search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் கைது"

    • கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    • அக்கம்பக்கத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை போடுவதாக தெரிவித்தனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சன்ஹகி பால் (வயது 32). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வசித்தார்.

    இந்த நிலையில் அவருக்கு சமூகவலைதளம் மூலம் சந்தக் தாஸ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இருவரும் தொடர்ந்து செல்போனில் பல மணி நேரம் பேசி காதலை வளர்த்து வந்தனர். பின்னர் இருவரும் தாலி கட்டாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வது என முடிவு செய்தனர்.

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் கொல்கத்தா டம் டம் மதுகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர்.

    சம்பவத்தன்று சந்தக்தாஸ் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க சென்றார். பின்னர் அவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும் சன்ஹகி பாலுக்கும் இடையில் கடும் சண்டை மூண்டது. இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த சன்ஹகி பால் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக சந்தக் தாசை குத்தினார். ஆத்திரம் தீரும் வரை 10 தடவை அவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த சந்தக் தாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதையடுத்து அவர் நேராக போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரித்தபோது அக்கம்பக்கத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை போடுவதாக தெரிவித்தனர்.

    கொலை நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு சந்தக் தாஸ் தனது காதலி சன்ஹகி பால் மற்றும் அவரது குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் குடும்பம் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் 3 பேரும் சிரித்த முகத்துடன் இருந்தனர்.

    சன்ஹகிபால் மாடர்ன் உடை அணிந்து இருந்தார்.

    காதலனை கொன்று ஜெயிலுக்கு சென்றதால் அவரது மகனை போலீசார் தாத்தா-பாட்டியிடம் ஒப்படைத்துள்ளனர்.

    • வித்யா கவுரிக்கு, தனது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • பைக்குள் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் வித்யாகவுரி (வயது26). இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதையடுத்து வித்யாகவுரியை அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் வித்யா கவுரி தனது தந்தை வீட்டுக்கு வந்து, அவர்களுடன் ஒன்றாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில், வித்யா கவுரிக்கு, தனது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். மேலும் யாரும் இல்லாத நேரத்தில் உல்லாசம் அனுபவித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இதன் காரணமாக வித்யா கவுரி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

    கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதாலும், இது வெளியில் தெரிந்தால் அவமானம் ஆகி விடும் என்பதால் குழந்தையை வளர்க்காமல், குழந்தையை கொன்று விட வித்யா கவுரி முடிவு செய்தார்.

    இதுகுறித்து தனது தந்தை முத்துசாமி(வயது62), தாய் புவனேஸ்வரி (49) ஆகியோரிடமும் தெரிவித்தார். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று பச்சிளம் குழந்தை என்றும் பாராமல், குழந்தையை ஒரு பிளாஸ்டிக் சாக்கு பையில் உயிருடன் வைத்து கட்டினர்.

    பின்னர் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பின்னர் 3 பேரும் சாக்குபையை தூக்கி கொண்டு வெளியில் வந்தனர். ஆட்கள் இருக்கிறார்களா என்பதை பார்த்து விட்டு, நேராக அங்குள்ள தண்ணீர் இல்லாத கிணற்றின் அருகே சென்று, குழந்தையை தூக்கி கிணற்றுக்குள் வீசி விட்டு சென்றனர்.

    இதில் குழந்தை பரிதாபமாக இறந்து விட்டது. பின்னர் எதுவும் நடக்காதது போல 3 பேரும் அமைதியாக இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வரவே அப்பகுதி பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து, நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றை பார்வையிட்டனர். அப்போது கிணற்றுக்குள் ஒரு சாக்குப்பை இருந்தது.

    உடனடியாக போலீசார் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, அங்கிருந்த சாக்குப்பையை திறந்து பார்த்தனர்.

    அப்போது பைக்குள் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தது யார் என விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வித்யா கவுரி என்பவர் தான் தனது தாய், தந்தையுடன் சேர்ந்து குழந்தையை கிணற்றில் வீசி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வித்யாகவுரியை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை முத்துசாமி, தாய் புவனேஸ்வரியையும் கைது செய்தனர்.

    பிறந்த 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற சுப்புலட்சுமியிடம் விசாரித்தனர்.
    • பீரோவை திறக்க முடியாததால் அதன் சாவி தொலைந்து விட்டதாக கூறி பீரோவை பழுது பார்க்கும் நபரை வரவழைத்து நகையை திருடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை, புச்சம்மாள் தெருவை சேர்ந்தவர் பூமாதேவி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தமிழரசி. இவரை சந்திக்க தண்டையா ர்பேட்டை சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் அவரது மருமகள் சுப்புலட்சுமி (28) அடிக்கடி வந்து சென்றார். அப்போது பூமாதேவியுடன், சுப்புலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி பூமாதேவி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த 10 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. ஆனால் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்படவில்லை. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற சுப்புலட்சுமியிடம் விசாரித்தனர். அப்போது அவர் பூமாதேவி வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். பூமாதேவியின் வீட்டுக்கு சென்ற போது கதவு பூட்டு சாவியை சுப்புலட்சுமி திருடி வைத்து கொண்டார். பின்னர் பூமாதேவி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற நேரத்தை நோட்டமிட்டு கதவை திறந்து சென்று உள்ளார். ஆனால் பீரோவை திறக்க முடியாததால் அதன் சாவி தொலைந்து விட்டதாக கூறி பீரோவை பழுது பார்க்கும் நபரை வரவழைத்து நகையை திருடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சுப்புலட்சுமியை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

    • நகைக்கடை உரிமையாளர் விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்தார்.
    • காயத்ரியிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் தெரு பகுதியில் நகைக்கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு வந்த டிப்-டாப் உடை அணிந்த இளம்பெண் நகை வாங்குவது போல் நடித்து ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி இரண்டு தங்க செயின்களை திருடி தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடையில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இளம்பெண் நகை வாங்குவது போல் நடித்து நகையை சுருட்டி செல்வது பதிவாகி இருந்தது.

    விசாரணையில் அவர், வாலாஜாபாத் அருகே உள்ள புளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி (26) என்பது தெரிந்தது. அவரை காஞ்சி போலீசார் கைது செய்தது விசாரித்தனர். அப்போது கடனை அடைக்க நகை திருட்டில் ஈடுபட்டதாக அவர் கூறி உள்ளார்.

    கைதான காயத்ரி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது குடும்பத்தினருக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் வாங்கிய கடனை எப்படியாவது திருப்பி செலுத்தி விட வேண்டும் என நினைத்து, நகைக்கடையில் தங்க செயின்களை திருடினேன். ஆனால் கண்காணிப்பு காமிராவில் பதிவானதால் சிக்கிக்கொண்டேன் என்று கூறி உள்ளார்.

    காயத்ரியிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • முதலில் செய்வினை செய்யும் மந்திரவாதிகளை சந்தேகித்தோம்.
    • 4 நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை, மகளிர் போலீசார் கண்காணித்து வந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலம், கொத்தகனாம்பட்லா கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக வீடுகள், கொட்டகைகள், வைக்கோல் போர் உள்ளிட்டவை திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இந்த சம்பவம் ஆந்திரா தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமத்தில் சிலர் ஏன் இப்படி நடக்கிறது என்று புரியாமல் அமானுஷ்ய வழிபாடுகள் செய்தனர். அந்த கிராமத்தை துரதிஷ்டம் பிடித்துள்ளதாகவும், கெங்கையம்மன் திருவிழா நடைபெறாதது தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் வதந்திகள் பரவியது. இதனால் கிராம மக்கள் நடுங்கினர். சிலர் ஊரை விட்டு தற்காலிகமாக வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    சந்திரகிரி எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி, கலெக்டர் வெங்கடரமண ரெட்டி, அதிகாரிகள், எஸ்.வி.பல்கலைக்கழக வேதியியல், இயற்பியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கிராமத்திற்கு வந்தனர். பயப்பட வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உண்மையான காரணத்தை கண்டறியும் வகையில், கிராமங்களில் உள்ள 18 இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை போலீசார் இறுதியாக கண்டுபிடித்தனர். அதே கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் ஒரு மாதமாக 8 வீடுகள் மற்றும் 3 கொட்டகை, வைக்கோல் போர்களுக்கு தீ வைத்தது தெரிய வந்தது.

    தாயின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    பழிவாங்கும் எண்ணத்தில் கொட்டகைகள் வைக்கோல் போர், போன்றவற்றுக்கு தீ வைத்துள்ளார். தற்போது இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.32,500 பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து சந்திரகிரி இன்ஸ்பெக்டர் ஓபுலேசு ஆகியோர் கூறியதாவது:-

    முதலில் செய்வினை செய்யும் மந்திரவாதிகளை சந்தேகித்தோம். பின்னர் ஜாலியாக சுற்றித்திரிபவர்களை, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை பிடித்து தங்களது பாணியில் விசாரணை செய்தோம். பின்னர் அவர்களை அனுப்பி வைத்து, அவர்களின் நடத்தையை உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். கிராமம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    இருப்பினும், 4 நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை, மகளிர் போலீசார் கண்காணித்து வந்தனர். ஒரு பெண் போலீஸ்காரர் இளம்பெண் வீட்டில் இருந்த தீப்பெட்டியை எடுத்து வந்தார். தீ விபத்து நடந்த நான்கைந்து இடங்களில் ஒரே மாதிரியான தீப்பெட்டிகள் இருந்தன.

    இளம்பெண்ணின் வீட்டில் உள்ள தீப்பெட்டியுடன் பொருந்தியதால் இளம்பெண்ணை பிடித்து விசாரணை செய்ததில் தனது தாயின் நடத்தை சரியில்லாததால் அவரை மாற்றவே கிராமத்தில் தீ வைத்ததாக இளம்பெண் ஒப்புக்கொண்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கீர்த்தி இரவு 8 மணி அளவில் 8 பவுன் தங்க நகைகளை திருடி தப்பிச் சென்றார்.
    • கீர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலகோபாலபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 27). இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது கடைக்கு சுப்பேகவுண்டன் புதூரை சேர்ந்த கீர்த்தி (19) என்ற இளம்பெண் வேலைக்கு சேர்ந்தார். இரவு 8 மணி அளவில் அவர் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 8 பவுன் தங்க நகைகளை திருடி தப்பிச் சென்றார்.

    இது குறித்து ஆகாஷ் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கீர்த்தியை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் மூலம் வங்கியில் திருடிய நகையை அடகு வைத்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணம் பெற்றதாக கூறினார்.

    போலீசார் அவரிடம் இருந்து பணத்தை பெற்று நகையை மீட்டு ஆகாஷிடம் ஒப்படைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட கீர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் சில அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன.
    • இளம்பெண் சமூக வலைதளமான ஸ்னாப்சேட்டில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.

    சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் சில அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்குள்ள மிசி ஸிப்பி மாகாணத்தை சேர்ந்த 19 வயதான டெனிசி பிரேசியர் என்ற இளம்பெண் சமூக வலைதளமான ஸ்னாப்சேட்டில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    அதில் அந்த பெண் தனது வளர்ப்பு நாயுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இருந்தன. வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். இயற்கைக்கு மாறான பாலியல் உறவு செய்த குற்றத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    • அனுஷா தொட்டிலில் 2 கரடி பொம்மைகளை வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் தூங்கினார்.
    • அனுஷாவின் நடத்தையில் மாற்றங்களை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், குற்றால மடுகு பகுதியை சேர்ந்தவர் மனைவி அனுஷா. தம்பதிக்கு கிருத்திகா என்ற 4 வயது மகளும், லட்சுமி ஹாரிகா என்ற 18 மாத குழந்தையும் இருந்தனர். மணிகண்டன் ராய்ப்பூரில் ஓட்டல் நடத்தி கொண்டு அங்கேயே தங்கி உள்ளார்.

    அனுஷா தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்து நெல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கணவர் ஓட்டல் நடத்தி வருவதால் அவமானமாக கருதிய அனுஷா கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு, ஐதராபாத் சென்று நல்ல சம்பளத்தில் வேலை செய்யும் ஒருவரை திருமணம் செய்து கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என எண்ணினார். இதனால் தனது மூத்த மகள் கிருத்திகாவை கணவரிடம் ஒப்படைத்து விட்டார். 1½ வயது குழந்தையை என்ன செய்வது என்று யோசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி நள்ளிரவு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார். உடலை வீட்டின் பின்புறம் உள்ள கால்வாயில் வீசினார்.

    பின்னர் அனுஷா தொட்டிலில் 2 கரடி பொம்மைகளை வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் தூங்கினார்.

    பொழுது விடிந்ததும் தூக்கத்தில் இருந்து எழுந்த அனுஷா தொட்டிலில் இருந்த குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும் குழந்தைக்கு பதிலாக கரடி பொம்மைகளை வைத்து சென்றதாகவும் பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து நெல்லூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அனுஷாவின் நடத்தையில் மாற்றங்களை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    முதலில் குழந்தை திருடு போனதாக போலீசாரிடம் தெரிவித்த அனுஷா பின்னர் போலீசார் அவர்களது பாணியில் விசாரித்தபோது குழந்தையை கொலை செய்து கால்வாயில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து கால்வாயில் வீசப்பட்ட குழந்தை உடலை போலீசார் மீட்டனர். அனுஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • லோகப்பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • கூடுதல் வரதட்சணை கேட்ட தகராறில் லோகப்பிரியாவை அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது தெரிந்தது.

    தாம்பரம் :

    தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம் அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது32), இவரது மனைவி லோகப்பிரியா (26), இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கோகுல கண்ணன் மனைவி லோகப்பிரியாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகப்பிரியா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு கோகுல கண்ணன் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தகவல் தெரிவித்தனர். சோமங்கலம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே லோகப்பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து மணிமங்கலம் உதவி ஆணையாளர் ரவி தலைமையிலான போலீசார் லோக பிரியாவின் கணவர் கோகுலகண்ணன் மற்றும் அவரது மாமியார் ராஜேஸ்வரி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது கூடுதல் வரதட்சணை கேட்ட தகராறில் லோகப்பிரியாவை அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது தெரிந்தது. இதற்கு அவரது தாய் ராஜேஸ்வரியும் உடந்தையாக இருந்து உள்ளார். இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் போலீசாரிடம் கூறும்போது, சம்பவத்தன்று வரதட்சணை தொடர்பாக மனைவி லோகப்பிரியாவுடன் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை தாக்கினேன். மேலும் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.பின்னர் கொலையை மறைக்க லோகப்பிரியாவின் உடலை தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினோம். இதற்கு தாய் ராஜேஸ்வரியும் உடந்தையாக இருந்தார் என்று கூறிஉள்ளார். இதையடுத்து கோகுலகிருஷ்ணன், அவரது தாய் ராஜேஸ்வரி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வரதட்சணை கேட்டு தர மறுத்ததால் மனைவியை கணவரே கொலை செய்து விட்டு தற்கொலைநாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவை மாநகர போலீசார் வினோதினி மீது ஆயுத சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
    • வினோதினி என்ற தமன்னா சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    கோவை:

    கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் சத்திய பாண்டி என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொன்றது. இதனை தொடர்ந்து அடுத்த நாள் கோவை கோர்ட்டு அருகே கோகுல் என்பவர் பட்டப்பகலில் வெட்டிகொலை செய்யப்பட்டார்.

    முன் பகை காரணமாக இந்த 2 கொலை சம்பவங்களும் அரங்கேறியது விசாரணையில் தெரியவந்தது. தொடர் கொலைகளை அடுத்து கோவை மாநகரில் உள்ள ரவுடிகளை கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். இதுவரை சுமார் 56-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் சமூக வலைதளங்களையும் சைபர் கிரைம் போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் "பிரண்ட்ஸ் கால் மி தமன்னா" என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் புகைப்பிடித்தவாறும், கையில் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நிற்குமாறும் வீடியோவை பதிவிட்டிருந்தார்.

    அதில் "எதிரி போட நினைத்தால், அவனை போடுவோம். ஓடுனா கால வெட்டுவோம்" என்ற வன்முறையை தூண்டும் பாடல் வரிகளுடன் அந்த வீடியோ இடம் பெற்றிருந்தது.

    மேலும் கோர்ட்டு அருகே கோகுல் என்பவரை கொலை செய்த நபர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இந்த பெண் பின் தொடர்ந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த பெண் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விருதுநகரை சேர்ந்த வினோதினி என்ற தமன்னா என்பதும், இவர் ஏற்கனவே கோவையில் கஞ்சா வழக்கில் கைதானவர் என்பதும் தெரியவந்தது.

    கோவை மாநகர போலீசார் வினோதினி மீது ஆயுத சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் திருப்பூர், விருதுநகர் உள்பட பல்வேறு இடங்களில் முகாமிட்டு வினோதினி என்ற தமன்னாவை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடி வரும் நிலையிலும் கூட தொடர்ந்து அவர் வீடியோக்களை வெளியிட்டார்.

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பேசிய அவர், தான் ஆயுதங்களுடன் இருப்பது போன்று வரும் வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது. அப்போது டிரெண்டிகிற்காக செய்யப்பட்டது தான் இந்த வீடியோக்கள். தற்போது நான் எந்த வீடியோக்களையும் வெளியிடவில்லை. நான் 6 மாத கர்ப்பிணியாக, எனது கணவருடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதனை தொடர்ந்து தனிப்படையினர் அவரை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் வினோதினி என்ற தமன்னா சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் நேற்றிரவு சேலம் சங்ககிரி விரைந்தனர்.

    பின்னர் அங்கிருந்த தமன்னாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வித்யாஸ்ரீ மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.
    • இருவரையும் கைது செய்து போலீசார் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அலங்காநல்லூர்:

    சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்பாலாஜி (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவியை பிரிந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் நடந்த நண்பரின் திருமணத்தில் ராம்பாலாஜி பங்கேற்றார். அப்போது திருமணத்திற்கு வந்திருந்த வித்யாஸ்ரீ (31) என்ற பெண்ணிடம் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

    தானும் கணவருடன் விவாகரத்து பெற்று 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக ராம் பாலாஜியிடம், வித்யாஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து நாம் இருவரும் 2-வது திருமணம் செய்து கொள்ளலாம் என வித்யாஸ்ரீ, ராம்பாலாஜியுடன் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதற்கு அவர் சம்மதமும் தெரிவித்தார். இதை பயன்படுத்தி அவரிடம் வித்யாஸ்ரீ அவ்வப்போது பணம் கேட்டுள்ளார்.

    இதன் காரணமாக ராம்பாலாஜி, வித்யாஸ்ரீயின் வங்கி கணக்கில் சிறிது சிறிதாக ரூ.50 லட்சம் வரை பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் நேரில் சந்திக்கும்போது வித்யாஸ்ரீக்கு நகைகளையும் கொடுத்துள்ளார்.

    பின்னர் திருமணம் குறித்து பேசும்போது வித்யாஸ்ரீ காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வித்யாஸ்ரீயை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து விசாரித்த போது வித்யாஸ்ரீ வாடகை வீட்டையும் காலி செய்து தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இதனால் ராம் பாலாஜி அதிர்ச்சி அடைந்தார்.

    தன்னிடம் ரூ. 50 லட்சம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்த வித்யாஸ்ரீ குறித்து அலங்காநல்லூர் போலீசில் ராம்பாலாஜி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வித்யாஸ்ரீ மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ரூ.50 லட்சம், நகை மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக அஜித் குமாரும் இருந்துள்ளார். இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • ஆசைக்கு இணங்க மறுத்த மைத்துனரை இளம்பெண் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலைக்கு உடந்தையாக இருந்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மெஹபூபா பாத் மண்டலம், டோர்னக்கல் புறநகர் தாண்டா பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது தம்பி கோபி. கோபியின் மனைவி குமாரி. கோபி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குமாரி மாமியார் வீட்டில் வசித்து வந்தார். அப்போது கோபியின் அண்ணன் ராஜுடன் குமாரிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதில் உடன்பாடு இல்லாத ராஜு இது தவறான உறவு என கூறி வந்தார். இருப்பினும் ராஜுவின் அறிவுரையை பொருட்படுத்தாத குமாரி கணவர் இல்லாத ஆசையை நிறைவேற்ற கோரி அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தார்.

    ஒரு கட்டத்தில் ராஜு கள்ளத்தொடர்புக்கு மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. தனது ஆசையை நிறைவேற்ற மறுக்கும் மைத்துனரை கொலை செய்ய குமாரி முடிவு செய்தார்.

    இதையடுத்து 2 வாலிபர்களை அழைத்து வந்து தூங்கிக் கொண்டு இருந்த ராஜுவை கல்லால் தாக்கி கொலை செய்தார். பின்னர் வாலிபர்கள் உதவியுடன் ராஜுவின் உடலை பள்ளம் தோண்டி புதைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்தார்.

    ராஜு திடீரென காணாமல் போனதால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் பஞ்சாயத்து கூட்டி குமாரியிடம் விசாரணை நடத்தினர். முதலில் மறுத்த அவர் பஞ்சாயத்தாரரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை கக்கினார்.

    ஆசைக்கு இணங்க மறுத்ததால் மைத்துனரை வாலிபர்கள் உதவியுடன் கல்லால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குமாரியை சராமாரியாக அடித்து உதைத்தனர்.

    பின்னர் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரியை கைது செய்தனர்.

    மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆசைக்கு இணங்க மறுத்த மைத்துனரை இளம்பெண் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×