search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் மனைவி"

    • ஓவியர் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • ஓவியர் மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள முதலார் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய வாலிபர் ஓவியராக உள்ளார். இவர் வீடுகளில் அலங்கார ஓவியம் வரையும் வேலை செய்து வருகிறார். இவரும் அணைக்கரையை சேர்ந்த 23 வயதுடைய பட்டதாரி இளம்பெண்ணும் கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ஓவியர் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவர் ஆற்றூர் பகுதியில் உள்ள ஒரு கல்வியியல் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கும் ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் அந்த இளம்பெண் கல்லூரியில் இருந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு உள்ள சாலையில் ஓவியர் காருடன் நின்று கொண்டிருந்தார். அவர் மனைவி வந்ததும் அவரை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்தார்.

    தகராறு முற்றிய நிலையில் மனைவியின் ஸ்கூட்டர் சாவியை பிடுங்கி கொண்டு காரில் ஏறினார். அவரை இளம்பெண் தடுக்க முயன்றபோது காரில் கிடந்த கம்பியால் அவரை தாக்கிவிட்டு காரில் புறப்பட தயாரானார். உடனே அந்த இளம்பெண் கார் ஜன்னல் வழியாக தனது ஸ்கூட்டர் சாவியை வாங்க முயன்றார்.

    அப்போது ஓவியர் காரை இயக்கி மனைவியை தரதரவென இழுத்துச்சென்றார். இதனால் அந்த பெண் அலறினார். இதை பார்த்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் சில இளைஞர்கள் காரைத் துரத்தி சென்றனர். உடனே ஓவியர் மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார். இதில் அந்த இளம்பெண் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஓவியரை தேடி வருகின்றனர். இதற்கிடையே ஓவியர் மனைவியை காரில் தரதரவென இழுத்து சென்ற பதைபதைக்க வைக்கும் காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு கடந்த ஒரு மாதமாக வரதட்சணை கேட்டு ரூபிணியை ராஜா அடித்து துன்புறுத்தி உள்ளார்.
    • ராஜாவின் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு அவதூறாக பேசி சரமாரி தாக்கியுள்ளனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி தொட்டி அப்பிச்சி கோவில் அருகில் உள்ள ராஜலட்சுமி நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் ரூபிணி ( வயது 24). பல்லடம் கரைப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா (24) . இருவரும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்தநிலையில் ரூபினியின் சகோதரி கணவர், கடந்த பிப்ரவரி மாதம் ராஜா மற்றும் ரூபிணி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

    சென்னை பேரூரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக ராஜா வேலைக்கு சேர்ந்ததால் ரூபிணியை சென்னைக்கு அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு கடந்த ஒரு மாதமாக வரதட்சணை கேட்டு ரூபிணியை ராஜா அடித்து துன்புறுத்தி உள்ளார். மேலும் ரூபிணியின் கையை உடைத்துள்ளார்.

    நேற்று இரவு சென்னையில் இருந்து பல்லடம் கரைப்புதூருக்கு ரூபிணியை ராஜா அழைத்து வந்தார். அங்கு வைத்தும் கொடுமைப்படுத்தி உள்ளார். ராஜாவின் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு அவதூறாக பேசி சரமாரி தாக்கியுள்ளனர்.

    இதனால் ரூபிணி ரத்தம் சொட்ட சொட்ட வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு அவசர தொலைபேசி எண் மூலம் போலீசாரை வரவழைத்தார். போலீசார் விரைந்து வந்து காயமடைந்த ரூபிணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும் இது குறித்து ரூபிணி பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி கையை முறித்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கேட்டு காதல் மனைவியை கணவர் அடித்து துன்புறுத்திய சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2 பேரும் 24-ந் தேதி பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்தனர்.
    • புதுமண தம்பதி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்தனர்.

    கோவை,

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். கூலித் தொழிலாளியான இவர் துடியலூரில் உள்ள தனி யார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    அப்போது இவருக்கும், சூலூர் ஜெர்மன் கார்டனை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டு களாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காத லுக்கு எதிர்ப்பு தெரிவி த்தனர்.

    கடந்த மாதம் 15-ந் தேதி இளம்பெண் தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார்.

    இதுகுறித்து அவரது பெற்றோர் தனது மகளை மீட்டு தரும்படி சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை தேடி வந்தனர்.

    போலீசார் தேடு வதை அறிந்த காதலர்கள் போ லீஸ் நிலையத்தில் ஆஜ ரானார்கள். அவர்களிடம் போலீசார் நடத்திய விசார ணையில் 2 பேரும் கடந்த மாதம் 24-ந் தேதி பெற்றோ ருக்கு தெரியாமல் திரும ணம் செய்தது தெரிய வந்தது.

    பெண்ணின் பெற்றோர் அவரை தங்களுடன் வரு மாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்து தனது காதலனுடன் சென்றார். பின்னர் 2 பேரும் சூலூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

    கடந்த 3-ந் தேதி புதுமண தம்பதி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றனர்.

    சூலூரில் உள்ள ஏ.டி.எம். மையம் அருகே சென்ற போது பெண்ணிடம், அந்த வாலிபர் தனது தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்றும், எனவே நான் உடனடியாக ஊருக்கு செல்ல வேண்டும் என கூறி விட்டு சென்றார்.

    அதன் பின்னர் அவர் மீண்டும் திரும்பி வர வில்லை. அவரது செல்போ னுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. வாலிபர் அவரது காதலி யை திருமணம் செய்த 10-வது நாளில் ரோட்டில் தவிக்க விட்டு சென்றார்.

    இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். அவர்கள் சூலூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் காதல் மனைவியை நடுரோட்டில் தவிக்க விட்டு சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • ஸ்வீடன் சென்ற ஷெட்வின் கடிதங்கள் மூலம் கணவருடன் பேசி வந்தார்.
    • ஒரு வருடம் கழித்து மகாநந்தியா தனது காதல் மனைவியை சந்திக்க திட்டமிட்டபோது விமான டிக்கெட் எடுத்து செல்ல அவரிடம் போதுமான பணம் இல்லை.

    சுவீடனை சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின் 1975-ம் ஆண்டு டெல்லி வந்திருந்தார். அப்போது டெல்லியில் உள்ள கலை கல்லூரி ஒன்றில் பயின்று வந்த மகாநந்தியா என்பவரை சந்தித்தார். ஏழை மாணவரான அவர் பார்ப்பவர்களின் உருவ படத்தை அப்படியே வரையும் திறன் படைத்தவர்.

    அவரது கையால் தனது உருவ படத்தை வரைந்து தருமாறு ஷெட்வின் கேட்டார். அதன்படி அவரும் வரைந்து கொடுத்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்த நிலையில், ஷெட்வின் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் ஷெட்வின் சொந்த நாடு திரும்ப வேண்டிய நேரம் நெருங்கியதால் அவர் தனது கணவரை தன்னுடன் வருமாறு அழைத்தார். அப்போது மகாநந்தியா தனது படிப்பை முடிக்க வேண்டி இருந்ததால், நான் ஸ்வீடன் வந்து உன்னை சந்திக்கிறேன் என கூறினார்.

    பின்னர் ஸ்வீடன் சென்ற ஷெட்வின் கடிதங்கள் மூலம் கணவருடன் பேசி வந்தார். ஒரு வருடம் கழித்து மகாநந்தியா தனது காதல் மனைவியை சந்திக்க திட்டமிட்டபோது விமான டிக்கெட் எடுத்து செல்ல அவரிடம் போதுமான பணம் இல்லை. இதனால் தன்னிடம் இருந்த அனைத்து பொருளையும் விற்று ஒரு சைக்கிள் வாங்கினார். பின்னர் சைக்கிளிலேயே ஐரோப்பாவுக்கு 1977-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி தனது பயணத்தை தொடங்கினார்.

    தினமும் 70 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டிய அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி வழியாக 4 மாதங்கள் பயணம் செய்து மே 28-ந் தேதி ஐரோப்பாவை அடைந்துள்ளார். பின்னர் ரெயிலில் கோதன்பர்க் சென்று தனது காதல் மனைவி ஷெட்வினை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.

    தற்போது 2 குழந்தைகளுடன் வசிக்கும் இந்த ஜோடியினர் இப்போதும் 1975-ல் இருந்ததை போலவே ஒருவரை ஒருவர் காதலிப்பதாக கூறுகிறார்கள். இவர்களது காதல் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சம்பவத்தன்று செந்தில்குமாருக்கும், நதியாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
    • செந்தில் குமாரின் பெற்றோருக்கு போன் செய்து, செந்தில்குமார் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கிழக்கு கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (31). ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் நதியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போதெல்லாம் நதியா கோவித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவார்.

    பின்னர், செந்தில்குமாரின் பெற்றோர் சமாதானம் செய்து அழைத்து வருவார்கள்.

    இந்த நிலையில் செந்தில்குமாரின் பெற்றோர் தங்களது குழந்தையை எடுத்து கொஞ்சக்கூடாது என நதியா கூறியுள்ளார். இதனால் சம்பவத்தன்று செந்தில்குமாருக்கும், நதியாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து கோவித்துக்கொண்டு கவுந்தப்பாடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். செந்தில்குமார் பல முறை போனில் பேசி நதியாவை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் நதியா வரமறுத்துவிட்டார்.

    இந்த நிலையில் நேரில் சென்று நதியாவை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக செந்தில்குமார் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கவுந்தப்பாடி சென்றுள்ளார்.

    ஆனால் அன்று மதியம் அவர்களது உறவினர் ஒருவர் செந்தில் குமாரின் பெற்றோருக்கு போன் செய்து, செந்தில்குமார் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து செந்தில்குமாரின் பெற்றோர் சென்று அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நீலா நர்சிங் பணியை மேற்கொண்டபடியே படிப்பை தொடர்ந்தார். அதன் விளைவாகத்தான் நேற்று அவர் 12-வது பட்டத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
    • மனைவியின் படிப்பு ஆசையை, தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி, அதில் வரும் வருமானத்தை கொண்டு பூர்த்தி செய்திருக்கிறார் ஷேக் காதர்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. இதில் 41 பேருக்கு டாக்டர் மற்றும் ஆராய்ச்சி பட்டங்கள் வழங்கப்பட்டன. கடைசி ஆளாக ஆராய்ச்சி பட்டம் பெற்ற நீலா என்ற பெண்மணி, 'படிப்புக்கு வயது தடையில்லை' என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தார்.

    49 வயதை கடந்திருக்கும் நீலா, 12-ம் வகுப்பு முடித்த கையோடு, பி.எஸ்சி. நர்சிங், எம்.எஸ்சி. நர்சிங், எம்.ஏ. சமூக நல நிர்வாகம், எம்.பி.ஏ. உள்பட பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார். நேற்று அவர் நர்சிங் படிப்பில் 'ஹீமோடயாலிசிஸ்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி பட்டம் பெற்றார்.

    குடும்பத்தில் 2-வது பெண் குழந்தையாக பிறந்த நீலாவுக்கு படிப்பில் தீராத ஆசை. அதற்கு அவருடைய தந்தை வழிகாட்டியதுடன், ஊக்கப்படுத்தியும் இருக்கிறார். அதனால் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற நீலா, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் பரிசும் பெற்றுள்ளார். காதல் கணவர் ஷேக் காதரை கரம்பிடித்த இவர், படிப்பை தொடர ஆசைப்பட்டுள்ளார்.

    அதற்கு கணவர் ஷேக் காதர் பச்சைக்கொடி காட்டினார். அதனால் நீலா நர்சிங் பணியை மேற்கொண்டபடியே படிப்பை தொடர்ந்தார். அதன் விளைவாகத்தான் நேற்று அவர் 12-வது பட்டத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

    மனைவியின் படிப்பு ஆசையை, தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி, அதில் வரும் வருமானத்தை கொண்டு பூர்த்தி செய்திருக்கிறார் ஷேக் காதர்.

    நேற்று பட்டமளிப்பு விழா மேடையில் நிர்மலா சீதாராமன் கையில் பட்டம் பெற்ற நீலா, இதுபற்றி அவரிடம் தெரிவித்தார். அதையடுத்து மேடையில் இருந்தபடி நிர்மலா சீதாராமன், நீலாவையும், அவருடைய படிப்புக்கு ஊன்றுகோலாய் இருந்த கணவர் ஷேக் காதரையும் பாராட்டினார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் நீலா நிருபர்களிடம் கூறுகையில், 'பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மிகவும் அவசியம். குடும்பத்தில் இருப்பவர்கள், பெண் குழந்தைகள் மேற்படிப்பு படிக்க விரும்பினால் தடை செய்யாதீர்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள்' என்றார்.

    ×