search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் கைது"

    அவரது மகள்கள் பாக்கியலட்சுமி கதறி அழுத சம்பவம் காண்போரையும் கண்கலங்க வைத்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் காலனி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மலர் (வயது 45). இத்தம்பதியினர் கூலி வேலை செய்து வந்தனர்.பாண்டியன் அடிக்கடி வெளியூர் சென்று, அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு பாக்கியலட்சுமி, கோபாலகிருஷ்ணன், அருள், அபிநயா என்ற நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.தீபாவளி பண்டிகை க்காக வீட்டிற்கு வந்த பாண்டியன் இங்கேயே தங்கி விட்டார். நேற்று முன் தினம் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்ப க்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.இதற்கிடையில் பாண்டியன் நேற்று காலை தனது மகன்களாக கோபாலகிருஷ்ணன், அருள் ஆகியோருக்கு போன் செய்துள்ளார். மலரை கொலை செய்து விட்டேன், அவளது தாலிக்கயிறை கழுத்தில் இறுக்கி கொன்று, பிணத்தை கரும்பு தோட்டத்திலேயே மூடி வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதனை பொருட்படுத்தாத இருவரும் அவரவர் வேலையை பார்த்து வந்தனர்.

    இந்நிலை யில்அதே பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் மர்மமான முறையில் மலர் இறந்து கிடந்தார். இதனை பார்த்தவர்கள் இது தொடர்பாக அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் இறந்து கிடந்த இடத்திலிருந்து சிறுது தூரத்தில் தாலி கயிறு கிடந்தது.அங்கு வந்த அவரது மகள்கள் பாக்கியலட்சுமி கதறி அழுத சம்பவம் காண்போரையும் கண்கலங்க வைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் கொலை செய்யப்பட்டு கிடந்த மலரின் உடலை மோப்பம் பிடித்தது. பின்னர் அங்கிருந்து மலரின் வீடுவரை ஓடி சென்று நின்றது. இதையடுத்து கண்டமங்கலம் போலீசார் மலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மலரின் மகள் மற்றும் மகன்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவரது மகன்கள் கொடுத்த தகவலின்படி பாண்டியனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அவர் தலைமறை வாகி விட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், பாண்டியனை நேற்று மாலை முதல் தேடி வந்தனர்.இந்நிலையில் இன்று அதிகாலை பாண்டியனை கண்டமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவரை விழுப்புரத்திற்கு அழைத்து சென்று அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வாக்குமூலம் அளித்த பின்னரே, மலரை அவர் எதற்காக கொலை செய்தார் என்பது தெரி யவரும்.கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • ராகுலின் மனைவிக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் அதிக ஈடுபாடு இருந்தது.
    • ராகுலின் குழந்தைகள் தாயை கொலை செய்ததை கூறினார்கள்.

    லக்னோ:

    பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சிறு சிறு பிரச்சினைகளுக்காக பெண்கள் கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது.

    சமூக வலைதளத்தில் அதிக பாலோவர்களை பெற்றதால் ஒரு பெண் அவளது கணவராலே கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் பாரா பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ராகுல் மிஸ்ரா(வயது37). இவர் டூர் மற்றும் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், 12 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    ராகுலின் மனைவிக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் அதிக ஈடுபாடு இருந்தது. குறிப்பாக அவர் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி பதிவுகள் போட்டு வந்தார். அவரது பதிவுகளுக்கு அதிக லைக்குகள் வந்தன. மேலும் அவருக்கு பாலோவர்கள் அதிகமானோர் உருவானார்கள். இதனால் அவர் அதிகநேரம் இன்ஸ்டாகிராமில் செலவழித்தார்.

    இது ராகுலுக்கு தெரியவந்தது. அவரும் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருந்தார். தன்னைவிட அதிக பாலோவர்கள் மனைவிக்கு இருக்கிறார்களே என்ற தாழ்வு மனப்பான்மை அவருக்குள் ஏற்பட்டது. மேலும் பாலோவர்களில் சிலர் மனைவியை சந்திப்பதாகவும் சந்தேகப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராகுல் தனது மனைவி, குழந்தைகளுடன் ரேபரேலிக்கு இனோவா காரில் சென்றார்.

    பூர்வாஞ்சல் சாலையில் முஜ்ஏஸ் சதுக்கம் அருகே வந்தபோது காரை ஓரமாக நிறுத்தினார். பின்னர் ஆவேசமாக தனது குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்பு குழந்தைகளுடன் காரில் அமர்ந்திருந்தார். அப்போது அந்தவழியாக சென்ற போலீஸ் ரோந்து குழுவினர் அவர்களிடம் விசாரித்தனர்.

    அப்போது ராகுலின் குழந்தைகள் தாயை கொலை செய்ததை கூறினார்கள். இதையடுத்து போலீசார் ராகுலை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் "மனைவிக்கு இன்ஸ்டாகிராம் பாலோவர்கள் அதிகரித்ததால் ஏற்பட்ட பொறாமையிலும், பாலோவர்கள் சிலரை ரகசியமாக சந்தித்ததாலும் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

    இதை தொடர்ந்து ராகுல் மனைவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கி வைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • பிரபாகரன் மனைவியிடம் வேலைக்கு செல்லக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டு வெளியில் சென்றிருந்தார்.
    • சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கடம்பாகுடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பிரபாகரன் (வயது 41). இவருக்கும் சிங்கம்புணரியை சேர்ந்த சூரியா (30) என்பவருக்கும் திருமணமாகி, இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    திருமணத்திற்கு பிறகு பிரபாகரன், சூரியா ஆகிய இருவரும் தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலை காசிலிங்கம் நகர் பகுதியில் தனிக்குடித்தனம் வசித்து வந்தனர். சூரியா புதுக்கோட்டை பகுதியில் அழகு நிலையம் உடல் தகுதிக்கான பிட்னஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இதற்கிடையே சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த பிரபாகரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. அதற்கேற்றவாறு சூரியாவுக்கு இரவு நேரங்களிலும் தொடர்ந்து செல்போனில் அழைப்பு வந்துகொண்டே இருந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மனைவியை கண்டித்தார். அத்துடன் நான் அதிக அளவில் பணம் சம்பாதிக்கும்போது நீ வேலைக்கு செல்வதை நிறுத்திக்கொள் என்றும் கூறியுள்ளார். ஆனால் சூரியா அதனை கண்டுகொள்ளவில்லை. வழக்கம் போல் புதுக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்தார். எனவே அடிக்கடி கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை தூங்கி எழுந்த பிரபாகரன் மனைவியிடம் வேலைக்கு செல்லக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டு வெளியில் சென்றிருந்தார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது எதிரே தேவகோட்டை தர்ம முனீஸ்வரர் கோவில் அருகே சூரியா இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

    இதையடுத்து ஆத்திரத்தின் உச்சிச்கே சென்ற பிரபாகரன், தனது இருசக்கர வாகனத்தால் மனைவியின் வாகனத்தின் மீது வேகமாக மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சூரியாவை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நடுரோட்டில் சரமாரியாக கழுத்தில் வெட் டினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சூரியா பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் ஆகியோர் விரைந்து சென்று கொலையுண்ட சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே கொலை சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் மனைவியை கொலை செய்த பிரபாகரன் தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடத்தை மீதான சந்தேகத்தில் நடுரோட்டில் மனைவியை கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • வடிவேல் தனது மனைவி ஜோஸ்பினிடம் பால் கேனை சுத்தம் செய்து தருமாறு கூறினார்.
    • ஜோஸ்பின் தலையில் காயம் ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சென்னந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் வடிவேல் (வயது29). கட்டிட மேஸ்திரி. இவருக்கு ஜோஸ்பின் என்ற மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வடிவேல் தனது மனைவி ஜோஸ்பினிடம் பால் கேனை சுத்தம் செய்து தருமாறு கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து ஜோஸ்பினை அவரது கணவர் வடிவேல் சரமாரியாக தாக்கினார்.

    இதில் ஜோஸ்பின் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஜோஸ்பின் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    • பானுமதி எழுந்திருக்காததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தோப்புக்கான சடாய் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 35). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பானுமதி (32). இவர்களுக்கு மதன்ராஜ், கார்த்திகேயன் என 2 மகன்கள் உள்ளனர்.

    பானுமதிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை மகன்கள் இருவரும் டியூசன் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சேட்டு பானுமதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். மனைவி பிணத்தை வீட்டுக்குள் போட்டு விட்டு அவர் எதுவும் தெரியாதது போல் வெளியே சென்றுவிட்டார்.

    அவரது மகன்கள் டியூசன் விட்டு வீட்டிற்கு இரவு 7 மணி அளவில் வந்தனர். அப்போது பானுமதியை எழுப்ப முயன்றனர்.

    பானுமதி எழுந்திருக்காததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் உதவியுடன் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பானுமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி பானுமதியின் கணவர் சேட்டுவிடம் விசாரணை நடத்தினார். அப்போது சேட்டு மனைவி உடல்நிலை சரியில்லாததால் தான் இறந்தார் என கூறினார்.

    மேலும் போலீசார் தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் சேட்டு மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அண்டை வீட்டார் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.
    • போலீசார் ஆய்வு செய்தபோது, தண்ணீர் தொட்டியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

    சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்த பவன் தாக்கூர் என்பவர் தனது மனைவி சாஹு என்பவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரத்தில் மனைவியைக் கொன்ற பவன் தாக்கூர், உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார். இதனிடையே, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அண்டை வீட்டார் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் ஆய்வு செய்தபோது, தண்ணீர் தொட்டியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் பவன் தாக்கூரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறிவழகன் இவரது மனைவி பவித்ரா (30) இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது.
    • கணவர் அறிவழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் அறிவழகனை போலீசார் கைது செய்தனர்

    கடலூர்:

    கடலூர் அருகே திருமாணிக்குழியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 34).இவரது மனைவி பவித்ரா (30) இவர்களுக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அறிவழகன் மற்றும் பவித்ரா ஆகியோர் கடந்த சில மாதத்திற்கு முன்பு கடலூர் கே.என்.பேட்டையில் இரும்பு கடை நடத்தி வந்தனர். அப்போது அறிவழகனுக்கு ரீசார்ஜ் செய்யும் கடையில் பணிபுரிந்து வந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த பவித்ரா அதிர்ச்சியடைந்து தனது கணவன் அறிவழகனிடம் கேட்டார். அப்போது அறிவழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பவித்ராவை அடித்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பவித்ரா கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கணவர் அறிவழகன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கணவர் அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.

    • மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் கைலாசம். இவரது மகன் ரமேஷ் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி (28) என்ற மனைவி உள்ளார்.
    • நேற்று இரவு சேலத்திற்கு வந்த ரமேஷ், விஜயலட்சுமியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தொட்டம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் கைலாசம். இவரது மகன் ரமேஷ் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி (28) என்ற மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, விஜயலட்சுமி சேலம் சூரமங்கலம் அருகே ஜாகிர் அம்மாபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு சேலத்திற்கு வந்த ரமேஷ், விஜயலட்சுமியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயலட்சுமியை வெட்டியுள்ளார்.

    இதில் லேசான காயத்துடன் தப்பிய விஜயலட்சுமி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பெயரில் சூரமங்கலம் போலீசார், வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பண்ருட்டி அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டார்.
    • இதுபற்றி ஆர்.டி.ஓ. நேரடியாக விசாரணை நடத்தினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பலா ப்பட்டு இடையர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ். (வயது 29). இவர் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு புதுவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது காயத்ரி என்ற பெண்ணை காதலி த்து திருமணம் செய்தார். அதன்பின்னர் தனது சொந்த ஊருக்கு வந்து டீக்கடை நடத்தி வருகிறார்.அப்போது முருகதாஸ்சுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

    இந்த விவகாரம் காயத்ரிக்கு தெரியவந்தது. இதனால் அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு வெடித்தது. இதில் மனமுடைந்த காயத்ரி தற்கொலை செய்தார். இது தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்தனர். இதுபற்றி ஆர்.டி.ஓ. நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணையில் முருக தாஸ் தற்கொலைக்கு தூண்டியதால்தான் காயத்ரி இறந்து இருப்பது தெரியவந்தது. எனவே அதன்பேரில் வழக்குபதிந்து முருகதாசை போலீசார் கைது செய்தனர்.

    • ஜார்க்கண்ட் மாநிலம் சந்தாலி மொமின் தோலா பகுதியில் உள்ள பழைய வீட்டில் ஒரு பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
    • ரூபிகா பழமையான பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

    டேராடூன்:

    டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா காதலனால் கொல்லப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அதே மாதிரியான நிகழ்வு நாட்டில் தற்போது நடைபெற்று வருகின்றன.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மனைவியை கொன்று அவரது உடலை 12 துண்டுகளாக கணவன் வெட்டியுள்ளான்.

    ஜார்க்கண்ட் மாநிலம் சந்தாலி மொமின் தோலா பகுதியில் உள்ள பழைய வீட்டில் ஒரு பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரூபிகா பஹாடின் என்றும், அவரை அவரது கணவர் தில்தார் அன்சாரி கொன்று உடலை 12 துண்டுகளாக வெட்டியதும் தெரிய வந்தது. தில்தார் அன்சாரிக்கு 2-வது மனைவி ரூபிகா ஆவார்.

    உடலின் பல பாகங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அவற்றை தேடும் பணியில் போலீசார் ஈடுபடுகிறார்கள். அந்த பெண் பழமையான பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொன்று உடலை 12 துண்டுகளாக வெட்டிய கணவர் தில்தார் அன்சாரியை கைது செய்தனர்.

    எலக்ட்ரிக் கட்டர் போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தி உடலை பல துண்டுகளாக வெட்டியது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் மூலம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்துள்ளதாக மாநில அரசை பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.

    • 3 மாதங்களுக்கு முன்பு தனபாலன், மனைவியிடம் நான் திருந்தி விட்டேன் என்று கூறி சினேகவள்ளியை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
    • மீண்டும் கணவன்-மனைவி வாழ்ந்து வந்த நிலையில் தனபாலன் குடிபோதையில் நேற்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேம்பத்தூர் ஆந்தகுடி இரவிய மங்கலம் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் தனபாலன் (வயது45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகவள்ளி (38), இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

    தனபாலன் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவனிடம் இருந்து பிரிந்து மனைவி சினேகவள்ளி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    3 மாதங்களுக்கு முன்பு தனபாலன், மனைவியிடம் நான் திருந்தி விட்டேன் என்று கூறி சினேகவள்ளியை வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் கணவன்-மனைவி வாழ்ந்து வந்த நிலையில் தனபாலன் குடிபோதையில் நேற்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர், மண்வெட்டியால் மனைவியை தாக்கி கொன்றார்.

    தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் குமார், திருவேகம்பத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சினேக வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சில மணி நேரங்களில் தனபாலனும் கைது செய்யப்பட்டார். மனைவியை அடித்து கொல்ல பயன்படுத்திய மண்வெட்டியை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

    • சில தினங்களுக்கு முன்பு சிவரஞ்சனி தனது மகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
    • வினோத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவி கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாலையீடு சண்முகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 37 )கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சனி (28). இந்த தம்பதியருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளான வினோத்துக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தினமும் மனைவியிடம் சண்டை போட்டு வந்தார்.

    இதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு சிவரஞ்சனி தனது மகளை அழைத்துக்கொண்டு திருமயம் நுழையானூர் சின்னக்கல் வயல் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் வினோத் குடிபோதையில் சின்னக்கல் வயல் சென்றார். பின்னர் மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வினோத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவி கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த சிவரஞ்சனி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பெற்றோர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த மாறன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வினோத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தார்.

    கோபித்துக்கொண்டு தாய் வீடு திரும்பிய இளம்பெண்ணை கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×