search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dowry"

    • இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு கடந்த ஒரு மாதமாக வரதட்சணை கேட்டு ரூபிணியை ராஜா அடித்து துன்புறுத்தி உள்ளார்.
    • ராஜாவின் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு அவதூறாக பேசி சரமாரி தாக்கியுள்ளனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி தொட்டி அப்பிச்சி கோவில் அருகில் உள்ள ராஜலட்சுமி நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் ரூபிணி ( வயது 24). பல்லடம் கரைப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா (24) . இருவரும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்தநிலையில் ரூபினியின் சகோதரி கணவர், கடந்த பிப்ரவரி மாதம் ராஜா மற்றும் ரூபிணி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

    சென்னை பேரூரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக ராஜா வேலைக்கு சேர்ந்ததால் ரூபிணியை சென்னைக்கு அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு கடந்த ஒரு மாதமாக வரதட்சணை கேட்டு ரூபிணியை ராஜா அடித்து துன்புறுத்தி உள்ளார். மேலும் ரூபிணியின் கையை உடைத்துள்ளார்.

    நேற்று இரவு சென்னையில் இருந்து பல்லடம் கரைப்புதூருக்கு ரூபிணியை ராஜா அழைத்து வந்தார். அங்கு வைத்தும் கொடுமைப்படுத்தி உள்ளார். ராஜாவின் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு அவதூறாக பேசி சரமாரி தாக்கியுள்ளனர்.

    இதனால் ரூபிணி ரத்தம் சொட்ட சொட்ட வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு அவசர தொலைபேசி எண் மூலம் போலீசாரை வரவழைத்தார். போலீசார் விரைந்து வந்து காயமடைந்த ரூபிணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும் இது குறித்து ரூபிணி பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி கையை முறித்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கேட்டு காதல் மனைவியை கணவர் அடித்து துன்புறுத்திய சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வரதட்சணை என்ற சமூக தீமையை முடிவுக்குக் கொண்டுவர உறுதி பூண்டுள்ளதாக காவல்துறை அதிகாரி கூறி உள்ளார்.
    • தண்டனை கிடைக்கும் என்ற பயம் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்று ஆசிரியை கூறுகிறார்.

    திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது இந்தியாவில் சட்டவிரோதம். ஆனால் பெரும்பாலான திருமணங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரதட்சணை என்பது நடைமுறையில் உள்ளது. வரதட்சணையால் பெண்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்த செய்திகள் புதிதல்ல. ஆனால், அதை எதிர்த்து ஒரு சிலரே தைரியமாக பொதுவெளியில் வந்து போராடுகின்றனர்.

    அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரமான போபாலில் உள்ள 27 வயதான ஆசிரியை ஒருவர், இந்த "சமூக தீமைக்கு" முற்றுப்புள்ளி வைக்க, போபால் காவல்துறை தலைமை அதிகாரி, ஹரிநாராயணன் சாரி மிஷ்ராவிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

    10க்கும் மேற்பட்ட ஆண்களால் வரதட்சணை காரணமாக தாம் நிராகரிக்கப்பட்டு தனக்கு திருமணம் நின்று போனதாக தெரிவிக்கும் அவர், தனது சொந்த அனுபவத்தை வைத்து இந்த மனுவை கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

    அவரின் தந்தை, கடந்த பிப்ரவரியில் பெண் பார்ப்பதற்காக ஒரு இளைஞனையும் அவனது குடும்பத்தையும் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். பின்னர் அந்த இளைஞனின் தந்தையிடம் வரதட்சணை குறித்து கேட்டிருக்கிறார். அவர்கள் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை எதிர்பார்ப்பதாக கூறியிருக்கின்றனர். மேலும், உங்கள் மகள் அழகாக இருந்திருந்தால், நாங்கள் உங்களுக்கு தள்ளுபடி தருவோம் என்று அந்த இளைஞனின் தந்தை கேலியாக பேசியுள்ளார்.

    கடந்த வாரம், அவர் தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக மிஷ்ராவை சந்தித்தார். அவரிடம் அவர் அளித்த தனது மனுவில், திருமண இடங்களில் சோதனை நடத்துவதும், வரதட்சணை கொடுப்பவர்கள் அல்லது பெறுபவர்களைக் கைது செய்வதும்தான் இந்த கொடுமையை தடுக்க ஒரே தீர்வு என்றும், தண்டனை கிடைக்கும் என்ற பயம் மட்டுமே இந்த கொடூரமான நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்றும் கூறுகிறார்.

    "வரதட்சணை ஒரு சமூகத் தீமை, அதை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் (காவல்துறை) உறுதி பூண்டுள்ளோம். எந்தப் பெண் இது குறித்து உதவி கேட்டு காவல்துறையை அணுகினாலும் அவர்களுக்கு உரிய உதவியை வழங்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்" என மிஷ்ரா கூறியிருக்கிறார்.

    இது குறித்து கருத்து தெரிவித்த மிஷ்ரா, "காவல்துறைக்கு வரம்புகள் உள்ளன. அவர்கள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. மேலும், இந்த விஷயத்தில் நாம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களின் மனநிலையையும் மாற்ற வேண்டும்" என கூறினார்.

    பெண்கள் உரிமை ஆர்வலர் கவிதா ஸ்ரீவஸ்தவா இது குறித்து கூறுகையில், "காவல்துறையினால் கண்டிப்பாக உதவ முடியும். ஆனால் வரதட்சணையை சமாளிப்பது ஒரு சிக்கலான பிரச்சனை. இந்தியாவில் வரதட்சணை தடைச்சட்டம் உள்ளது. அந்த சட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்" என கூறினார்.

    இந்த ஆசிரியையை போன்று மேலும் பலர் துணிச்சலாக போராட துவங்கினால், இந்த சமூக அவலம் கட்டுக்குள் வரலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ரூ.15 லட்சம் கேட்டு இளம் பெண்ணை வரதட்சணை கொடுமை செய்துள்ளனர்
    • கணவர், மாமனார், மாமியார உட்பட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாஹர்பான் (வயது 27) இவருக்கும் புதுக்கோட்டை டைமண்ட்நகர் பகுதியைச் சேர்ந்த நிஷ்க்அஹமெட் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிவுற்று 4 ஆண்டுகளில் குழந்தை ஏதும் இல்லாத சூழ்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்சுடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கு முன்பு கணவர் நிஷ்க்அகமெட், மாமியார் அக்பியாபர்வீன், மாமனார் ரபியுதீன் ஆகியோர் சாஹர்பானுவிடம் ரூ. 15 லட்சம் வரதட்சணைக் கேட்டு அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

    இதனையடுத்து மனஉளைச்சலுக்கு ஆளான சாஹர்பான் அங்கிருந்து கிளம்பி தனது தந்தை வீட்டில் வாழ்ந்து வருகிறார். மேலும் இது தொடர்பாக புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் வழக்கு அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் வழக்கை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் சாந்தி, ஆய்வாளர் சாந்தகுமாரி தலைமையில் கணவர், மாமியார், மாமனார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 15 லட்சம் வரதட்சணைக் கேட்டு பெண்ணை அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமணத்தின் போது 40 சவரன் நகையை போட வில்லை என்று கூறி உள்ளார்.
    • காயமடைந்த அபிநயா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே கோ. பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி அபிநயா (வயது 22). இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 9 மாதத்தில் ஆதித்யா என்கிற ஆண் குழந்தை உள்ளது. ஏழுமலை இலங்கையில் என்ஜினீ யராக வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், திரும ணத்தின் போது 40 சவரன் நகையை போட வில்லை என்று கூறி, வரதட்சணை கேட்டு, அபிநயாவின் கணவர் ஏழுமலை, மாமனார் வீராசாமி, மாமியார் தனக்கொடி, நாத்தனார் சுசிலா ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்தியதுடன், இரும்பு பைப்பால் தாக்கி, மண்ணெண்ணையை ஊற்றி அபிநயாவை கொளுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அபிநயா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து, அபிநயா கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் அபிநயா கண வர் ஏழுமலை உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணை மணமகனுடன் அனுப்புவதற்கு பெண் வீட்டார் ஏற்பாடுகள் செய்கின்றனர்.
    • மணமகன், தன்னுடன் மணமகளை அழைத்து செல்ல வேண்டுமானால் வரதட்சணையாக புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தர வேண்டும் என அடம் பிடிக்கிறார்.

    சமூக வலைதளங்களில் திருமண வீடுகளில் நடைபெறும் தகராறுகள் அடிக்கடி பகிரப்படுவதுண்டு. ஆனால் தற்போது இணையத்தில் பரவும் ஒரு வீடியோவில், வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை மாமனார் செருப்பால் அடிப்பது போன்ற காட்சிகள் உள்ளது.

    அதில் திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணை மணமகனுடன் அனுப்புவதற்கு பெண் வீட்டார் ஏற்பாடுகள் செய்கின்றனர்.

    அப்போது மணமகன், தன்னுடன் மணமகளை அழைத்து செல்ல வேண்டுமானால் வரதட்சணையாக புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தர வேண்டும் என அடம் பிடிக்கிறார்.

    அவரை உறவினர்கள் சமாதானப்படுத்த முயன்றும் அவர் மசியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மணப்பெண்ணின் தந்தை தனது செருப்பை கழற்றி மாப்பிள்ளையை சரமாரியாக அடிக்கிறார். இதை சற்றும் எதிர்பாராத மணமகன் தனது மாமனாரிடம் அடிப்பதை நிப்பாட்டுமாறு கெஞ்சுவது போன்று காட்சிகள் உள்ளது. டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    அதில் ஒருவர், மாப்பிள்ளைக்கு பிடித்திருந்த வரதட்சணை என்னும் பேய் மாமனாரின் செருப்புஅடியால் விரட்டப்பட்டது என கூறி உள்ளார்.

    • ஜீயபுரத்தில் திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தினர்
    • போலீசார் கணவர், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள துடையூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கும் நதியா (வயது 33) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர். நதியாவின் திருமணத்தின் போது அவரது பெற்றோர் நகை, பணம் மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்தனர்.இந்த நிலையில் சமீபகாலமாக மீண்டும் கூடுதலாக வரதட்சணை கேட்டு அவரை கணவர் பாலாஜி, மாமியார் லட்சுமி அம்மாள், கணவரின் சகோதரர் சசி என்கிற மருதமுத்து, அவரது மனைவி ரேவதி ஆகியோர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    தனது பெற்றோர் மிகவும் சிரமத்தில் இருப்பதால் தன்னால் வரதட்சணை வாங்கி வரமுடியாது என்று நதியா திட்டவட்டாக கூறியுள்ளார்.ஆனாலும் கணவர் குடும்பத்தினர் நதியாவை தொடர்ந்து பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி வந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட நதியா ஜீயபுரம்அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கணவர், மாமியார் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • ஜெயராமன் (வயது 31). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி லட்சுமி (29). பொறியியல் பட்டம் படித்தவர்.
    • தொழில் தொடங்குவதற்காக ரூ.5 லட்சத்தை உனது பெற்றோர் வீட்டில் வாங்கி வரச் சொல்லி லட்சுமியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே உள்ள புது பலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஜெயராமன் (வயது 31). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி லட்சுமி (29). பொறியியல் பட்டம் படித்தவர். இவர்களுக்கு 3 வயதில் லத்தீஸ்வரன் என்கிற ஆண் குழந்தை உள்ளது. திருமணம் முடிந்து 6 மாதங்கள் நல்ல நிலையில் குடும்பம் நடத்திய ஜெயராமன், அதன் பின்னர் லட்சுமியிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார். இதன் உச்சகட்டமாக சம்பவத்தன்று ஜெயராமனும் அவரது தாயார் பழனியம்மாளும் சேர்ந்து கொண்டு தொழில் தொடங்குவதற்காக ரூ.5 லட்சத்தை உனது பெற்றோர் வீட்டில் வாங்கி வரச் சொல்லி லட்சுமியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்.

    தாக்குதல்அப்போது வாக்குவாதம் முற்றி தேங்காய் உரிக்க பயன்படுத்தும் இரும்பு பைப்பால் தலையில் அடித்து, இதோடு நீ செத்து போடி, நீ செத்தால் நான் 2-வது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி லட்சுமி மீது ஜெயராமன் கொலை வெறி தாக்குதல் நடத்தினார். ஜெயராமனின் தாயார் பழனியம்மாள் லட்சுமியை திட்டி தாக்கி இருக்கிறார். இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமி சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்இஸ்பெக்டர் ராதிகா, ஏட்டு சங்கீதா ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லட்சுமியை தாக்கியதாக அவரது கணவர் ஜெயராமன் மற்றும் மாமியார் பழனியம்மாள் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். முதல் கட்டமாக கணவர் ஜெயராமனை கைது செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட பழனியம்மாளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • லோகப்பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • கூடுதல் வரதட்சணை கேட்ட தகராறில் லோகப்பிரியாவை அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது தெரிந்தது.

    தாம்பரம் :

    தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம் அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது32), இவரது மனைவி லோகப்பிரியா (26), இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கோகுல கண்ணன் மனைவி லோகப்பிரியாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகப்பிரியா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு கோகுல கண்ணன் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தகவல் தெரிவித்தனர். சோமங்கலம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே லோகப்பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து மணிமங்கலம் உதவி ஆணையாளர் ரவி தலைமையிலான போலீசார் லோக பிரியாவின் கணவர் கோகுலகண்ணன் மற்றும் அவரது மாமியார் ராஜேஸ்வரி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது கூடுதல் வரதட்சணை கேட்ட தகராறில் லோகப்பிரியாவை அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது தெரிந்தது. இதற்கு அவரது தாய் ராஜேஸ்வரியும் உடந்தையாக இருந்து உள்ளார். இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் போலீசாரிடம் கூறும்போது, சம்பவத்தன்று வரதட்சணை தொடர்பாக மனைவி லோகப்பிரியாவுடன் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை தாக்கினேன். மேலும் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.பின்னர் கொலையை மறைக்க லோகப்பிரியாவின் உடலை தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினோம். இதற்கு தாய் ராஜேஸ்வரியும் உடந்தையாக இருந்தார் என்று கூறிஉள்ளார். இதையடுத்து கோகுலகிருஷ்ணன், அவரது தாய் ராஜேஸ்வரி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வரதட்சணை கேட்டு தர மறுத்ததால் மனைவியை கணவரே கொலை செய்து விட்டு தற்கொலைநாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யுவராஜாவுக்கும் செட்டிகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
    • யுவராஜா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

    வள்ளியூர்:

    பழவூர் அருகே யாக்கோபுரத்தைச் சேர்ந்த யுவராஜா (வயது 31) இவருக்கும் செட்டிகுளத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது வரதட்சனையாக 30 பவுன் நகை போடுவதாக கூறியுள்ளனர்.

    திருமணத்தின்போது பெண் வீட்டார் 16 பவுன் நகை போட்டதாகவும், மீதி நகையை வாங்கி வர சொல்லி யுவராஜா கொடுமைப்படுத்தியதாக வும், யுவராஜாவின் மனைவி வள்ளியூர் நீதிமன்றத்தில் 2021-ம் ஆண்டு வழக்கு தொடுத்தார். வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி உத்தரவிட்டார்.அதன்படி வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்தில் யுவராஜா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சேகர் மின்கம்பத்தில் ஏறிய போது அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டு இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
    • சேகர் மின் கம்பத்தில் ஏறி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் சீர்வரிசை பெறுவதற்காக இப்படியா மின்கம்பத்தில் ஏறி மாமியாரை மிரட்டுவது என கேலியாக பேசி சென்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மேதக் நகரை சேர்ந்தவர் சேகர். கூலி தொழிலாளி. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது தாய் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது.

    மாமியார் வீட்டிற்கு செல்லும் சேகர் தனக்கு சீர்வரிசையாக நகைகள் போட வேண்டுமென அடிக்கடி கேட்டு வந்தார். ஆனால் அவரது மாமியார் சேகரின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் நேற்று மீண்டும் மாமியார் வீட்டிற்கு சென்று நகைகள் போட வேண்டுமென வற்புறுத்தினார். இதற்கு சேகரின் மாமியார் மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த சேகர் வீட்டை விட்டு வெளியே வந்து அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி உச்சிக்குச் சென்று உட்கார்ந்து கொண்டார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சேகரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சேகர் தனது மாமியார் நகைகள் போடுவதாக உறுதி அளித்தால் மட்டுமே கீழே வருவேன் என அடம்பிடித்தார்.

    இதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சேகரை சமாதானப்படுத்தி கீழே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் சேகருக்கு அறிவுரைகளை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    சேகர் மின்கம்பத்தில் ஏறிய போது அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டு இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

    சேகர் மின் கம்பத்தில் ஏறி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் சீர்வரிசை பெறுவதற்காக இப்படியா மின்கம்பத்தில் ஏறி மாமியாரை மிரட்டுவது என கேலியாக பேசி சென்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அறிவழகன் இவரது மனைவி பவித்ரா (30) இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது.
    • கணவர் அறிவழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் அறிவழகனை போலீசார் கைது செய்தனர்

    கடலூர்:

    கடலூர் அருகே திருமாணிக்குழியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 34).இவரது மனைவி பவித்ரா (30) இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அறிவழகன் மற்றும் பவித்ரா ஆகியோர் கடந்த சில மாதத்திற்கு முன்பு கடலூர் கே.என்.பேட்டையில் இரும்பு கடை நடத்தி வந்தனர். அப்போது அறிவழகனுக்கு ரீசார்ஜ் செய்யும் கடையில் பணிபுரிந்து வந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த பவித்ரா அதிர்ச்சியடைந்து தனது கணவன் அறிவழகனிடம் கேட்டார். அப்போது அறிவழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பவித்ராவை அடித்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பவித்ரா கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கணவர் அறிவழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.

    குற்றவாளியான கிரண்குமாருக்கு ரூ.12.5 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    கொல்லம்:

    கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா விவகாரத்தில்  அவரின் கணவர்தான் குற்றவாளி என கொல்லம் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள் இன்று  வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விஸ்மயாவின் கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் அவருக்கு 12.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

    கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா, கிரண் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  இந்த திருமணத்திற்கு வரதட்சனையாக 1 ஏக்கர் மதிப்பிலான ரப்பர் தோட்ட நிலம், 100 பவுன் நகை, ரொக்கம் என வழங்கப்பட்டது.  இருப்பினும் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் விஸ்மயாவை மோசமாக துன்புறுத்தினார். இதையடுத்து அவர் கடந்த ஜூன் மாதம் 

    குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து கிரண் மீது விஸ்மயா குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இவ்விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தி, வரதட்சணைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. 

    இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட கிரண் குமார், இந்திய அரசியலமைப்பு சட்ட 304 பி (வரதட்சணை கொடுமையால் மரணம்),  498 ஏ (கணவர் அல்லது உறவினரால் கொடுமைப்படுத்தப்படுவது), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), 506 (மிரட்டல் விடுவது) உள்ளிட்ட  பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டார்.

    கடந்த 1 வருடமாக நீதிமன்ற காவலில் உள்ள கிரண் குமாரின் ஜாமீன் மனு பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மார்ச்  மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு கேரள மாநிலம் கொல்லம் கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    வழக்கின்போது 42 சாட்சியங்கள், 108 ஆவணங்கள் மற்றும் விஸ்மயாவின் செல்போன் உரையாடல்கள் ஆகியவற்றை விசாரணை அறிக்கையாக ஏற்றுகொள்ளப்பட்டது. மேலும் இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் 507 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார்.

    அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    போலீஸாரின் சாட்சியங்கள், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் `விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி என  உறுதியாகிறது. வரதட்சணை கொடுமை, உடல் அல்லது மனநலப் பாதிப்பை ஏற்படுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட 

    பிரிவுகளின் கீழ் கிரண் குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கபடுகிறது. இதையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.12.5 லட்சம்  அபராதம் விதிக்கப்படுகிறது.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டது. 

    இதைதொடர்ந்து கிரணின் ஜாமீன் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு நடந்தபோது இறந்த பெண் விஸ்மயாவின் தந்தை திரிவிக்ரமன் நீதிமன்றத்தில் இருந்தார். அவர் `கிரணுக்கு மிக அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த தண்டனை,  இந்த சமூதாயத்துக்கான பாடமாக இருக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
    ×