search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "development project works"

    • தேவகோட்டை யூனியனில் ரூ.16.99 கோடியில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
    • இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அந்த ஊராட்சி ஒன்றி யங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆண்டாய்வு மேற்கொள்ளும் வகையில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஆய்வு செய்தார்.

    அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு களையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு துறைவாரியாக பொது மக்களுக்கு வழங்கப் பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக் கப்பட்டு வரும் கோப்புகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஊராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும், நிதிநிலை மற்றும் அலுவல கங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டி டங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தேவகோட்டை யூனியன் சார்பில் 2022-23-ம் நிதியாண்டில் ரூ.16.99 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மொத்தம் 496 வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாக, பகுதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்து இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சாந்தி, தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி, விஜயகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • உடுமலைப்பேட்டை நகராட்சியில் குடிநீர் பொதுமக்களுக்கு தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளது.
    • எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும்இந்த ஆய்வுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், கலெக்டர் வினீத் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    உடுமலைப்பேட்டை நகராட்சியில் குடிநீர் பொதுமக்களுக்கு தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மேல்நிலைத்தொட்டி அமைக்க அரசுக்குபரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை நகராட்சி நிர்வாகம் மூலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமூர்த்தி அணையிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும்இந்த ஆய்வுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

    2022-2023 ம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செய்துமுடித்தால் தான் அடுத்த பணிகளை செய்து முடிக்க வாய்ப்புகளாக அமையும்.

    உடுமலைப்பேட்டை நகராட்சியின் சார்பாக வடிகால் அமைக்கும் பணிகளை காலதாமதம் ஏற்படாமல் விரைந்து முடிக்கவும், மேலும், மின்சார வாரியத்தின் சார்பில்பழுதடைந்த மின்கம்பிகளை எல்லாம் மாற்றியமைக்கவும், நெடுஞ்சாலைத் துறையின்சார்பில் பழுதடைந்த சாலைகளை எல்லாம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கோடை காலமாக இருப்பதால் ஏற்கனவே வழங்கப்படுகின்ற குடிநீரினை எந்தவித தடைகளும் இன்றி பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் . மேலும் வருகின்ற மானிய கோரிக்கையில் நிதிநிலையறிக்கை சமர்பித்தவுடன்தமிழ்நாடு முதலமைச்சர் நமது மாவட்டத்திற்கு வருகை புரிந்து நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். அதற்குள் நமது மாவட்டத்தில் முடிக்க வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க அனைத்து துறை அலுவலர்களையும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளையும்கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர்இல.பத்மநாபன், உடுமலைப்பேட்டை நகராட்சி தலைவர் மு.மத்தின், மண்டலஇணை இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்) வி.ராஜன், உடுமலைப்பேட்டை நகராட்சிஆணையாளர் சத்யநாதன், மண்டலப்பொறியாளர் பாலச்சந்திரன், முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும்அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • மன்னார்குடியில் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • நரிக்குறவர் காலனியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வசித்துவரும் மக்களிடம் கலெக்டர் கலந்துரையாடினார்.

    திருவாரூர்:

    மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட ஜெயினத்தெரு தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டுவருவதை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட மன்னை நகர் பகுதியில் வசித்துவரும் நரிக்குறவர் காலனியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வசித்துவரும் மக்களிடம் கலந்துரையாடினார்.

    மேலும் தாமரைக்குளத்தில் உட்புற சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெறுவதையும், ருக்மணி குளத்தில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டும் பணியினையும், மேலநாகை பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தாசில்தார் ஜீவானந்தம், மன்னார்குடி நகராட்சி தலைவர்.மன்னை சோழராஜன், நகராட்சி துணைத் தலைவர் கைலாசம், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர்.குணசேகரன், ஆகியோர் இருந்தனர்.

    • கலெக்டர் ஆய்வு
    • பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஜவ்வாதுமலையில் உள்ள புங்கம்பட்டுநாடு ஊராட்சி கொல்லகொட்டாய் மலை கிரா மத்தில் மண்வரப்பு அமைத்தல், கம்புகுடி கிராமத்தில் தனிந பர் திறந்துவெளி கிணறு, அங்கன்வாடி மையம், கொல்ல கொட்டாய்கிராமத்தில் பசுமை வீடு, அரசுமரத்துக்கொல்லை உண்டு உறைவிடப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு, பெரும்பள்ளி கிராமத்தில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், புங்கம் பட்டு நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதூர் நாடு ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பணிகள் ரூ.82 லட்சத்து 68 ஆயிரத்தில் நடைபெறுகிறது. இந்த பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண் டியன் ஆய்வு செய்தார்.

    அப்போது நிலுவையில் உள்ள அனைத்து கட்டுமான பணிகளையும் விரைந்து முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    புதூர் நாடு அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ- மாணவிகளின் கற்றல் திறனை கலெக்டர் ஆய்வு செய்து, நன்றாக படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட பழங் குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி, தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர். மணவாளன், உதவி பொறியாளர்கள் சுதாகர், முருகேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • ரூ.6 இலட்சம் செலவில் புதிய நெற்களம் அமைக்கும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • நெற்களத்திற்கு வாகனம் செல்ல சாலை அமைத்துத்தர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடியில் ரூ.54.36 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட ஆலங்குடி கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.67 லட்சம் செலவில் கங்காரு தேங்காய் விதைப்பண்ணை நிலையத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 இலட்சம் செலவில் புதிய நெற்களம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக நெற்களத்திற்கு வாகனம் செல்ல சாலை அமைத்துத்தர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.33 லட்சம் செலவில் பள்ளி உட் கட்டமைப்பு செய்யும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.84 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் செலவில் வீடு கட்டப்பட்டு வரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், துரிதமாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரமேஷ்குமார், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன் சுமதி, ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர்கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்க்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்க்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள மற்றும் நடைபெறப் போகும் வளர்ச்சி பணிகள் குறித்தும், புதிய வடிகால் வசதிகள், மற்றும் புதிய சாலைகள் அமையப் போகும் பகுதிகள் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, மேற்கு மண்டல தலைவர் அன்ன லெட்சுமி கோட்டு ராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், இசக்கிராஜா, பொன்னப்பன்,ராமர், கண்ணன், ஜான் சீனிவாசன், கந்தசாமி, விஜயலெட்சுமி துரை, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ரவீந்திரன், ஆனந்தராஜ், நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோச னைகள் மேற்கொண்டார்.

    தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய அளவிலான மின் கோபுர விளக்குகள் அமைத்துள்ளேன். தற்பொழுது தனியார் பங்களிப்புடன் மேலும் 30-க்கு மேற்பட்ட இடங்களில் இது போன்ற புதிய விளக்குகள் அமையப் பெறுகின்றது.

    அதற்கான பணிகளையும், வி.வி.டி.சிக்னலின் எதிர்புறம் உள்ள நாம் தமிழர் வளாகம் பின்புறம் பணிகள் ஆரம்பமாகும் என்று கூறினார்.

    பின்னர் தூத்துக்குடியில் நடைபெறும் புதிய வடிகால் பணிகள் மற்றும் 21வது வார்டுக்குட்பட்ட கோயிலில் இருந்து நீர் வெளியேற வசதியாக பைப் அமைத்து தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை

    குறித்தும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே இருந்த கழிப்பறையானது தூர்ந்து போய் இருப்பதாக வந்த தகவலையடுத்து புதிய கழிப்பறை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதும் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டார்.

    • புகளூர் நகராட்சி பகுதிகளில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்தது.
    • அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    கரூர்:

    கரூர் மாவட்டம் புகளூர் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் 15-வது நிதி குழு மானியத்தில் கடைவீதி பேருந்து நிறுத்தம் வரை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைத்தல் பணி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23 மற்றும் அம்ருத்ரன் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் செம்படாபாளையம் பகுதியில் புதிதாக பூங்கா அமைத்தல் பணி மற்றும் அதே திட்டத்தின் கீழ் ராம்நகர் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிதாக பூங்கா அமைத்தல் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவிற்கு புகளூர் நகரக் கழகச்செயலாளரும், நகராட்சி தலைவருமான நொய்யல் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் கனிராஜ், துணைத் தலைவர் பிரதாபன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு மேற்கண்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • பணியாளர்களுக்கு தேவராஜி எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளர்களுடன் தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், மாவட்ட கவுன்சிலர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜா ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தேவராஜி கலந்து கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர், துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் எடுக்கப்பட்ட பணிகள் கள ஆய்வுக்கும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்கவும் அலுவலக பணியாளர்களுடன் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    தமிழக முதல்வர் அறிவிக்கும் அரசின் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும், குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கலந்தாலோசிக்கப்பட்டது. 

    • கள்ளிமந்தையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.175.35 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் விழா நடைபெற்றது.
    • விழாவில் அமைச்சர் அர. சக்கரபாணி தலைமை வகித்து பூமி பூஜையில் கலந்து கொண்டு பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளிமந்தையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.175.35 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம், தேவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தில் ரூ 99.45 மதிப்பிலான கூடுதல் கட்டிடம், மேலும் தேவத்தூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கட்டிடத்திற்கு ரூ. 18 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் அர. சக்கரபாணி தலைமை வகித்து பூமி பூஜையில் கலந்து கொண்டு பின்னர் பேசியதாவது, ஒட்டன்சத்திரம் தாலுகா அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய 4 மாடி அளவில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கொ.கீரனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய மருத்துவப் பணியாளர் குடியிருப்பு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடும் வகையில் மக்களை தேடி மருத்துவம் தொடங்கப்பட்டு சர்க்கரை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம் உள்பட பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்-அைமச்சர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் பழனி துணை இயக்குனர் (சுகாதாரம்) அனிதா, மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் பொன்ராஜ், வடக்கு செயலாளர் ஜோதீஸ்வரன், கிழக்கு ஒன்றிய அய்யம்மாள், ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் தங்கம், காயத்ரி தேவி தர்மராஜன், அரசு அலுவலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராதாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள இடிந்தகரை மற்றும் கூத்தன்குழி ஆகிய பஞ்சாயத்துகளில் சுமார் ரூ.65 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
    • பல்வேறு நிதிகளின் கீழ் இடிந்தகரையில் சிமெண்ட் சாலை, மீன் வலை கூடம், மீன் விற்பனை நிலையம், அங்கன்வாடி மையம், விஜயாபதி பஞ்சாயத்து குறிஞ்சிகுளத்தில் பேருந்து நிறுத்தத்திற்கும், கூத்தன்குழியில் வண்ண கற்கள் பதிக்கும் பணிக்கும், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள இடிந்தகரை மற்றும் கூத்தன்குழி ஆகிய பஞ்சாயத்துகளில் சுமார் ரூ.65 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    பல்வேறு நிதிகளின் கீழ் இடிந்தகரையில் சிமெண்ட் சாலை, மீன் வலை கூடம், மீன் விற்பனை நிலையம், அங்கன்வாடி மையம், விஜயாபதி பஞ்சாயத்து குறிஞ்சிகுளத்தில் பேருந்து நிறுத்தத்திற்கும், கூத்தன்குழியில் வண்ண கற்கள் பதிக்கும் பணிக்கும், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜா, மவுலின், படையப்பா முருகன், இசக்கி பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் சகாயராஜ், வளர்மதி, முருகேசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சூசை அந்தோணி, மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ், சரவணகுமார், சந்தியாகு, ராஜேஷ், வளன், பாப்டிஸ், ரீகன், யேசுதாஸ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், சங்கர், எழில் ஜோசப், குமார், காமில், முத்தையா, டென்னிஸ், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காவிரி நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பில் பூங்கா, நடராஜா நகரில் 2 பூங்காக்கள் 58.60 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • நடராஜர் நகர் பகுதியில் வசிக்கின்ற மக்களை நேரில் சந்தித்து,அவர்களின் வாழ்வாதாரம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் முசிறி நகர் பகுதியில் நடைபெறும் அரசு நலத்திட்டத்தின் மூலம் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காவிரி நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பில் பூங்கா, நடராஜா நகரில் 2 பூங்காக்கள் 58.60 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டும், நடராஜர் நகர் பகுதியில் வசிக்கின்ற மக்களை நேரில் சந்தித்து,அவர்களின் வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதியில் ஆய்வு செய்து, உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    தினமும் காலை , மாலை, இரவு ஆகிய நேரங்களில் எவ்விதமான உணவு வழங்கப்படுகிறது என கேட்டறிந்தார். விடுதியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். தாப்பேட்டை சாலையில் ரூ 1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் நூலக கட்டிடப் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். பின்னர் 3. 50 கோடி மதிப்பீட்டில் நீதிமன்றம் அருகில் அமைய உள்ள நகர் மன்ற அலுவலக இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன், நகர மன்ற தலைவர் கலைச்செல்வி சிவகுமார், நகர் மன்ற உறுப்பினர் பாலகுமார், கோட்டாட்சியர் மாதவன், வட்டாட்சியர் சண்முகப்பிரியா, நகராட்சி ஆணையர் மனோகரன், திமுக நகரச் செயலாளர் சிவக்குமார் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சந்திரசேகரன், ராஜ்மோகன், சுகாதார ஆய்வாளர் மலையப்பன் மேற்பார்வையாளர் சையது மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • காய்ச்சல் தடுப்பு முகாமினையும் கலெக்டர் மேகநாதரெட்டி பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம், வடமலாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.65 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய கிணறு அமைக்கப்பட்டு வரும் பணியினையும், தூய்மை பாரத இயக்கம் மூலம் ரூ.1.45 லட்சம் மதிப்பில் கிடைமட்ட உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.3.75 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள வீட்டினையும், செங்க மலப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.21 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள நூலகத்தினையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் சத்துண வுக்கூடம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ரூ.23.57 லட்சம் மதிப்பில் நாரணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வரும் பணிகளையும், சித்துராஜபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.24.85 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் புதுக்குளம் கண்மாய் பணிகளையும், க.க.ச. மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை சார்பில் நடைபெற்று வரும் காய்ச்சல் தடுப்பு முகாமினையும் கலெக்டர் மேகநாதரெட்டி பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது சார் ஆட்சியர் (சிவகாசி) பிரித்விராஜ், உதவி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், வட்டா ட்சியர் லோகனாதன், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சீனிவாசன், ராம மூர்த்தி மற்றும் அரசு அலு வலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

    ×