search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி திட்டப் பணிகள்"

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 36-வது வார்டுக் குட்பட்ட செந்தூரான் நகரில் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி,

    நாகர்கோவில், நவ.22-

    நாகர்கோவில் மாநக ராட்சி 17-வது வார்டுக் குட்பட்ட நெசவாளர் காலனி குறுக்கு தெருக்களில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் பழுதுபட்டுள்ள அலங்கார தரைகற்கள் மறுசீரமைக்கும் பணி,

    46-வது வார்டுக்குட்பட்ட வடக்கு சூரங்குடி, வி.ஐ.பி. கார்டன் மெயின் ரோட்டில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி. 36-வது வார்டுக் குட்பட்ட செந்தூரான் நகரில் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி,

    28-வது வார்டுக்குட்பட்ட சவேரியார் கோவில் பின்பு றம் உள்ள தெருக்களில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    மாமன்ற உறுப்பினர்கள் கவுசிகி, வீரசூரபெருமாள், ரமேஷ், அனந்த லெட்சுமி, மாநகர துணைச்செயலாளர் ராஜன், பகுதி செயலாளர் சேக் மீரான், ஜீவா, துரை, அணிகளின் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சரவணன், பீட்டர் வட்டச் செயலாளர்கள் பிரபாகரன், பெரி, முருகன், முத்து கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 35-வது வார்டுக்குட்பட்ட வள்ளளார் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம்

    நாகர்கோவில், நவ. 8-

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் ரூ. 1.20 கோடி மதிப்பிட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டுதல், 35-வது வார்டுக்குட்பட்ட வள்ளளார் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி போன்றவை இன்று நடைபெற்றன.

    இதேபோல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கேன்டீன் அமைக்கும் பணி யும் இன்று நடைபெற்றது. இந்த பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர நல அலுவலர் ராம் குமார், மண்டல தலை வர் அகஸ்டினா கோகில வாணி, ஜவகர், செல்வ குமார், மாமன்ற உறுப்பி னர்கள் ராணி, அனந்த லெட்சுமி கலாராணி, பகுதி செயலாளர் சேக் மீரான், துரை, அணிகளின் நிர்வாகிகள் ராஜன், வட்டச் செயலாளர்கள் ராம கிருஷ்ணன், முத்து கிருஷ்ணன், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    இரணியல் :

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா பொறுப் பேற்றது முதல் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் மூலம் பெற்று தந்து வருகிறார். சமீபத்தில் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி களில் சாலை, குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தற்போது திங்கள்நகர் பேரூராட்சியில் ரூ. 2 கோடியே 14 லட்சத்து 82 ஆயிரம், கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் ரூ. 1 கோடியே 3 லட்சத்திற்கும், ரீத்தாபுரம் பேரூராட்சியில் ரூ. 93.7 லட்சம், நெய்யூர் பேரூராட்சியில் ரூ. 2 கோடியே 11 லட்சம் என மொத்தம் ரூ. 6 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்கான சாலை, குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த பணிகளின் தொடக்க விழா அந்தந்த பேரூராட்சி பகுதிகளில் நடந்தது. குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும் மேயருமான மகேஷ், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர்கள் திங்கள்நகர் சேவியர் ஏசு தாஸ், கல்லுக்கூட்டம் ரஜூ லின் ராஜகுமார், ரீத்தாபுரம் சுஜெய் ஜாக்ஸன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், குளச்சல் நகர செயலாளர் நாகூர்கான், குளச்சல் நகர் மன்ற தலைவர் நசீர், பேரூராட்சி மன்ற தலைவர்கள் சுமன், மனோகரசிங், பிரதீபா, காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினர் லாரன்ஸ், குளச்சல் சபீன், ஜெயசகிலா மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், செயல் அலுவலர்கள் கழக நிர்வாகி கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளி வகுப்பறை கட்டிடம் உள்பட 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
    • இத்திட்டப்பணிகளை குறித்து நேரில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பள்ளி வகுப்பறை கட்டிடம் உள்பட 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், சாலியமங்களம் ஊராட்சிமன்ற தலைவர் சக்திசிவக்குமார், துணைதலைவர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு, ஒப்பந்ததாரர் சண்.சரவணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • குன்னம் சட்டமன்ற தொகுதியில் ரூ.13.40 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது
    • வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்,


    குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ. 13 கோடி 40 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். காரை கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க தொல்லுயிர் புதைபடிமங்களை பாதுகாக்கும் வகையில், தொல்லுயிர் புதை படிமங்கள் பூங்காவைச் சுற்றி ரூ. 7 கோடியே 89 லட்சம் செலவில் முள்வேலி அமைத்தல், அருங்காட்சியகம், பாதுகாவலர் அறை, கண்காணிப்பு கோபுரம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவை கட்டும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் மூலம், நாரணமங்கலம் முதல் சிறுகன்பூர் வரை ரூ.1கோடியே 51 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியையும், மருதையான் கோவில் முதல் கீழமாத்தூர் வரை ரூ.76 லட்சத்து 15 ஆயிரம் செலவிலும், கொளத்துார் முதல் அருணகிரிமங்கலம் வரை ரூ.1 கோடியே 61 லட்சம் செலவிலும், மேலமாத்தூர் முதல் இலந்தங்குழி வரை ரூ.1 கோடி 62 லட்சம் செலவிலும், மொத்தம் ரூ.5 கோடி50 லட்சம் செவில சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் செய்தியாளிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் புதை படிம பூங்கா அமைக்கப்படும் அறிவித்ததன் பேரில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரை கிராமத்தில் தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவை சுற்றி முள்வேலி அமைத்தல் மற்றும் அருங்காட்சியகம், பாதுகாவலர் அறை, கண்காணிப்பு கோபுரம், மேல்நிலைத் தொட்டி கட்டுதல் பணி உள்ளிட்ட பணிகள் ரூ.7.89 கோடியில் ெதாடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த அருங்காட்சியகம் 436 சதுர மீட்டர் பரப்பளவிலும், பாதுகாவலர் அறை மற்றும் கண்காணிப்பு கோபுரம் 269 சதுர மீட்டர் பரப்பளவிலும், பாதுகாப்பு முள் வேலி 16 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலும் அமைக்கப்பட உள்ளது. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக கடல் கொண்ட பூமியாக இருந்த பெரம்பலூர் மாவட்டம் தற்போது தொல்லுயிர் எச்சங்களின் பெரிய நிலப்பரப்பாக திகழ்கிறது. தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகள் புவியியல் ரீதியாக இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இந்த பணி பெரிய முன்னெடுப்பாக அமையும்.

    அருகிலுள்ள சாத்தனூர் கல்மரப் பூங்கா தற்போது சுற்றுலா தளமாக மாறி வருவதை போல எதிர்காலத்தில் இந்த காரை தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவும் சுற்றுலா தளமாக அமையும். எதிர்காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது உலகளவிலிருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு ஆய்வு செய்யும் வகையில் பயன்படுவதோடு சுற்றுலா தலமாகவும் மேம்படுத்தப்படும் என்றார். நிகழ்ச்சியில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குநர், துணை இயக்குநர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திட்ட அறிக்கை தயார் செய்ய அறிவுரை
    • பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார்.

    காவேரிப்பாக்கம் பேரூராட்சி பஸ் நிலையம் அருகில் கலைஞர் நகரில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சமுதாய கழிப்பிடம் மறுசீரமைத்தல் பணியினை ஆய்வு செய்த அவர் வருகிற 20-ந் தேதிக்குள் பணியினை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்.

    திருப்பாற்கடல் மயானத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தில் ரூ.1.31 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்டுவரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டும்பணியினை பார்வையிட்ட அவர் பணிகளை வரும் 31-ந் தேதிக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கூறினார்.

    மேலும் தகன மேடை அருகில் பயோ கேஸ் பிளான்ட் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து பணி மேற்கொள்ள வும் அறிவுறுத்தினார்கள்.

    தொடர்ந்து, காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு மையத்தினை ஆய்வு செய்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரித்தல் மற்றும் உரம் தயாரித்தல் பணி போன்ற திடக்கழிவு மேலாண்மை பணிகளை பார்வையிட்டார். ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் உடனிருந்தார்.

    • ரூ.6 இலட்சம் செலவில் புதிய நெற்களம் அமைக்கும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • நெற்களத்திற்கு வாகனம் செல்ல சாலை அமைத்துத்தர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடியில் ரூ.54.36 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட ஆலங்குடி கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.67 லட்சம் செலவில் கங்காரு தேங்காய் விதைப்பண்ணை நிலையத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 இலட்சம் செலவில் புதிய நெற்களம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக நெற்களத்திற்கு வாகனம் செல்ல சாலை அமைத்துத்தர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.33 லட்சம் செலவில் பள்ளி உட் கட்டமைப்பு செய்யும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.84 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் செலவில் வீடு கட்டப்பட்டு வரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், துரிதமாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரமேஷ்குமார், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன் சுமதி, ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர்கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப் படும் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இச்சிப் பாளையம் ஊராட்சி தாமரைப் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்து மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளத்துப்பாயைம்;, இச்சிப்பாயைம், வள்ளிபுரம், அஞ்சூர் மற்றும் கொந்தளம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் இன்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, கலெக்டர் கொளத்துப் பாயைம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4.03 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும், அதே ஊராட்சி பகுதியில் பாரத பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் கட்டப்பட்டு வரும் 3 வீடுகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.0.82 லட்சம் மதிப்பீட்டில் கொளத்துப் பாளைம் நூலகம் சீரமைப்பு பணியினை பார்வையிட்டு புத்தகம் வைத்திருக்கும் இடத்தினை தூய்மையாக வைத்திருக்கவும், போதுமான புத்தகங்கள் இருப்பது குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் அப்பகுதியில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப் படும் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து இச்சிப் பாளையம் ஊராட்சி தாமரைப் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் குறித்து மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    மேலும் சமூக மாற்றம் என்பது மாணவர்களாகிய உங்களிடம் இருந்து தொடங்க வேண்டும், மாணவர்களால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். சுகாதாரம் என்பது நம் வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும்.

    குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளார்களிடம் வழங்க முன்வரவேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து இச்சிப் பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கருத்திப்பாளையம் முதல் தாமரைப்பாளையம் வரை ரூ.36.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலையினை பார்வை–யிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் அஞ்சூர் ஊராட்சி, காரவலசு, அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.5.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையலறை கூடத்தினை ஆய்வு செய்து, காலியாக உள்ள இடத்தில் சிறு தோட்டம் அமைக்க ஆசிரியர்களுக்கு உத்தர–விட்டார்.

    மேலும் அதே பகுதியில் சொரியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தனது விளைநிலத்தில் இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி செய்து குர்குமின் வேதிப்பொருள் தன்மை மாறாமல் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்து வருவதை பார்வையிட்டார்.

    தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வரும் இச்சிப்பாளையம் நியாய விலைக்கடையினை ஆய்வு செய்து பதிவேடுகள், எடை இயந்திரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

    மேலும் அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருவது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 3 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 3 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும் என ரூ.89.67 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், பணிகளை உரிய காலத்தில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    முன்னதாக கொந்தளம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 0.82.0 எக்டர் பரப்பளவில் விவசாயி முருகேசன் அமைத்துள்ள நுண்ணீர் பாசன கருவிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விவசாயிடம் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முன் நீர்ப்பாசனம் மற்றும் சாகுபடி விவரங்கள், சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பின் நீர்ப்பாசனம் குறித்து கேட்டறிந்தார். இது 100 சதவீத மானியத்தில் அமைக்கப்பட்ட ரூ.1,21,091 மதிப்பீட்டில் அமைக்க–ப்பட்டது எனவும் வேலையாட்கள் மற்றும் நேரம் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து வள்ளிபுரம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 2021-22-ம் ஆண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் 0.25 எக்டர் பரப்பளவில் விவசாயி கவின்குமார் என்பவர் தனது நிலத்தில் நிரந்திர காய்கறிப் பந்தல் அமைக்க ப்பட்டுள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    0.25 எக்டர் பரப்பளவில் கல்தூண்கள் நட்டு கம்பிகள் இழுத்து கட்டி பந்தல் அமைக்க ரூ.1,91,300 செலவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.50,000 மானியம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் தனது வயலில் பீர்க்கன் சாகுபடி செய்துள்ளார். 0.25 எக்டர் சாகுபடி செய்ததற்கு சாகுபடி செலவு சுமார் ரூ.30,000 செலவாகும் என்றும் நிகர லாபமாக ரூ.60,000 கிடைக்கும் எனவும் கலெக்டரிடம் தெரிவித்தார்.

    மேலும் அங்கக வேளாண்மை முறையில் பீர்க்கன் சாகுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிதிட்டத்தின கீழ் 50 சதவீத மானியத்தின் கீழ் ரூ.2000 மானியத்தில் மருந்தடிக்கும் கருவியினை 1 விவசாயிக்கும், ரூ.722.50 மானியத்தில் தார்ப்பாயினை 1 விவசாயிக்கும் வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது கொடுமுடி வருவாய் வட்டாட்சியர் மாசிலாமணி, வேளாண் உதவி இயக்குநர் பி.யசோதா, உதவி இயக்குநர் (தோட்டக்க லைத்துறை) தியாகராஜன், கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, பத்மனாபன் (கி.ஊ), மண்டல துணை தாசில்தார் பரமசிவம், வட்ட வழங்கல் அலுவலர் கலைச்செல்வி உள்பட அலு வலர்கள் பலர் உடனிருந்தனர்.

    ×