search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலம் ஒன்றியத்தில்   வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்  -   அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு
    X

    மயிலம் ஒன்றியத்தில்வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

    மயிலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு

    • மயிலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு நடைபெற்றது.
    • ஆய்வு செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    விழுப்புரம்:

    மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

    இதில்ஒன்றிய குழுபெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். துணை தலைவர் புனிதா ராமஜெயம் முன்னிலை வகித்தார் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி வரவேற்றார். கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டபணிகள், பொது நிதி, 15-வது மானிய நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் செயல்படுத்தும் பணிகள், தூய்மை பாரத இயக்கத்தில் நடைபெற்று வரும் பணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சேதுநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், மத்திய ஒன்றிய செயலாளர் செழியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×