search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய கணவன் கைது: மாமியாருக்கு போலீசார் வலை வீச்சு
    X

    சங்கராபுரம் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய கணவன் கைது: மாமியாருக்கு போலீசார் வலை வீச்சு

    • ஜெயராமன் (வயது 31). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி லட்சுமி (29). பொறியியல் பட்டம் படித்தவர்.
    • தொழில் தொடங்குவதற்காக ரூ.5 லட்சத்தை உனது பெற்றோர் வீட்டில் வாங்கி வரச் சொல்லி லட்சுமியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே உள்ள புது பலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஜெயராமன் (வயது 31). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி லட்சுமி (29). பொறியியல் பட்டம் படித்தவர். இவர்களுக்கு 3 வயதில் லத்தீஸ்வரன் என்கிற ஆண் குழந்தை உள்ளது. திருமணம் முடிந்து 6 மாதங்கள் நல்ல நிலையில் குடும்பம் நடத்திய ஜெயராமன், அதன் பின்னர் லட்சுமியிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார். இதன் உச்சகட்டமாக சம்பவத்தன்று ஜெயராமனும் அவரது தாயார் பழனியம்மாளும் சேர்ந்து கொண்டு தொழில் தொடங்குவதற்காக ரூ.5 லட்சத்தை உனது பெற்றோர் வீட்டில் வாங்கி வரச் சொல்லி லட்சுமியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்.

    தாக்குதல்அப்போது வாக்குவாதம் முற்றி தேங்காய் உரிக்க பயன்படுத்தும் இரும்பு பைப்பால் தலையில் அடித்து, இதோடு நீ செத்து போடி, நீ செத்தால் நான் 2-வது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி லட்சுமி மீது ஜெயராமன் கொலை வெறி தாக்குதல் நடத்தினார். ஜெயராமனின் தாயார் பழனியம்மாள் லட்சுமியை திட்டி தாக்கி இருக்கிறார். இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமி சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்இஸ்பெக்டர் ராதிகா, ஏட்டு சங்கீதா ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லட்சுமியை தாக்கியதாக அவரது கணவர் ஜெயராமன் மற்றும் மாமியார் பழனியம்மாள் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். முதல் கட்டமாக கணவர் ஜெயராமனை கைது செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட பழனியம்மாளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×