search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு- கணவன் கைது
    X

    கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு- கணவன் கைது

    • சில தினங்களுக்கு முன்பு சிவரஞ்சனி தனது மகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
    • வினோத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவி கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாலையீடு சண்முகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 37 )கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சனி (28). இந்த தம்பதியருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளான வினோத்துக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தினமும் மனைவியிடம் சண்டை போட்டு வந்தார்.

    இதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு சிவரஞ்சனி தனது மகளை அழைத்துக்கொண்டு திருமயம் நுழையானூர் சின்னக்கல் வயல் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் வினோத் குடிபோதையில் சின்னக்கல் வயல் சென்றார். பின்னர் மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வினோத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவி கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த சிவரஞ்சனி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பெற்றோர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த மாறன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வினோத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தார்.

    கோபித்துக்கொண்டு தாய் வீடு திரும்பிய இளம்பெண்ணை கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×