search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
    X

    கள்ளக்குறிச்சி அருகே அரியபெருமானூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி அருகே வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

    • கள்ளக்குறிச்சி அருகே வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பணியாளர்களின் வருகை பதிவேடு, பணி பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர், அரியபெருமானூர் மற்றும் அகரக்கோட்டாலம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் நீர்நிலைகளை ஆக்கிர மிப்பு செய்யாமல் தடுக்கும் வகையில் ரூ.5.67 லட்சம் மதிப்பீட்டில் நீர்வழி ஓடை புறம்போக்கு நிலத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் புதிய குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.தொடர்ந்து அரிய பெருமானூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சங்கன் பாண்ட் அமைக்கும் பணி, பணியாளர்களின் வருகை பதிவேடு, பணி பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    அப்போது பணியா ளர்கள் பணிக்கு வராமல் பணிக்கு வந்ததாக வருகை பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய கூடாது எனவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பணிதள பொறுப்பாளர் மற்றும் அதிகாரிகளிம் அறிவுறுத்தினார். இதேபோல் அகர க்கோட்டாலம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ப்பட்டுள்ள தடுப்பணையும், ரூ.9.97 லட்சம் மதிப்பிலான பொதுக்கிணறு வெட்டும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாக, விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு சேர்மன் அலமேலு ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ரங்கராஜன், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள்கலந்து கொண்டனர்.

    Next Story
    ×