search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ. 1.60 கோடியில் வளர்ச்சி பணிகள்
    X

    கட்டுமான பணிகளை ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ரூ. 1.60 கோடியில் வளர்ச்சி பணிகள்

    • திருமங்கலம் தொகுதியில் ரூ. 1.60 கோடியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேடப்பட்டி, ஆலம்பட்டி பகுதியில் சாலையின் குறுக்கே பாலம், கிழவனேரி பகுதியில் சாலையின் குறுக்கே பாலம் என ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகளை முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திரளி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கட்டிடம் மற்றும் பாலம் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது

    இதனை எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிழவனேரி கிராமத்தில் முன்னாள் கிளைச்செயலாளர் அழகர்சாமி உடல்நலம் குறித்து விசாரித்தார். கிழவனேரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி, மீனவரணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் உச்சபட்டி செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், பேரவை நகரச் செயலாளர் பாண்டி, சிவரக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் ஆதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிழவனேரி கிராமத்தில் முன்னாள் கிளைச்செயலாளர் அழகர்சாமி உடல்நலம் குறித்து விசாரித்தார். கிழவனேரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி, மீனவரணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் உச்சபட்டி செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், பேரவை நகரச் செயலாளர் பாண்டி, சிவரக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் ஆதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×