்கு நான் காரணம் இல்லை என்று கூறி என்னை மிரட்டி வருகிறார்.

    எனவே என்னை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இந்த மனு குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கல்லூரி மாணவர் வெற்றிவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    • ஆசிரியர் ரெட்டி நாகைய்யா பலமுறை மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் மாணவி கர்ப்பமானார்.
    • நிறைமாத கர்ப்பிணியான மாணவிக்கு கடந்த சனிக்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் கதிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி.

    இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மாணவி ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு தண்ணீர் குடிக்க சென்றார்.

    அப்போது அங்கிருந்த ஆசிரியர் ரெட்டி நாகைய்யா மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

    இதனால் பயந்து போன மாணவி இது குறித்து வெளியில் யாரிடமும் கூறவில்லை.

    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் ரெட்டி நாகைய்யா பலமுறை மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் மாணவி கர்ப்பமானார்.

    இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மாணவிக்கு கடந்த சனிக்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பிரசவத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது மாணவிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    அவரை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் ரெட்டி நாகையா மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது ராமநாதபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் 16 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 10-ந்தேதி மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து டாக்டர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    சிங்காநல்லூர் போலீசார் இந்த வழக்கை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

    கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது ராமநாதபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரஷேஷ்(வயது19)என்பது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    எனக்கும், மாணவிக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை அங்கு அழைத்துச் சென்றேன்.

    அப்போது அவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தேன். இதில் அவர் கர்ப்பமானார்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட பிரஷேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கொடுங்கையூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்தார்.
    • புகாருக்குள்ளான மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் அவன் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டான்.

    சென்னை:

    கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியும், எம்.கே.பி.நகர் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவனும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வந்தனர்.

    பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளின் போது இருவரும் சந்தித்து பேசினர். அப்போது பிளஸ்-1 படித்து வந்த மாணவன், மாணவியை காதல் வலையில் வீழ்த்தினான். மாணவியை ஏமாற்றி தனியாக அழைத்துச் செல்வதை அவன் வழக்கமாக வைத்திருந்தான்.

    இந்த நிலையில் மாணவனின் நண்பர் ஒருவர் தனியாக அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். பிளஸ்-2 படித்து வந்த போது அங்கு 2 முறை மாணவியை ஏமாற்றி அழைத்துச் செள்றுள்ளான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு முறையும், கடந்த பிப்ரவரி மாதம் ஒரு முறையும் மாணவன், மாணவியை அழைத்துச் சென்று அறையில் பேசிக்கொண்டு இருந்துள்ளான்.

    அப்போது அந்த வீட்டில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு மாணவியை ஏமாற்றி அழைத்துச் சென்ற மாணவன் அங்கு வைத்து உல்லாசமாக இருந்துள்ளான்.

    இதன் பின்னர் ஒன்றும் தெரியாதது போல பிளஸ்-2 படிப்பையும் முடித்து விட்டு மாணவன் கல்லூரியில் சேர்ந்து விட்டான். இந்த நிலையில் மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அவரது தாய் எழும்பூரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு மாணவியை அழைத்துச் சென்று பரிசோதித்தார். அப்போது பெண் டாக்டர் ஒருவர் மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினார். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சிறுமியிடம் விசாரணை நடத்திய போது தான் பிளஸ்-2 படித்த மாணவன் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டதை கூறி கதறி அழுதார். இது பற்றி உடனடியாக கொடுங்கையூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்தார்.

    இதன் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புகாருக்குள்ளான மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் அவன் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டான். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    பாதிக்கப்பட்ட மாணவியிடம் ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.

    • மாயாஜால கலைஞரின் மையத்தில் பல சிறுமிகள் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.
    • வேறு யாருக்காவது மாயாஜால கலைஞர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேஷ் கொரோத்தா (வயது 44). மாயாஜால கலைஞரான இவர் தனியாக பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

    அவரது மையத்திற்கு 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். இதற்காக அந்த மையத்தில் சிறுமி சில நாட்கள் தங்கி இருந்தார். அப்போது சிறுமியை மாயாஜால கலைஞர் ஜெயேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    பயிற்சி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவி அது பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாயாஜால கலைஞர் மீது மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் மாயாஜால கலைஞர் ஜெயேஷை கைது செய்தனர்.

    மாயாஜால கலைஞரின் மையத்தில் பல சிறுமிகள் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் வேறு யாருக்காவது மாயாஜால கலைஞர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவி தனியாக நடந்து செல்லும்போது முனியப்பன் பின்தொடர்ந்து அவரை கடத்தி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மதிகோன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் தருமபுரியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.

    பெரியகுரும்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் கணேசன் என்கிற முனியப்பன் (வயது28) என்பவர் மாணவி பள்ளிக்கு வரும்போது தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். ஆனால், அந்த மாணவி முனியப்பனை காதலிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி தனியாக நடந்து செல்லும்போது முனியப்பன் பின்தொடர்ந்து அவரை கடத்தி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதுகுறித்து மாணவி நடந்த சம்பவத்தை பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே பெற்றோர் முனியப்பனை தேடி சென்றனர். ஆனால், அவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கணேசன் என்கிற முனியப்பனை தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் சிலருக்கு விற்பனை செய்துள்ளனர்.
    • ஒரு போட்டோவை 500 ரூபாய்க்கும், வீடியோவை 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது31). இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமானார்.

    இதையடுத்து அந்த சிறுமியுடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். இருவரும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்வது, பேசுவது என்று தங்களது நட்பை தொடர்ந்த படி இருந்துள்ளனர். இந்த நிலையில் செங்கன்னூரை சேர்ந்த ஸ்வீட்டி(20) என்ற பெண்ணை கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஷ்ணு திருமணம் செய்தார்.

    அவருடன் குடும்பம் நடத்திவந்த நிலையில், அந்த மாணவியுடனும் பழகி வந்திருக்கிறார். அந்த பழக்கத்தின் அடிப்படையில், தனது மனைவி டியூசன் எடுப்பதாக கூறி தனது வீட்டுக்கு மாணவியை வரவழைத்திருக்கிறார். அதன்பேரில் விஷ்ணுவின் வீட்டுக்கு மாணவி சென்றிருக்கிறார்.

    அப்போது ஆசை வார்த்தை கூறி மாணவியை விஷ்ணு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் மாணவியை பலாத்காரம் செய்வதை, அவரது மனைவி ஸ்வீட்டி ரகசியமாக செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.

    அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் சிலருக்கு விற்பனை செய்துள்ளனர். ஒரு போட்டோவை 500 ரூபாய்க்கும், வீடியோவை 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் போலியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியிருக்கின்றனர்.

    அதில் இருந்தே மாணவியின் வீடியோ மற்றும் புகைப்படத்தை பலருக்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளனர். இந்நிலையில் தனது வீடியோ மற்றும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் விஷ்ணு மற்றும் அவரது மனைவி விற்றதை அந்த மாணவி அறிந்தார். இது பற்றி தனது தோழியிடம் தெரிவித்தார். அவர் மாணவி படித்த பள்ளியின் ஆசிரியர்களுக்கு அதுபற்றி தகவல் கொடுத்தார். அவர்கள் சைல்டுலைன் அதிகாரிகளுக்கு கூறியதால், பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் வெளியே வந்தது. இதனால் விஷ்ணு மற்றும் அவரது மனைவி ஸ்வீட்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

    இந்தநிலையில் அவர்கள் மீது எஸ்.சி.எஸ்.டி. சட்டப்படியும் வழக்கு பதியப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மாணவியின் வீடியோ மற்றும் புகைப்படங்களை விலை கொடுத்து வாங்கியவர்களை கண்டு பிடித்து, அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாணவியை லோகேஷ் காரில் ஏற்றி சென்றதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார்.
    • காதலன் மற்றும் அவரது நண்பனால் பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவி மனமுடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பால் மேரு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவரும் சிறுமியும் காதலித்து வந்தனர். அப்போது லோகேஷ் சிறுமியிடம் எங்காவது வெளியில் சென்று வரலாம் என தெரிவித்தார்.

    இதையடுத்து மாணவி கடந்த 20-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறினார். அவர் வகுப்புக்கு செல்லாமல் பள்ளி சுற்று சுவர் அருகே தனது புத்தகப் பையை வைத்துவிட்டு சென்றார்.

    பின்னர் விஜயவாடா மச்சிளிப்பட்டினம் நெடுஞ்சாலைக்குச் சென்று லோகேஷ்-க்கு போன் செய்தார். காரில் வந்த லோகேஷ் மாணவியை ஏற்றிக்கொண்டு உய்யூரில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்தார். பின்னர் தனது நண்பர் நரேந்திரனுக்கு போன் செய்து லாட்ஜிக்கு வரவழைத்தார். அப்போது வாலிபர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக சிறுமியை பலாத்காரம் செய்தனர்.

    இதனால் மாணவி மயக்கமடைந்தார். அவருக்கு தண்ணீர் தெளித்து சுயநினைவு வரவழைத்தனர். பின்னர் மாணவியை இரவு வீட்டின் அருகே இறக்கி விட்டனர்.

    காதலன் மற்றும் அவரது நண்பனால் பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவி மனமுடைந்தார். அவர் வீட்டுக்கு செல்லாமல் அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்.

    இந்த நிலையில் பள்ளி சுற்றுச்சுவர் அருகே மாணவியின் புத்தகப்பை இருப்பதைக் கண்ட காவலாளி இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    மாணவியின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்தனர். அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவி பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்தனர்.

    மாணவியை லோகேஷ் காரில் ஏற்றி சென்றதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார்.

    இது குறித்து போலீசில் புகார் செய்தனர். மறுநாள் காலை கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் மாணவி பிணமாக மிதந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் சந்தேகத்தின் பேரில் லோகேஷ் மற்றும் நரேந்திரனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக விவேகானந்தன் மாணவியை சீரழித்து வந்து உள்ளார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தனை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன (52). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பிரிந்தார்.

    இந்தநிலையில் ஓரிக்கை அரசு நகர் பகுதியை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண் ஒருவருடன் விவேகானந்தனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இளம்பெண்ணுடன் விவேகானந்தன் கணவன்-மனைவி போல் வாழ்ந்தார். அவர்களுடன் அந்த இளம்பெண்ணின் தங்கையும் தங்கி இருந்தார். அவர் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே விவேகானந்தன் கள்ளக்காதலியின் தங்கையான பிளஸ்-1 மாணவியையும் மிரட்டி செக்ஸ் தொல்லை கொடுத்தார்.

    கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக அவர் மாணவியை சீரழித்து வந்து உள்ளார். பயந்து போன மாணவி இதுபற்றி தனது அக்காளிடம் சொல்லவில்லை. இதனை பயன்படுத்தி விவேகானந்தன் தனது அத்துமீறலை தொடர்ந்து உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விவேகானந்தன் தனது தங்கையையும் சீரழித்து இருப்பது அறிந்து இளம்பெண் அதிர்ந்தார். இதுகுறித்து அவர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×