மூதாட்டியிடம் நகை பறித்த இளம்பெண் கைது

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 70).சுலோச்சனா அந்த பகுதியில் நடந்து சென்ற போது மர்ம பெண் அவரிடம் நகையை பறித்து ெகாண்டு தப்பியோடினார்.
மூதாட்டியிடம் நகை பறித்த இளம்பெண் கைது
Published on

திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 70). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அவரை ஒரு பெண் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி சுலோச்சனா கழுத்தில் அணிதிருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடினார். இது குறித்து சுலோச்சனா எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியில் சுற்றி திரிந்த மதுரை மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்த சக்தி என்பவரது மனைவி பிரியா (வயது 28) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் தான் சுலோச்சனா நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவை கைது செய்தனர்.ருச்சி,

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 70). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அவரை ஒரு பெண் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி சுலோச்சனா கழுத்தில் அணிதிருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடினார். இது குறித்து சுலோச்சனா எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியில் சுற்றி திரிந்த மதுரை மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்த சக்தி என்பவரது மனைவி பிரியா (வயது 28) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் தான் சுலோச்சனா நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com