சாயர்புரம் அருகே அதிக மது குடித்த டிரைவர் சாவு

சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50).சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.
சாயர்புரம் அருகே அதிக மது குடித்த டிரைவர் சாவு
Published on

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இரவு 9மணி அளவில் நந்தகோபாலபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி உள்ளே இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இது குறித்து செல்வராஜின் மனைவி வேல்கனி அளித்த புகாரின் பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப் பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com