search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "development project works"

    • ஒன்றிய குழு தலைவர் பார்வையிட்டார்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கடம்பநல்லூரில் மக்களின் பல வருட கோரிக்கையாக இருந்த பாலம் அமைக்கும் பணியினை நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து ஊராட்சி

    ஒன்றிய பொது நிதி மற்றும் 15-வது நிதிக்குழு மான்யத்திலிருந்து, கடம்ப நல்லூர் கிராமத்தில் சிறுபாலம் ரூ.9 லட்சம் மற்றும் பின்னாவரம் ஆதிதிராவிடர் காலனியில் சிமெண்ட் சாலை ரூ.9 லட்சம் என மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு தொடங்கி வைத்தார்.

    இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிவராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வரலட்சுமி, அஷோக்குமார், விநாயகம், ஒப்பந்ததாரர் பாபு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப் படும் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இச்சிப் பாளையம் ஊராட்சி தாமரைப் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்து மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளத்துப்பாயைம்;, இச்சிப்பாயைம், வள்ளிபுரம், அஞ்சூர் மற்றும் கொந்தளம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் இன்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, கலெக்டர் கொளத்துப் பாயைம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4.03 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும், அதே ஊராட்சி பகுதியில் பாரத பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் கட்டப்பட்டு வரும் 3 வீடுகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.0.82 லட்சம் மதிப்பீட்டில் கொளத்துப் பாளைம் நூலகம் சீரமைப்பு பணியினை பார்வையிட்டு புத்தகம் வைத்திருக்கும் இடத்தினை தூய்மையாக வைத்திருக்கவும், போதுமான புத்தகங்கள் இருப்பது குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் அப்பகுதியில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப் படும் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து இச்சிப் பாளையம் ஊராட்சி தாமரைப் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்து மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    மேலும் சமூக மாற்றம் என்பது மாணவர்களாகிய உங்களிடம் இருந்து தொடங்க வேண்டும், மாணவர்களால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். சுகாதாரம் என்பது நம் வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும்.

    குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளார்களிடம் வழங்க முன்வரவேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து இச்சிப் பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கருத்திப்பாளையம் முதல் தாமரைப்பாளையம் வரை ரூ.36.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலையினை பார்வை–யிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் அஞ்சூர் ஊராட்சி, காரவலசு, அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.5.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையலறை கூடத்தினை ஆய்வு செய்து, காலியாக உள்ள இடத்தில் சிறு தோட்டம் அமைக்க ஆசிரியர்களுக்கு உத்தர–விட்டார்.

    மேலும் அதே பகுதியில் சொரியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தனது விளைநிலத்தில் இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி செய்து குர்குமின் வேதிப்பொருள் தன்மை மாறாமல் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்து வருவதை பார்வையிட்டார்.

    தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வரும் இச்சிப்பாளையம் நியாய விலைக்கடையினை ஆய்வு செய்து பதிவேடுகள், எடை இயந்திரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

    மேலும் அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருவது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 3 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 3 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும் என ரூ.89.67 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், பணிகளை உரிய காலத்தில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    முன்னதாக கொந்தளம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 0.82.0 எக்டர் பரப்பளவில் விவசாயி முருகேசன் அமைத்துள்ள நுண்ணீர் பாசன கருவிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விவசாயிடம் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முன் நீர்ப்பாசனம் மற்றும் சாகுபடி விவரங்கள், சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பின் நீர்ப்பாசனம் குறித்து கேட்டறிந்தார். இது 100 சதவீத மானியத்தில் அமைக்கப்பட்ட ரூ.1,21,091 மதிப்பீட்டில் அமைக்க–ப்பட்டது எனவும் வேலையாட்கள் மற்றும் நேரம் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து வள்ளிபுரம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 2021-22-ம் ஆண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் 0.25 எக்டர் பரப்பளவில் விவசாயி கவின்குமார் என்பவர் தனது நிலத்தில் நிரந்திர காய்கறிப் பந்தல் அமைக்க ப்பட்டுள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    0.25 எக்டர் பரப்பளவில் கல்தூண்கள் நட்டு கம்பிகள் இழுத்து கட்டி பந்தல் அமைக்க ரூ.1,91,300 செலவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.50,000 மானியம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் தனது வயலில் பீர்க்கன் சாகுபடி செய்துள்ளார். 0.25 எக்டர் சாகுபடி செய்ததற்கு சாகுபடி செலவு சுமார் ரூ.30,000 செலவாகும் என்றும் நிகர லாபமாக ரூ.60,000 கிடைக்கும் எனவும் கலெக்டரிடம் தெரிவித்தார்.

    மேலும் அங்கக வேளாண்மை முறையில் பீர்க்கன் சாகுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிதிட்டத்தின கீழ் 50 சதவீத மானியத்தின் கீழ் ரூ.2000 மானியத்தில் மருந்தடிக்கும் கருவியினை 1 விவசாயிக்கும், ரூ.722.50 மானியத்தில் தார்ப்பாயினை 1 விவசாயிக்கும் வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது கொடுமுடி வருவாய் வட்டாட்சியர் மாசிலாமணி, வேளாண் உதவி இயக்குநர் பி.யசோதா, உதவி இயக்குநர் (தோட்டக்க லைத்துறை) தியாகராஜன், கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, பத்மனாபன் (கி.ஊ), மண்டல துணை தாசில்தார் பரமசிவம், வட்ட வழங்கல் அலுவலர் கலைச்செல்வி உள்பட அலு வலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • திருமங்கலம் தொகுதியில் ரூ. 1.60 கோடியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேடப்பட்டி, ஆலம்பட்டி பகுதியில் சாலையின் குறுக்கே பாலம், கிழவனேரி பகுதியில் சாலையின் குறுக்கே பாலம் என ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகளை முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திரளி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கட்டிடம் மற்றும் பாலம் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது

    இதனை எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிழவனேரி கிராமத்தில் முன்னாள் கிளைச்செயலாளர் அழகர்சாமி உடல்நலம் குறித்து விசாரித்தார். கிழவனேரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி, மீனவரணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் உச்சபட்டி செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், பேரவை நகரச் செயலாளர் பாண்டி, சிவரக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் ஆதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிழவனேரி கிராமத்தில் முன்னாள் கிளைச்செயலாளர் அழகர்சாமி உடல்நலம் குறித்து விசாரித்தார். கிழவனேரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி, மீனவரணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் உச்சபட்டி செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், பேரவை நகரச் செயலாளர் பாண்டி, சிவரக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் ஆதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் ரூ.384.58 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட கலெக்டர், நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதயில்கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சியில் ஏமப்பேர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.121 லட்சம் மதிப்பீட்டில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்து, குளத்திற்கு மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி டவும், குளக்கரையின் மேல் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையும், பூங்கா அமைப்பதற்கான பணிகளையும் விரை ந்து மே ற்கொள்ள அறிவுறுத்தினார். பின்னர் ஏமப்பேர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் உந்து நிலையத்தை பார்வையிட்டார். அப்போது கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் தினசரி குடிநீர் வழங்கிடவும், நீரினை குளோரினேஷன் செய்து, தூய்மையாக நீரை பொதுமக்களுக்கு விநியோகித்திட அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ஏமப்பேரில் கலைஞர் நகர்ப்புற மேம்பா ட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.148.58 லட்சம்மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான பணியினையும், சீத்தா ராமன் பார்க் அருகில் ரூ.115 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் மொத்தம் ரூ.384.58 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாக, விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட கலெக்டர், நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தி னார். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி நகர்மன்றத் தலைவர் சுப்புராயலு, நகராட்சிப் பொறியாளர் முருகன் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.

    • ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
    • செய்தித்துறை அமைச்சர் முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகளை வழங்கினார்.

    ஊத்துக்குளி :

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊத்துக்குளி ஒன்றியக்குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ராசுகுட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மகளிர் திட்ட இயக்குனர் மதுமதி, ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்திலட்சுமி, ஜோதிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், திறன் சேர்க்கை பயிற்சி ஆணைகள் மற்றும் உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்கள் மற்றும் செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கு காதொலி கருவிகளை வழங்கி பேசினார். மேலும் ஊத்துக்குளி சர்க்கார் காத்தாங்கண்ணி ஊராட்சி பாப்பம்பாளையத்தில் ரூ.14.20 லட்சத்தில் பால் கொள்முதல் மைய கட்டிடம், ரூ.11 லட்சத்தில் ஊத்துக்குளி பேரூராட்சி பூங்கா சுண்டக்காம்பாளையம் ஊராட்சி புதுவலசில் ரூ.9.08 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம், குறிச்சியில் ரூ 15.25 லட்சத்தில் பொது வினியோக கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தும்,ரூ.1.25 கோடியில் ஊத்துக்குளி ஆர்.எஸ்.முதல் வேலம்பாளையம் வரை தார் சாலை மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் தொடங்கியும் வைத்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  

    • வளர்ச்சிப் பணிகளை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை ெதாடங்கி வைத்தார்.
    • வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை ஏ.ஜி வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் 33 மலை கிராமங்கள் உள்ளன. மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை ெதாடங்கி வைத்தார்.

    இதில் கொங்காடை ஆதிதிராவிடர் நல பள்ளிக்கூடம் முதல் மாதேஸ்வரன் வீடு வரையிலும், தாமரைக்கரை கொங்காடை சாலை முதல் பட்டய பாளையம் வரை உள்ள சாலை, ஒன்னகரை முதல் முத்தூர் வன எல்லை வரையிலும் தாமரைக்கரை பெஜில் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைத்தல் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    மேலும் தாமரைக்கரை பஸ் நிறுத்தம், பர்கூர் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பயணியர் நிழற்குடை, கடையிரட்டி பகுதியில் ஆழ்துளைக்கிணறு, தட்ட கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் மேலும் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பகுதியில் வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை ஏ.ஜி வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

    இதில் மைக்கேல் பாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வேளாண்மை உதவி இயக்குனர் கார்த்திகேயன், வேளாண்மை அலுவலர் ஜெயக்குமார், உதவி செயற்பொறியாளர் மரியதாஸ் செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் பர்கூர் சிவக்குமார் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி செயலாளர் ராமதாஸ் மற்றும் விவசாயிகள் மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ெரயில்வே மேம்பால பணிகளையும், புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி நடைபெறும் ஆண்டியமேடு பகுதியில் ஆய்வு செய்த கலெக்டர் மரக்கன்றுகள் நட்டார்.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே மேம்பால பணிகளையும், புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேம்பாலம் பணிகளை பார்வையிட்ட கலெக்டர் அதிகாரிகளிடம் கடந்தா ண்டு மேம்பால பணி ஆய்வு செய்த போது ஒப்பந்ததாரர் 6 மாதத்தில் முடிப்பதாக கூறினாரே? ஏன் அந்த பணிகளை நிறைவு செய்யவில்லை? என்று கலெக்டர் கேட்டதற்கு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழுப்பலாக பதில் அளித்தனர்.

    அப்போது குறுக்கிட்ட பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், கலெக்டரிடம் மேம்பால பணியில் ெரயில் நிலையம் அருகே நகரி 4 வழிசாலை பகுதிகளுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஆலங்கொட்டாரம், ரிஷபம் உள்பட அப்பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்களும் மேம்பாலத்தில் ஏறுவதற்கான மற்றும் இறங்குவதற்கான சாலை சரியான வழிமுறையாக இல்லை. இதனால் வாகனங்கள் வெகுதூரம் சென்று திரும்பி வரக்கூடிய நிலை உள்ளது. இதுபோக விபத்துக்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    இதற்கு மாற்றாக நகரி ரோட்டில் இருந்து மேம்பாலத்திற்கு நேரடியாக வாகனங்கள் செல்ல புதிய பாலம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம், கலெக்டர் பேரூராட்சி சேர்மன் கோரிக்கையைநிறைவேற்றி கொடுக்கும்படி உத்தரவிட்டார் இந்த ஆய்வில் பேரூராட்சிகளின் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் பிரசன்னா, உதவி இயக்குனர் (திட்டம்), சாருமதி பேரூராட்சி மண்டல உதவி இயக்குனர் சேதுராமன். உதவி செயற்பொறியாளர் சுரேஷ். வாடிப்பட்டி தாசில்தார் நவநீதகிருஷ்ணன் பேரூராட்சி செயலாளர் சுதர்சனன், சுகாதாரப்பணி ஆய்வாளர் முருகானந்தம், வருவாய் ஆய்வாளர் சுப்புலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபாகரன், சிவராமன், துணைத்தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர்கள் சத்திய பிரகாஷ், கொத்தாளம் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பணியாளர்களின் வருகை பதிவேடு, பணி பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர், அரியபெருமானூர் மற்றும் அகரக்கோட்டாலம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் நீர்நிலைகளை ஆக்கிர மிப்பு செய்யாமல் தடுக்கும் வகையில் ரூ.5.67 லட்சம் மதிப்பீட்டில் நீர்வழி ஓடை புறம்போக்கு நிலத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் புதிய குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.தொடர்ந்து அரிய பெருமானூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சங்கன் பாண்ட் அமைக்கும் பணி, பணியாளர்களின் வருகை பதிவேடு, பணி பதிவேடுகளை ஆய்வு செய்தார். 

    அப்போது பணியா ளர்கள் பணிக்கு வராமல் பணிக்கு வந்ததாக வருகை பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய கூடாது எனவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பணிதள பொறுப்பாளர் மற்றும் அதிகாரிகளிம் அறிவுறுத்தினார். இதேபோல் அகர க்கோட்டாலம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ப்பட்டுள்ள தடுப்பணையும், ரூ.9.97 லட்சம் மதிப்பிலான பொதுக்கிணறு வெட்டும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாக, விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு சேர்மன் அலமேலு ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ரங்கராஜன், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள்கலந்து கொண்டனர்.

    • மயிலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு நடைபெற்றது.
    • ஆய்வு செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    விழுப்புரம்:

    மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

    இதில்ஒன்றிய குழுபெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். துணை தலைவர் புனிதா ராமஜெயம் முன்னிலை வகித்தார் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி வரவேற்றார். கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டபணிகள், பொது நிதி, 15-வது மானிய நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் செயல்படுத்தும் பணிகள், தூய்மை பாரத இயக்கத்தில் நடைபெற்று வரும் பணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சேதுநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், மத்திய ஒன்றிய செயலாளர் செழியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தேனி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், உயர் அதிகாரிகளுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக அதிகாரிகளை அழைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருவது பற்றி ஆய்வு செய்து வருகிறார்.

    சென்னை தலைமை செயலகத்தில் இன்றும் அந்த ஆய்வு கூட்டம் நடந்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த கூட்டத்தில் தேனி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிந்தார்.

    குறிப்பாக பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள், குடிநீர் திட்டப் பணிகள், குடிமராமத்து திட்டப் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் சரியான முறையிலும், விரைவாகவும் சென்று அடைகின்றதா என்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மரியம் பல்லவி பல்தேவ், மற்றும் கண்காணிப்பு அலுவலர் கார்த்திக், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் மலர்விழி, மற்றும் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் ராதா கிருஷ்ணன், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன், மற்றும் கண்காணிப்பு அலுவலர் டேவிதார், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, மற்றும் கண்காணிப்பு அலுவலர் தீரஜ் குமார் ஆகியோரை ஆய்வு செய்தார்.

    இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கே.பி.அன்பழகன், சரோஜா, காமராஜ், துரைக்கண்ணு, ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில், சேவூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், கூடுதல் தலைமைச் செயலாளர் சத்ய கோபால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, நில நிர்வாக ஆணையர் ஜெயக்கொடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பாஸ்கரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர் பழனி சாமி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் மதுமதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #TNCM #Edappadipalaniswami
    ×