search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "die"

    அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் வட்டம் மரவனத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது 57) இவர் கடந்த 26 ஆம் தேதி அன்று தனது வீட்டின் படியில் ஏறும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தயாளனுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

    அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.உடனே அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சின்ன சேலம் போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த என்.புதுப்பட்டி சங்கமா பாளை யம் பகுதியை சேர்ந்தவர் நேற்று மாலை தனது அண்ணன் மகனுக்கு, அங்குள்ள கிணற்றில் நீச்சல் பழகி கொடுத்துக் கொண்டிருந்தார்.
    • நீச்சல் சொல்லி கொடுத்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த என்.புதுப்பட்டி சங்கமா பாளை யம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் சரத்குமார் (வயது 25). இவர் நேற்று மாலை தனது அண்ணன் மகனுக்கு, அங்குள்ள கிணற்றில் நீச்சல் பழகி கொடுத்துக் கொண்டிருந்தார்.

    அப்போது கிணற்றில் இருந்த படிக்கட்டு வழியாக மேலே ஏறி வரும்போது, சரத்குமார் கால் தவறி கிணற்றினுள் விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டதால் தண்ணீரில் தத்தளித்தார். பின்னர் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்த அவரது சகோதரர் மகன் கதறினார். பின்னர் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து சென்ற உறவினர்கள், தண்ணீரில் மூழ்கி கிடந்த சரத்குமாரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். நீச்சல் சொல்லி கொடுத்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மோகனூரில் இருந்து லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு வேலைக்கு தனியார் பஸ்ஸில் சென்றுள்ளார்.
    • அப்போது பஸ்சை விட்டு இறங்கும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பாலத்தை காயம் ஏற்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் படையாட்சி நகரை சேர்ந்தவர் தனபால் . இவரது மனைவி கனகா (வயது 60). இவர் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் துப்புரவு வேலை பார்த்து வருகிறார், இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மோகனூரில் இருந்து லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு வேலைக்கு தனியார் பஸ்ஸில் சென்றுள்ளார்.

    அப்போது பஸ்சை விட்டு இறங்கும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பாலத்தை காயம் ஏற்பட்டது. இதனால் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனை சேர்த்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் , இது குறித்து அவரது மகன் மூர்த்தி (வயது 30) என்பவர் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்கள்.

    • சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50).
    • சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இரவு 9மணி அளவில் நந்தகோபாலபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி உள்ளே இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

    இது குறித்து செல்வராஜின் மனைவி வேல்கனி அளித்த புகாரின் பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப் பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • நாரைக்கிணறு பிரிவு ரோட்டில் உள்ள சிறிய பாலத்தின் மீது உட்கார்ந்து கொண்டு இருந்துள்ளார். அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் திடீரென அவர் நிலை தடுமாறி பாலத்தில் இருந்து 15 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் விழுந்தார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள புதுச்சத்திரம் ஒன்றியம் ராஜா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 70). கூலித் தொழிலாளி.

    இவர் தற்போது நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காமராஜ் நகர் நாரைக்கிணறு பிரிவு ரோடு பகுதியைச் சேர்ந்த அவரது தம்பி முருகேசன் (60) என்பவரது வீட்டில் கடந்த மூன்று மாதங்களாக தங்கி இருந்து வந்துள்ளார்.

    இவர் நேற்று மாலையில் நாரைக்கிணறு பிரிவு ரோட்டில் உள்ள சிறிய பாலத்தின் மீது உட்கார்ந்து கொண்டு இருந்துள்ளார். அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திடீரென அவர் நிலை தடுமாறி பாலத்தில் இருந்து 15 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வரதராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த வரதராஜனுக்கு சின்னப்பாப்பு என்ற மனைவியும், மணிகண்டன் மற்றும் சங்கர் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வரதராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்தி–ரிக்கு அனுப்பி வைத்தனர். 

    • ரத்த காயங்களுடன் கிடந்த பெண் இறந்தார்.
    • இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராளியை சேர்ந்தவர் கோபால். இவர் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 48). இன்று காலை இவர் வீட்டில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    வீட்டில் ரத்த காயங்களுடன் கிடந்த சரஸ்வதியை யாராவது தாக்கி கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி காலனி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் பிளஸ்-2 மாணவன் பலியானார்.
    • இதில் பலத்த காயமடைந்த ஹரி பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் ஹரி பாஸ்கர் (வயது 18). பிளஸ் 2 முடித்துள்ளார். நேற்று இரவு ஹரி பாஸ்கர் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் கோடீஸ்வரன் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பட்டணம் வழியாக ராசிபரத்துக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை ஹரிபாஸ்கர் ஓட்டிச் சென்றார்.

    அவருக்கு பின்னால் கோடீஸ்வரன் உட்கார்ந்து சென்றார். பட்டணம் சக்தி நகர் அருகே சென்றபோது ராசிபுரத்தில் இருந்து பட்டணத்தை நோக்கிச் சென்ற செல்வராஜ் (65) என்பவரது மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ஹரி பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் கோடீஸ்வரனும், செல்வராஜும் காயமடைந்தனர். இருவரும் ராசிபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    காயமடைந்த செல்வராஜ் பட்டணம் பள்ளிக்கூடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்லமுடியாததால் விரக்தியில் மது குடித்த வாலிபர் குட்டையில் தவறி விழுந்து பலியானார்.
    • வெங்கடேஷ் லாரிக்கு வடமாநிலம் சென்று விட்ட நிலையில் அவரால் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் ரவுண்டானா அருகில் குட்டையில் ஆண் பிணம் கிடப்பதாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தாரமங்கலம் போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இறந்தவர் கொங்கணாபுரம் அருகிலுள்ள அத்தியப்பனுர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் வெங்கடேஷ் (வயது36) லாரி டிரைவர் என்பது தெரியவந்தது. வெங்கடேஷின் தந்தை முத்து கடந்த 15 நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டார் . அந்த வேளையில் வெங்கடேஷ் லாரிக்கு வடமாநிலம் சென்று விட்ட நிலையில் அவரால் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

    பின்னர் தனது வீட்டிற்கு செல்லும் போது பவளத்தானுர் ரவுண்டானா பகுதியில் உள்ள பாலத்தின் மீது அமர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார் .மதுபோதை அதிகமாக மயங்கி குட்டையில் விழுந்தவர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது .

    இதுபற்றி வெங்கடேஷின் தாயார் பாவாய் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நேற்று வீட்டில் இருந்த சரவணகுமார் திடீரென மயங்கி விழுந்தார்.
    • மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் சரவணகுமார் (வயது39). கட்டிட தொழிலாளி. இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து உள்ளது.

    நேற்று வீட்டில் இருந்த சரவணகுமார் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணகுமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநில அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை எலி கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Bihar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் தர்பங்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நஜ்ரா கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது பிரசவத்துக்கான அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிறந்த ஆண் குழந்தை ஆரோக்கிய பற்றாக்குறை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டது.

    இதையடுத்து வழக்கம்போல், காலை எழுந்து குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக சென்ற தாய்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிறந்து 8 நாட்களே ஆன அவரது ஆண் குழந்தை சிறு சிறு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது. குழந்தையின் கால்களிலும், உடலின் சில பகுதிகளிலும் எலி கடித்ததற்கான வடுக்களும், உறைந்த இரத்தமும் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால், இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், குழந்தைக்கு இதய குறைபாடு இருந்ததினால்தான் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து இருந்ததாகவும், அதனாலேயே குழந்தை இறந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதே சமயம், மருத்துவமனையில், எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்தும் வழி தெரியவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது.

    இந்நிலையில், அம்மாவட்ட மாஜிஸ்திரேட் இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். #Bihar
    உலகின் மிகச்சிறிய தாய் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டேக்கி ஹெரால்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
    நியூயார்க்:

    உலகின் விசித்திர மனிதர்களில் ஒருவரான ஸ்டேக்கி ஹெரால்டு 2 அடி 4 இன்ச் உயரம் கொண்டவர். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்த இவர் வில் ஹெரால்டு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.



    இந்த காதல் தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இடுப்புக்கு கீழே வளர்ச்சி அற்ற ஸ்டேக்கி, தனது 44-வது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

    இவர், உலகின் மிக குள்ளமான தாய் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    சத்தீஸ்கர் மாநிலத்தில் பசுக்களை பாதுகாக்கும் அரசு கோசாலையில் 18 பசுக்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #CowSafty
    ராய்ப்பூர்:

    இந்தியாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு வன்முறைகள் நடைபெறுகின்றன. பசுக்களை இறைச்சிக்காக கடத்துவதாக கூறி, பலர் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்படுகின்றனர். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உலவும் இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

    வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன. ஆங்காங்கே இருக்கும் பசுக்களை மீட்டு, மாவட்ட நிர்வாகம் நடத்தி வரும் கோசாலைகளில் பசுக்கள் பராமரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு மட்டுமே பசுக்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் பசுபாதுகாவலர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ரோஹாசி எனும் கிராமத்தில் இயங்கி வரும் அரசு கோசாலையில் 18 பசுமாடுகள் மூச்சுத்திணறி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக அம்மாவட்ட கலெக்டர் ஜானக் பிரசாத் பதக் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோசாலையில் இருந்து இறந்த பசுக்களின் உடல்களை எடுத்துச் செல்வதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது, அங்கு பசுக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும், அவற்றுக்கு தேவையான உணவை கிராம மக்களும், கோசாலை நிர்வாகிகளும் வழங்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மிகச்சிறிய அறையில் வைத்து பூட்டப்பட்ட அதிகப்படியான பசுக்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கலெக்டர் ஜானக் பிரசாத் தெரிவித்துள்ளார். #CowSafty
    ×