என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இனிக்க, இனிக்க பேசி வாலிபரை லாட்ஜூக்கு வரவழைத்து நகை, பணம் பறித்த இளம்பெண் கைது
- ஹசீனாவின் அழைப்பில் மயங்கிய வாலிபர் லாட்ஜூக்கு சென்றுள்ளார்.
- வாசலில் நின்று அவரை வரவேற்று உள்ளே அழைத்து சென்றுள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவர் அங்குள்ள லாட்ஜ் அறையில் படுகாயங்களுடன் மயங்கி கிடந்தார்.
லாட்ஜ் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சம்பவம் பற்றி விசாரித்த போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. அதன்விபரம் வருமாறு:-
லாட்ஜில் படுகாயங்களுடன் கிடந்த வாலிபர் கொச்சியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு உமையநல்லூரை சேர்ந்த ஹசீனா (வயது 28) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ஹசீனா, வாலிபருடன் தினமும் இனிக்க, இனிக்க பேசினார்.
ஹசீனாவின் பேச்சில் மயங்கிய வாலிபரிடம், தனக்கு பணம் தேவைப்படுவதாகவும், தன்னை நேரில் சந்தித்து தந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் எனவும் கூறியுள்ளார். இதற்காக கொச்சியில் உள்ள லாட்ஜூக்கு வருமாறு அழைத்துள்ளார்.
ஹசீனாவின் அழைப்பில் மயங்கிய வாலிபர் லாட்ஜூக்கு சென்றுள்ளார். வாசலில் நின்று அவரை வரவேற்று உள்ளே அழைத்து சென்றுள்ளார்.
அறைக்குள் சென்றதும், அங்கு ஹசீனாவுடன் மேலும் சில வாலிபர்கள் இருப்பதை கண்ட வாலிபர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் சுதாரிப்பதற்குள் அங்கிருந்தவர்கள், வாலிபரை ஒரு நாற்கலியில் கட்டி வைத்தனர்.
பின்னர் அவரை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த பணத்தையும், நகைகளையும் பறித்து கொண்டனர். வாலிபரின் செல்போனையும் எடுத்து கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து போலீசார் செல்போன் எண் மூலம் ஹசீனாவையும், அவருடன் இருந்த கும்பலையும் தேடினர். இதில் ஹசீனா கொச்சியை அடுத்த மரடு பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
அங்கு சென்ற போலீசார் ஹசீனாவை கைது செய்தனர். அவரது கணவர் ஜித்தின் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களுக்கு துணை புரிந்த மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கும்பல் இதுபோல மேலும் பலரிடம் பணம் பறித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே இதுதொடர்பாக அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்