search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman arrested"

    • டெல்லி அசோக் நகர் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • குழந்தையை தெருவில் வீசியது யார்? என விசாரித்தனர். இதற்காக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி அசோக்நகர் பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

    இதில் ஜெய் அம்பே அடுக்குமாடி குடியிருப்பு அருகே சாலையில் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளங்குழந்தை ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து டெல்லி அசோக் நகர் போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அந்த குழந்தையை தெருவில் வீசியது யார்? என விசாரித்தனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் ஒரு குடியிருப்பில் உள்ள குப்பை தொட்டியில் இரத்த கறை படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குப்பை தொட்டியில் குப்பைகள் கொட்டியது அதே குடியிருப்பின் 3-வ து மாடியில் வசித்து வந்த இளம்பெண் என தெரியவந்தது.

    போலீசார் 3-வது மாடிக்கு சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் திருமணமாகாமல் கர்ப்பம் ஆனதும், வீட்டில் வைத்தே அவருக்கு குழந்தை பிறந்ததும் தெரியவந்தது.

    திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்தது வெளியே தெரிந்தால் அக்கம் பக்கத்தினர் கேலி செய்வார்கள் என்பதால் குழந்தையை வீட்டின் கழிவறை ஜன்னல் வழியாக வெளியே வீசியதாக அந்த பெண் கூறினார்.

    அந்த பெண் குழந்தை பெற்று ஆஸ்பத்திரிக்கு செல்லாததால் அவர் மிகவும் பலவீனமாக காணப்பட்டார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை முடிந்ததும், அந்த பெண் கைது செய்யப்படுவார் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    • திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 70).
    • சுலோச்சனா அந்த பகுதியில் நடந்து சென்ற போது மர்ம பெண் அவரிடம் நகையை பறித்து ெகாண்டு தப்பியோடினார்.

    திருச்சி,

    திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 70). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்பொழுது அவரை ஒரு பெண் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி சுலோச்சனா கழுத்தில் அணிதிருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடினார். இது குறித்து சுலோச்சனா எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியில் சுற்றி திரிந்த மதுரை மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்த சக்தி என்பவரது மனைவி பிரியா (வயது 28) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர் தான் சுலோச்சனா நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவை கைது செய்தனர்.ருச்சி,

    திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 70). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்பொழுது அவரை ஒரு பெண் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி சுலோச்சனா கழுத்தில் அணிதிருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடினார். இது குறித்து சுலோச்சனா எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியில் சுற்றி திரிந்த மதுரை மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்த சக்தி என்பவரது மனைவி பிரியா (வயது 28) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர் தான் சுலோச்சனா நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவை கைது செய்தனர்.

    • ஹசீனாவின் அழைப்பில் மயங்கிய வாலிபர் லாட்ஜூக்கு சென்றுள்ளார்.
    • வாசலில் நின்று அவரை வரவேற்று உள்ளே அழைத்து சென்றுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவர் அங்குள்ள லாட்ஜ் அறையில் படுகாயங்களுடன் மயங்கி கிடந்தார்.

    லாட்ஜ் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சம்பவம் பற்றி விசாரித்த போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. அதன்விபரம் வருமாறு:-

    லாட்ஜில் படுகாயங்களுடன் கிடந்த வாலிபர் கொச்சியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு உமையநல்லூரை சேர்ந்த ஹசீனா (வயது 28) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ஹசீனா, வாலிபருடன் தினமும் இனிக்க, இனிக்க பேசினார்.

    ஹசீனாவின் பேச்சில் மயங்கிய வாலிபரிடம், தனக்கு பணம் தேவைப்படுவதாகவும், தன்னை நேரில் சந்தித்து தந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் எனவும் கூறியுள்ளார். இதற்காக கொச்சியில் உள்ள லாட்ஜூக்கு வருமாறு அழைத்துள்ளார்.

    ஹசீனாவின் அழைப்பில் மயங்கிய வாலிபர் லாட்ஜூக்கு சென்றுள்ளார். வாசலில் நின்று அவரை வரவேற்று உள்ளே அழைத்து சென்றுள்ளார்.

    அறைக்குள் சென்றதும், அங்கு ஹசீனாவுடன் மேலும் சில வாலிபர்கள் இருப்பதை கண்ட வாலிபர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் சுதாரிப்பதற்குள் அங்கிருந்தவர்கள், வாலிபரை ஒரு நாற்கலியில் கட்டி வைத்தனர்.

    பின்னர் அவரை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த பணத்தையும், நகைகளையும் பறித்து கொண்டனர். வாலிபரின் செல்போனையும் எடுத்து கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

    இதையடுத்து போலீசார் செல்போன் எண் மூலம் ஹசீனாவையும், அவருடன் இருந்த கும்பலையும் தேடினர். இதில் ஹசீனா கொச்சியை அடுத்த மரடு பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    அங்கு சென்ற போலீசார் ஹசீனாவை கைது செய்தனர். அவரது கணவர் ஜித்தின் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களுக்கு துணை புரிந்த மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கும்பல் இதுபோல மேலும் பலரிடம் பணம் பறித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே இதுதொடர்பாக அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×